Showing posts with label இந்தியக்குடியுரிமை சட்ட திருத்தம்/சமஸ்கிருதம். Show all posts
Showing posts with label இந்தியக்குடியுரிமை சட்ட திருத்தம்/சமஸ்கிருதம். Show all posts

Tuesday, December 17, 2019

நீங்களே ஒருமுறை நீதி கேட்டு தெருவிற்கு வந்தவர்கள்தானே

அழுதுகொண்டே வந்தவளை என்னடா என்று கேட்கிறேன்
சயின்ஸ் சார் அடிச்சிட்டார்
அய்யோ அவர் யாரையும் அடிக்க மாட்டாரே. ஏதாவது தப்பு செஞ்சிருப்ப
ம்கும் சாரும் விசாரிக்காமயே அடிக்கிறாறு. நீங்களும் விசாரிக்காமலே நாந்தான் தப்புங்கறீங்க
முகத்துல அறையறமாதிரி கேட்கிறாள் குழந்தை
எட்டாம் வகுப்பு குழந்தை அவள்
விசாரிக்காமலே தீர்ப்பை சொல்கிறீர்களே. என் அன்பிற்குரிய நீதியரசர்களே
நீங்களே ஒருமுறை நீதி கேட்டு தெருவிற்கு வந்தவர்கள்தானே

Monday, December 16, 2019

மக்களின் கொதிநிலை அவர்களை அச்சப்படுத்துகிறது

இந்தியக் குடியுரிமைச் சட்டத்தை கிழிந்தப் பதாகையாக்கி தொங்க
விட்டிருக்கிறார்கள்
பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கொந்தளித்திருக்கிறார்கள்
அவர்கள் வென்ற வடமாநிலங்களே கொதித்தெழுந்திருக்கின்றன
அவர்களை பாராளுமன்றத்தின் கொதிநிலை ஒன்றும் செய்யாது
அவர்கள் அந்த நிறுவனத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல
அவர்கள் இல்லையென்று மறுக்கலாம்
ஆனால் மக்களின் கொதிநிலை அவர்களை அச்சப்படுத்துகிறது என்பதுதான் உண்மை
எனவே எதிர்க்கட்சிகள் குறிப்பாக இடதுசாரிகள் அந்த மக்களோடு கலப்பதும் சரியாக வழிநடத்துவதும் அவசியம்

எதற்கும்முதலில் நாம் தமிழைப் புழங்குவவோம்

அவனவனும் அவனவன் மக்களோடு அவனவன் மொழியைப் புழங்காமல்
அவனவன் பிள்ளைகளுக்கு அவனவன் மொழியில் கல்வியைக் கொடுக்காமல்
அலுவலகங்களில்
மருத்துவனையில்
நீதிமன்றத்தில்
பாராளுமன்றத்தில்
அவனவன் மொழியை புழங்காமல் நகர்ந்தால்
பேச ஆளேயில்லாத மொழியை தேவ பாஷை என்றும்
அந்த மொழியைப் பேசினால் நோய் அகலும் என்றெல்லாம்
அந்த மொழி தெரியாதவரெல்லாம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பேசத்தான் செய்வார்கள்
எதற்கும்முதலில் நாம் தமிழைப் புழங்குவவோம்

Friday, December 13, 2019

சகிக்கவில்லையே மருத்துவர் அய்யா

இந்தச் சட்டம் குறைபாடுள்ளது
எனவே இந்தத் திருத்தம் தவிர்க்க இயலாதது
ஆகவே இதை நாங்கள் ஆதரிக்கிறோம்
என்று சொல்வதில்கூட ஒரு பொருள் இருக்கிறது
அது குறித்து விவாதிக்கலாம்
ஆனால்,
கூட்டணி தரமம் என்று இருக்கிறது. அதைக் காப்பாற்ற வேண்டும். எனவேதான் இந்தியக் குடியுரிமை சட்டத்தில் கொண்டு வருகிறப் படுகிற திருத்தங்களை ஏற்கிறோம் என்கிறீர்களே மருத்துவர் அய்யா
மீண்டும் சொல்கிறேன்,
இந்தத் திருத்தம் அநியாயமானது ஆகவே எதிர்க்கிறோம் என்கிறோம்
இந்த திருத்தம் நியாயமானது, ஆகவே ஆதரிக்கிறோம் என்று ஏன் உங்களால் கூற முடியவில்லை
எனக்குத் தெரியும் ,
இந்த திருத்தத்தில் நியாயம் இல்லை என்பது உங்களுக்கும் தெரியும் என்று
இளைய மருத்துவர் மேல் வழக்குகள் உண்டு என்பதும் கூட்டணித் தர்மங்களில் ஒன்றா
இந்திதான் தேசிய மொழி என்றாலும் ஏற்பீர்களா?
சகிக்கவில்லையே மருத்துவர் அய்யா

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...