Sunday, May 10, 2015

இந்தக் கவிதைக்கு வயது ஒன்று

போகிற பாதையோரம்
தட்டுப் பட்டது
கூராயிருந்ததால்
பிரச்சினையெழவில்லை
அதை
சாமி என்றேற்பதில்
நீண்ட தேடலில்
சாமி ஏதுமற்ற குளக்கரை மரமொன்று கிடைக்க
பிரச்சினையில்லை
கழுவி நடுவதிலும்
”யார் வேணாலும் ஒன்னு மண்ணாப் பொழங்க
சாராயக் கடையா?
சாமி இடம்
சுத்த பத்தம் வேணும்”
“சுத்தி வளைக்காத
நாங்க கும்பிடக்கூடாது
அதானே?”
அவனுக்கு ரெண்டு இவனுக்கு ரெண்டென
அணிபிரிய
எவனோ ஒருவன்
எட்டி உதைத்ததில்
சாமியாகவேண்டியதை கல்லாக்கிப்
போயிருந்தது
சாதி

2 comments:

  1. என்றுமே (சா'தீ') மாறாது என்பதால் வயது ஒன்றா...? அருமை...

    ReplyDelete
    Replies
    1. அப்படி இல்லீங்க தனபால். இந்தக் கவிதையை எழுதி ஓராண்டு ஆகியிருக்கிறது

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...