“ வேணாண்டா
வெள்ள மாத்திர
அடக்
கண்டதுக்கெல்லாம்
முழுங்கி முழுங்கி
தொண்டையும் புண்ணா போச்சுதே
அட
வேணாண்டா
வெள்ள மாத்திர”
முன்பெல்லாம் த மு எ ச கலை இரவு மேடைகளில் தவறாமல் ஒலிக்கும் பாடல் இது.
தொடங்கியதுமே ஜனத்திரள் வெடித்துச் சிரித்து கைதட்டி ஆர்ப்பரிக்கும். எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காது சுவைத்த பாடல் அது. அந்தப் பாடல் அவ்வளவு தூரம் ஜனங்களிடம் போய் சேர்ந்தமைக்கு அன்றைய தினத்தில் அரசாங்க மருத்துவ மனைகளில் வழங்கப்பட்ட “த.அ” வெள்ளை மாத்திரைகளே காரணம்.
தலை வலின்னு போனாலும், வவுத்து வலின்னு போனாலும், குளிர் காச்சல்னு போனாலும் அதே வெள்ளை மாத்திரையையே மாற்றாமல் கொடுக்கிறார்களே என்று மக்களிடம் இருந்த அயர்வு கலந்த சலிப்பே அந்தப் பாடலின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
“த” னா “ அ “னா என்னா தெரியுமா? தானா ஆனாதான் உண்டு. இந்த மாத்திரையால ஒன்னும் ஆகாது என்று அர்த்தம் என்று அப்போதைய கலை இரவு பேச்சாளர்களில் பெரும்பான்மையோர் பலத்து வெடிக்கும் ஆரவார்த்திற்கு இடையில் பேசுவது வழக்கம். நானும் ஒரு இருபது கலை இரவு மேடைகளிலாவது இதை பேசியிருப்பேன்தான்.
அந்த அளவுக்கேனும், “ த” னா “அ” னா மாத்திரைகளோடேனும் இன்றைக்கு இருக்கிற அளவில் அரசு மருத்துவ மனைகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா? என்பதற்கு சன்னமான அளவிற்கேனும் நம்பிக்கை தரக்கூடிய பதில் தட்டுப்பட மறுக்கிறது.`
அரசு மருத்துவ மனைகளின் அவசியம் குறித்து ஆக சமீபத்தில் உணர ஒரு வாய்ப்பு கிட்டியது.
“உங்க அப்பா செத்துக்கிட்டு இருக்கார், சார். நேரம் கடத்திப் பயனில்லை. இன்னும் பத்து நிமிடங்களுக்குள் அவரை தியேட்டருக்குள் கொண்டு போக வேண்டும்”
என்று மருத்துவர் சொன்னபோது கேட்டேன்,
“எவ்வளவு சார் ஆகும்”
அவர் சொன்ன மாத்திரத்தில்,
“சரிங்க சார், அழைத்து செல்லுங்கள்”
அழைத்துச் சென்றார்கள். ஒரு மணி நேரத்திற்கெல்லாம், செத்துக் கொண்டிருந்த என் தந்தையை உயிரோடு எங்களிடம் எங்களிடம் ஒப்படைத்தார்கள்.
என்ன,
மூன்று வட்டிக்கு ஒரு ஐம்பது , இரண்டு வட்டிக்கு ஒரு லட்சம், கைவசம் இருந்த ஐம்பது போக நண்பர்கள் கைமாற்றாய் கொடுத்த நாற்பது எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
ஆக கையில் இல்லாவிட்டாலும் புரட்ட முடிந்தது என்பதால் அப்பா இன்று எங்களோடு இருக்கிறார். புரட்ட முடியாது போயிருப்பின் அப்பா படமாகி ஐந்து மாதங்களாகியிருக்கும்.
அதற்கு அடுத்த நாள் தம்பி விஷ்ணுபுரம் சரவணனோடு பேசிக் கொண்டிருந்தேன்,
“எல்லா அப்பாவும் அப்பாயில்லையா சரவணன்?”
“ அப்பான்னா அப்பாதான். ஏண்ணே?”
“ஒருக்கால் புரட்ட முடியாதவனோட அப்பான்னா செத்துட வேண்டியதுதானா, சரவணன்?”
“வேற வழி, சாக சாகப் பார்த்துக் கொண்டுதானே இருந்தோம்”
உடைந்தார்.
அவரது தந்தைக்கும் அப்பாவிற்குன் வந்ததுபோல் ஏதோ ஒரு நோய் வர புறட்டவும் முடியாது போகவே வேறு வழியேயின்றி ஏதோ அவரை திருப்தி படுத்துவதற்காக மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து அவர் பையப் பைய மரணிப்பதை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
உடைந்தேன்.
முடியாத எல்லா அப்பாக்களும் எல்லா அம்மாக்களும் காப்பாற்றப் படவேண்டும் எனில் பொது மருத்துவ மனைகள் பலுகிப் பெருக வேண்டும்.
ஆனால் இருக்கிற மருத்துவ மனைகளைக் காப்பாற்றவே படாத பாடு பட வேண்டியிருக்கிறது. புதுச்சேரி ஜிப்மர் சற்றேரக்குறைய பணம் கட்டி வைத்தியம் பார்க்கும் அரசு மருத்துவ மனையாகிப் போய்விட்டது.
இந்த மருத்துவமனைக்கு தன்னாட்சி அந்தஸ்தை வழங்க முடிவெடுத்த போதிலிருந்தே பிருந்தா காரத் மாநிலங்களவையில் இந்த மருத்துவனையைக் காப்பாற்ற போராடியதையும், மார்க்சிஸ்ட் கட்சியினர் அதற்காக முன்னெடுக்கும் தொடர் போராட்டங்களையும் நன்றியோடு கொள்ளவே வேண்டும்.
இது ஒரு புறமிருக்க “ மருத்துவக் கல்வியின் தரம் கவலை அளிக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாக 01.07.2012 தினமலர் கூறுகிறது.
“சுகாதாரக் குறியீடுகள் மோசமாகவே தொடர்கின்றன” என்றும் அவர் கூறியதாகவும் தினமலர் தொடர்ந்து சொல்கிறது.
“ பிரசவ கால மரணங்களும், சிசு மரணங்களும் தனக்கு மிகுந்த கவலையைத் தருவதாக பிரதமர் கூறியிருக்கிறார்.
இவற்றை காரத்தோ, அத்வானியோ சொன்னால் அதில் ஒரு அர்த்தமுண்டு. பிரதமரே இப்படிப் பேசுவது என்பதுதான் எவ்வளவு முயன்றும் பிடிபட மறுக்கிறது.
சிசு மரணங்கள் குறித்து கவலையைப் பதிவதோடு ஒரு சராசரி குடிமகனே நிறுத்திக் கொள்ளக் கூடாது. போதிய மருத்துவ சிகிச்சையின்றி இறந்து போகும் குழந்தைகளில் எத்தனை பகத்களோ, எத்தனை பாரதிகளோ, எத்தனை அன்னை தெரசாக்களோ?
பிரதமர் இப்படி கவலைப் படுவதோடு தனது கடமையை சுறுக்கிக் கொள்வதை எதிர்த்து மக்கள் திரண்டு போராட வேண்டும்.
அவரது வேதனைகளிலேயே மிகவும் ஆழமான வேதனை இதுதான். அவர் சொல்கிறார்,
“இன்றைக்கும் மருத்துவ செலவுகளுக்காக, மூன்றில் இரண்டு பங்கு தொகையை மக்கள் கடன் வாங்கியே செலவிடுகின்றனர். அதிலும் மருந்துகளுக்காகவே அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது”
மக்கள் கந்து வட்டிக்கு கடன் வாங்கி மருந்து வாங்குவது குறித்து நானோ நீங்களோ கவலைப் படுவதில் பொருளிருக்கிறது. ஆனால் மருந்து வாங்குவதற்காக மக்கள் கடன் வாங்குவதைப் பார்த்து ஒரு பிரதமர் கவலைப் படுவதாகக் கூறுவது கூட ஏழை மக்கள் மீதான அவரது நக்கல் என்றே கொள்ள வேண்டியுள்ளது.
அவர் எதற்கு விசனப் பட வேண்டும்? ஊர் ஊருக்கு மருத்துவ மனைகளைத் திறந்து மருத்துவத்தை ஒரே கை எழுத்தில் பொதுப் படுத்தி ஏழை எளிய மக்களை கடன் வலையிலிருந்து மீட்க சர்வ வல்லமையுள்ள பிரதமர் இப்படிப் பேசுவதை மிக வன்மையாக கண்டிக்கவே வேண்டும்.
போக இப்படி கந்து வட்டிக்கும் மீட்டர் வட்டிக்கும் பல சமயங்களில் கிலோமீட்டர் வட்டிக்கும் கடன் வாங்கும் மருந்துகளில் , அதுவும் குழந்தைகளுக்கான “ஃப்ரீ ப்ரோ கிட், மற்றும் லேக்டோபாசில்” போன்ற தர நிலையற்ற மருந்துகள் விற்கப் படுவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கண்டுபிடித்திருப்பதாய் 22.08. 2012 “தீக்கதிர்” சொல்கிறது.
அமீர்கான் எழுதியதை மொழிபெயர்த்துள்ள “ தமிழால் இணைவோம்” என்ற இணைய குழுமம்,
”சர்க்கரை நோய்க்கு என்ன மருந்து தருவாய்? என தேர்வில் கேட்கப் படும் கேள்விக்கு மருத்துவ மாணவர் “GLIMEPRIDE" என்று பதில் எழுதுகிறார்.
இது சர்க்கரை நோயாளிகளுக்கு தரப்படும் உப்பு. பத்து வில்லைகள் கொண்ட அட்டையின் விலை இரண்டு ரூபாய்.
ஆனால் அதே நபர் மருத்துவர் ஆனதும் சர்க்கரை நோயாளிக்கு “ AMARYL" என்ற மருந்தினை பரிந்துரைக்கிறார். மேற்சொன்ன இரண்டின் பெயர்கள்தான் வேறே தவிர இரண்டும் ஒன்றுதான்.
ஒரே வித்தியாசம் மேலே சொன்ன "glimepride" இரண்டு ரூபாய். கீழே உள்ள "amaryl" நூற்றி இருபத்தி ஐந்து ரூபாய்.
"CENTRIZINE" என்பதும் “ CETZINE" என்பதும் ஜலதோசத்திற்கான வேறு வேறு பெயர்களைக் கொண்ட ஒரே மருந்துகள். ஒரு ரூபாய் இருபத்தி ஐந்து பைசா விலையுள்ள “:cetrizine" ஐ தவிர்க்கும் மருத்துவர்கள் முப்பத்தி ஐந்து ரூபாய் விலையுள்ள”cetzine" ஐயே பெரும்பாலும் பரிந்துரைக்கிறார்கள்.
மட்டுமல்ல "STREPTOKINASE" மற்றும் "UROKINASE" ஆகிய ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாரடைப்புக்கான மருந்துகள் வேறு பிராண்டுகளில் ஐயாயிரம் ரூபாய்க்கு சந்தைகளில் விற்கப் படுகின்றன”
என்று அமீர்கான் எழுதியுள்ளதாக சொல்வதை எளிதாக கடந்து போக முடியவில்லை.
“ வடகிழக்கு கிராமப் புறங்களில் இரண்டாயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதம் தொடர்வது தமக்கு கவலை அளிப்பதாகவும், ஒரு மருத்துவருக்கு குறைந்த பட்சம் மூன்று செவிலியர்களேனும் தேவை என்ற நிலையில் இரண்டு மருத்துவர்களுக்கு மூன்று செவிலியர்கள் என்ற நிலை நீடிப்பதிலும் தாம் தாங்கொன்னாத கவலையோடிருப்பதாவும்” சொல்லியிருக்கிறார்.
இவர் இப்படி சொல்வதால் ஏதோ தெற்கில் மேற்கில் எல்லாம் போதிய மருத்துவர்களும் செவிலியர்களும் இருப்பதாக் கொள்ளக் கூடாது. இங்கும் சற்றேரக் குறைய அதே நிலைமைதான் என்பதை உள்வாங்க வேண்டும்.
ஒரு பிரதமர் இவ்வளவு புலம்புவது தேவையே இல்லை. சொடக்குகிற நேரத்தில் வணிகர்களிடமிருந்து மருத்துவத்தை தனது நேரடி நிர்வாகத்தில் கொண்டுவர முடியும் அவரால். ஆனால் செய்ய மாட்டார். காரணம் முதலாலிகள் விடமாட்டார்கள். அவர்களிடம்தான் இவர்களுக்குத் தேவையான பணம் இருக்கிறது என்பதென்னவோ உண்மைதான்.
ஆனாலும் அவருக்கு சொல்லி வைப்போம். ஏழைகளின் உயிர் மீது கொஞ்சம் அக்கறை வையுங்கள்.
அவர்களிடம்தான் உங்களுக்கான வாக்குகள் இருக்கின்றன என்பதற்காகவேனும்.
வெள்ள மாத்திர
அடக்
கண்டதுக்கெல்லாம்
முழுங்கி முழுங்கி
தொண்டையும் புண்ணா போச்சுதே
அட
வேணாண்டா
வெள்ள மாத்திர”
முன்பெல்லாம் த மு எ ச கலை இரவு மேடைகளில் தவறாமல் ஒலிக்கும் பாடல் இது.
தொடங்கியதுமே ஜனத்திரள் வெடித்துச் சிரித்து கைதட்டி ஆர்ப்பரிக்கும். எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காது சுவைத்த பாடல் அது. அந்தப் பாடல் அவ்வளவு தூரம் ஜனங்களிடம் போய் சேர்ந்தமைக்கு அன்றைய தினத்தில் அரசாங்க மருத்துவ மனைகளில் வழங்கப்பட்ட “த.அ” வெள்ளை மாத்திரைகளே காரணம்.
தலை வலின்னு போனாலும், வவுத்து வலின்னு போனாலும், குளிர் காச்சல்னு போனாலும் அதே வெள்ளை மாத்திரையையே மாற்றாமல் கொடுக்கிறார்களே என்று மக்களிடம் இருந்த அயர்வு கலந்த சலிப்பே அந்தப் பாடலின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
“த” னா “ அ “னா என்னா தெரியுமா? தானா ஆனாதான் உண்டு. இந்த மாத்திரையால ஒன்னும் ஆகாது என்று அர்த்தம் என்று அப்போதைய கலை இரவு பேச்சாளர்களில் பெரும்பான்மையோர் பலத்து வெடிக்கும் ஆரவார்த்திற்கு இடையில் பேசுவது வழக்கம். நானும் ஒரு இருபது கலை இரவு மேடைகளிலாவது இதை பேசியிருப்பேன்தான்.
அந்த அளவுக்கேனும், “ த” னா “அ” னா மாத்திரைகளோடேனும் இன்றைக்கு இருக்கிற அளவில் அரசு மருத்துவ மனைகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா? என்பதற்கு சன்னமான அளவிற்கேனும் நம்பிக்கை தரக்கூடிய பதில் தட்டுப்பட மறுக்கிறது.`
அரசு மருத்துவ மனைகளின் அவசியம் குறித்து ஆக சமீபத்தில் உணர ஒரு வாய்ப்பு கிட்டியது.
“உங்க அப்பா செத்துக்கிட்டு இருக்கார், சார். நேரம் கடத்திப் பயனில்லை. இன்னும் பத்து நிமிடங்களுக்குள் அவரை தியேட்டருக்குள் கொண்டு போக வேண்டும்”
என்று மருத்துவர் சொன்னபோது கேட்டேன்,
“எவ்வளவு சார் ஆகும்”
அவர் சொன்ன மாத்திரத்தில்,
“சரிங்க சார், அழைத்து செல்லுங்கள்”
அழைத்துச் சென்றார்கள். ஒரு மணி நேரத்திற்கெல்லாம், செத்துக் கொண்டிருந்த என் தந்தையை உயிரோடு எங்களிடம் எங்களிடம் ஒப்படைத்தார்கள்.
என்ன,
மூன்று வட்டிக்கு ஒரு ஐம்பது , இரண்டு வட்டிக்கு ஒரு லட்சம், கைவசம் இருந்த ஐம்பது போக நண்பர்கள் கைமாற்றாய் கொடுத்த நாற்பது எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
ஆக கையில் இல்லாவிட்டாலும் புரட்ட முடிந்தது என்பதால் அப்பா இன்று எங்களோடு இருக்கிறார். புரட்ட முடியாது போயிருப்பின் அப்பா படமாகி ஐந்து மாதங்களாகியிருக்கும்.
அதற்கு அடுத்த நாள் தம்பி விஷ்ணுபுரம் சரவணனோடு பேசிக் கொண்டிருந்தேன்,
“எல்லா அப்பாவும் அப்பாயில்லையா சரவணன்?”
“ அப்பான்னா அப்பாதான். ஏண்ணே?”
“ஒருக்கால் புரட்ட முடியாதவனோட அப்பான்னா செத்துட வேண்டியதுதானா, சரவணன்?”
“வேற வழி, சாக சாகப் பார்த்துக் கொண்டுதானே இருந்தோம்”
உடைந்தார்.
அவரது தந்தைக்கும் அப்பாவிற்குன் வந்ததுபோல் ஏதோ ஒரு நோய் வர புறட்டவும் முடியாது போகவே வேறு வழியேயின்றி ஏதோ அவரை திருப்தி படுத்துவதற்காக மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து அவர் பையப் பைய மரணிப்பதை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
உடைந்தேன்.
முடியாத எல்லா அப்பாக்களும் எல்லா அம்மாக்களும் காப்பாற்றப் படவேண்டும் எனில் பொது மருத்துவ மனைகள் பலுகிப் பெருக வேண்டும்.
ஆனால் இருக்கிற மருத்துவ மனைகளைக் காப்பாற்றவே படாத பாடு பட வேண்டியிருக்கிறது. புதுச்சேரி ஜிப்மர் சற்றேரக்குறைய பணம் கட்டி வைத்தியம் பார்க்கும் அரசு மருத்துவ மனையாகிப் போய்விட்டது.
இந்த மருத்துவமனைக்கு தன்னாட்சி அந்தஸ்தை வழங்க முடிவெடுத்த போதிலிருந்தே பிருந்தா காரத் மாநிலங்களவையில் இந்த மருத்துவனையைக் காப்பாற்ற போராடியதையும், மார்க்சிஸ்ட் கட்சியினர் அதற்காக முன்னெடுக்கும் தொடர் போராட்டங்களையும் நன்றியோடு கொள்ளவே வேண்டும்.
இது ஒரு புறமிருக்க “ மருத்துவக் கல்வியின் தரம் கவலை அளிக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாக 01.07.2012 தினமலர் கூறுகிறது.
“சுகாதாரக் குறியீடுகள் மோசமாகவே தொடர்கின்றன” என்றும் அவர் கூறியதாகவும் தினமலர் தொடர்ந்து சொல்கிறது.
“ பிரசவ கால மரணங்களும், சிசு மரணங்களும் தனக்கு மிகுந்த கவலையைத் தருவதாக பிரதமர் கூறியிருக்கிறார்.
இவற்றை காரத்தோ, அத்வானியோ சொன்னால் அதில் ஒரு அர்த்தமுண்டு. பிரதமரே இப்படிப் பேசுவது என்பதுதான் எவ்வளவு முயன்றும் பிடிபட மறுக்கிறது.
சிசு மரணங்கள் குறித்து கவலையைப் பதிவதோடு ஒரு சராசரி குடிமகனே நிறுத்திக் கொள்ளக் கூடாது. போதிய மருத்துவ சிகிச்சையின்றி இறந்து போகும் குழந்தைகளில் எத்தனை பகத்களோ, எத்தனை பாரதிகளோ, எத்தனை அன்னை தெரசாக்களோ?
பிரதமர் இப்படி கவலைப் படுவதோடு தனது கடமையை சுறுக்கிக் கொள்வதை எதிர்த்து மக்கள் திரண்டு போராட வேண்டும்.
அவரது வேதனைகளிலேயே மிகவும் ஆழமான வேதனை இதுதான். அவர் சொல்கிறார்,
“இன்றைக்கும் மருத்துவ செலவுகளுக்காக, மூன்றில் இரண்டு பங்கு தொகையை மக்கள் கடன் வாங்கியே செலவிடுகின்றனர். அதிலும் மருந்துகளுக்காகவே அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது”
மக்கள் கந்து வட்டிக்கு கடன் வாங்கி மருந்து வாங்குவது குறித்து நானோ நீங்களோ கவலைப் படுவதில் பொருளிருக்கிறது. ஆனால் மருந்து வாங்குவதற்காக மக்கள் கடன் வாங்குவதைப் பார்த்து ஒரு பிரதமர் கவலைப் படுவதாகக் கூறுவது கூட ஏழை மக்கள் மீதான அவரது நக்கல் என்றே கொள்ள வேண்டியுள்ளது.
அவர் எதற்கு விசனப் பட வேண்டும்? ஊர் ஊருக்கு மருத்துவ மனைகளைத் திறந்து மருத்துவத்தை ஒரே கை எழுத்தில் பொதுப் படுத்தி ஏழை எளிய மக்களை கடன் வலையிலிருந்து மீட்க சர்வ வல்லமையுள்ள பிரதமர் இப்படிப் பேசுவதை மிக வன்மையாக கண்டிக்கவே வேண்டும்.
போக இப்படி கந்து வட்டிக்கும் மீட்டர் வட்டிக்கும் பல சமயங்களில் கிலோமீட்டர் வட்டிக்கும் கடன் வாங்கும் மருந்துகளில் , அதுவும் குழந்தைகளுக்கான “ஃப்ரீ ப்ரோ கிட், மற்றும் லேக்டோபாசில்” போன்ற தர நிலையற்ற மருந்துகள் விற்கப் படுவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கண்டுபிடித்திருப்பதாய் 22.08. 2012 “தீக்கதிர்” சொல்கிறது.
அமீர்கான் எழுதியதை மொழிபெயர்த்துள்ள “ தமிழால் இணைவோம்” என்ற இணைய குழுமம்,
”சர்க்கரை நோய்க்கு என்ன மருந்து தருவாய்? என தேர்வில் கேட்கப் படும் கேள்விக்கு மருத்துவ மாணவர் “GLIMEPRIDE" என்று பதில் எழுதுகிறார்.
இது சர்க்கரை நோயாளிகளுக்கு தரப்படும் உப்பு. பத்து வில்லைகள் கொண்ட அட்டையின் விலை இரண்டு ரூபாய்.
ஆனால் அதே நபர் மருத்துவர் ஆனதும் சர்க்கரை நோயாளிக்கு “ AMARYL" என்ற மருந்தினை பரிந்துரைக்கிறார். மேற்சொன்ன இரண்டின் பெயர்கள்தான் வேறே தவிர இரண்டும் ஒன்றுதான்.
ஒரே வித்தியாசம் மேலே சொன்ன "glimepride" இரண்டு ரூபாய். கீழே உள்ள "amaryl" நூற்றி இருபத்தி ஐந்து ரூபாய்.
"CENTRIZINE" என்பதும் “ CETZINE" என்பதும் ஜலதோசத்திற்கான வேறு வேறு பெயர்களைக் கொண்ட ஒரே மருந்துகள். ஒரு ரூபாய் இருபத்தி ஐந்து பைசா விலையுள்ள “:cetrizine" ஐ தவிர்க்கும் மருத்துவர்கள் முப்பத்தி ஐந்து ரூபாய் விலையுள்ள”cetzine" ஐயே பெரும்பாலும் பரிந்துரைக்கிறார்கள்.
மட்டுமல்ல "STREPTOKINASE" மற்றும் "UROKINASE" ஆகிய ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாரடைப்புக்கான மருந்துகள் வேறு பிராண்டுகளில் ஐயாயிரம் ரூபாய்க்கு சந்தைகளில் விற்கப் படுகின்றன”
என்று அமீர்கான் எழுதியுள்ளதாக சொல்வதை எளிதாக கடந்து போக முடியவில்லை.
“ வடகிழக்கு கிராமப் புறங்களில் இரண்டாயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதம் தொடர்வது தமக்கு கவலை அளிப்பதாகவும், ஒரு மருத்துவருக்கு குறைந்த பட்சம் மூன்று செவிலியர்களேனும் தேவை என்ற நிலையில் இரண்டு மருத்துவர்களுக்கு மூன்று செவிலியர்கள் என்ற நிலை நீடிப்பதிலும் தாம் தாங்கொன்னாத கவலையோடிருப்பதாவும்” சொல்லியிருக்கிறார்.
இவர் இப்படி சொல்வதால் ஏதோ தெற்கில் மேற்கில் எல்லாம் போதிய மருத்துவர்களும் செவிலியர்களும் இருப்பதாக் கொள்ளக் கூடாது. இங்கும் சற்றேரக் குறைய அதே நிலைமைதான் என்பதை உள்வாங்க வேண்டும்.
ஒரு பிரதமர் இவ்வளவு புலம்புவது தேவையே இல்லை. சொடக்குகிற நேரத்தில் வணிகர்களிடமிருந்து மருத்துவத்தை தனது நேரடி நிர்வாகத்தில் கொண்டுவர முடியும் அவரால். ஆனால் செய்ய மாட்டார். காரணம் முதலாலிகள் விடமாட்டார்கள். அவர்களிடம்தான் இவர்களுக்குத் தேவையான பணம் இருக்கிறது என்பதென்னவோ உண்மைதான்.
ஆனாலும் அவருக்கு சொல்லி வைப்போம். ஏழைகளின் உயிர் மீது கொஞ்சம் அக்கறை வையுங்கள்.
அவர்களிடம்தான் உங்களுக்கான வாக்குகள் இருக்கின்றன என்பதற்காகவேனும்.