Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Thursday, June 26, 2025

அமெரிக்கா இந்தியாவின் பலத்திற்கும் கீழான நாடுதான்

 மெய்யாகவே எல்லா நாடுகளும் அணு ஆயுதங்களை அழித்துவிடும் நிலையில்

அமெரிக்கா இந்தியாவின் பலத்திற்கும் கீழான நாடுதான்
இரண்டுநாள் முன்பு ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலும்
இர்ரான் அதை எதிர்கொண்ட விதமும் இதைத்தான் சொல்கின்றன

சீயோனிசத்திற்கு எதிராக நியூயார்க்கிலும்

 


32 வயதேயான ஜோரன் மம்தானி
ஜனநாயகக் கட்சியின் நியூயார்க் மேயர் வேட்பாளர்
சன்னமாக இடதுசாரி
அநேகமாக மேயராவார் என்று தெரிகிறது
கேட்கிறார்கள்,
நீங்கள் மேயரானதும் எல்லா மேயரையும் போல் இஸ்ரேல் சென்று வருவீர்களா?
நியூயார்க் மேயரானதும் முதலில் இஸ்ரேல் சென்று வருவது என்பது கிட்டத்தட்ட மரபாகிப் போன விஷயம்
சீயோனிசத்தின் எச்சக் கூறு இது
கிட்டத்தட்ட சீயோனிஸ்டுகளின் விருப்பத்தளம் நியூயார்க்
அங்கு போட்டியிடுகிற இந்தப் பிள்ளை சொல்கிறார்
நான் ஏன் அங்கு போக வேண்டும்
மக்களும் அவரைக் கொண்டாடுகிறார்கள்
வேறொன்றும் இல்லை
சீயோனிசத்திற்கு எதிராக நியூயார்க்கிலும் மக்கள் ஆடத் தொடங்கி இருக்கிறார்கள்

காசா குறித்து ஏதும் உறுதியைப் பெறாமல் விட்டது தவறு

 இஸ்ரேலை ஏவி ஈரான்மீது தாக்குதலைத் தொடங்க வைத்தது அமெரிக்கா

தாக்குதலில் இருந்து ஈரான் சுதாரிப்பதற்கு முன் ஒழுங்காக இல்லாவிட்டால் ஈரான் வரைபடத்தில் இருக்காது என்று கொக்கரித்தது அமெரிக்கா
ஈரான் எழுந்து சதிராடி இஸ்ரேலை துவம்சம் செய்ததும்
நெதனின் கட்டளைக்காக ஈரான்மீது தாக்குதலை நடத்தியது அமெரிக்கா
அமெரிக்க போர்த் தளவாடங்கள்மீதும் ஈரான் தாக்குதலைத் தொடங்கியதும் ஈரானிடம் மண்டியிட்டது அமெரிக்கா
எல்லாம் சரி
அமெரிக்கா கெஞ்சிக் கொண்டதால் போரை நிறுத்தியதாக ஈரான் கூறுவதில் என்ன லாஜிக் இருக்கிறது

Tuesday, June 24, 2025

வீட்டோ அதிகாரத்தை நீக்குங்கள்

 இரண்டில் ஒன்றுதான்

ஒன்று, வீட்டோ அதிகாரத்தை நீக்குங்கள்
அல்லது, ஐநாவைக் கலைந்துவிடுங்கள்

Thursday, May 22, 2025

ட்ரம்பின் வரியுத்தம்


அமெரிக்க டாலரின் மதிப்பு 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவடைந்திருப்பதாக 13.04.2025 நாளிட்ட தீக்கதிர் கூறுகிறது. இந்த செய்தியை வாசித்ததும் கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன். சிலருக்கு தலை சுற்றியிருக்கக் கூடும், இன்னும் பலருக்கு மாரடைப்பே ஏற்பட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
”அமெரிக்க டாலரின் மதிப்புக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து பாதாளத்திற்குப் போனது” என்பது மாதிரியாகத்தான் வழக்கமாக செய்திகளை வாசித்துப் பழக்கப்பட்டிருக்கிறோம்.
அமெரிக்க டாலரின் மதிப்போடு ஒப்பிட்டுத்தான் உலக நாடுகளின் பணத்திற்கான மதிப்பே நிர்ணயம் செய்யப்படுகிறது. அதுபோல, யூரோ மற்றும் பிராங்குடன் ஒப்பிட்டுத்தான் அமெரிக்க டாலரின் மதிப்பு நிர்ணயிக்கப்டுகிறது.
பிராங்கோடு ஒப்பிடுகையில் 2015 ஆம் ஆண்டு இருந்த மதிப்பீட்டின் அளவிற்கு இறங்கி இருக்கிறது அமெரிக்க டாலர். அமெரிக்காவில் சில நகரங்களே திவாலாகிப் போன வரலாறு உண்டு. ஆனால் அப்போதுகூட இந்த அளவிற்கு அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்ததில்லை. அவ்வளவு வலுவான அமெரிக்க டாலருக்கு இப்போது ஏன் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது?
ட்ரம்ப்பின் தீர்வை வெறியே இதற்கான காரணம் என்கிறார்கள். பொருளியல் நிபுணர்கள் இதை “தீர்வைப் போர்” என்று அழைக்கிறார்கள்.
இந்தமுறை பதவி ஏற்றதும் ட்ரம்ப் கீழ்க்காணும் இரண்டு விஷயங்கள் குறித்து மிகவும் தான் கவலைப்படுவதாகக் காட்டிக் கொண்டார்,
1) பொருளாதார ரீதியாக உலக நாடுகள் அமெரிக்காவைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன
2) அமெரிக்காவின் இறக்குமதி என்பது ஏற்றுமதியைவிட பெருமளவு அதிகமாக இருக்கிறது
என்பதே அவரது ஆதங்கமாக இருந்தது. இதை சரி செய்வதன் மூலம் அமெரிக்காவை மீண்டும் வல்லரசாக்கப் போவதாகவும் பெருமிதம் பொங்க கூறினார். இதை கீழ்க்காணும் இரண்டு வகைகளில் செய்ய இருப்பதாகவும் கூறிக் கொண்டார்,
1) இறக்குமதிப் பொருட்கள் மீதான தீர்வை வரியை அதிகப்படுத்துவது
2) அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகள் அதே அளவிற்கு அமெரிக்காவிடம் இருந்தும் இறக்குமதி செய்துகொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது
இந்த இடத்தில்தான் ”தீர்வை வரி” என்பது என்ன? அதற்கான தேவை ஏன் ஏற்பட்டது என்பவை குறித்தெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. அவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் உலகமயம் மற்றும் தாராளமயம் குறித்தும் கொஞ்சம் சன்னமாகவும் சரியாகவும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூறுகளில் உலகமயம் மற்றும் தாராளமயம் துளிர்விட ஆரம்பிக்கின்றன. சுருக்கமாகவும் எளிதாகவும் சொல்ல வேண்டுமெனில் உலக நாடுகள் தங்களது சந்தைகளை தாராளமாக மற்ற நாடுகளின் பொருட்களுக்கு திறந்துவைக்க வேண்டும். உலகில் உற்பத்தியாகும் அனைத்தும் அனைத்து நாடுகளுக்கும் வருவதற்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது. இதன் மூலம் உலகில் உற்பத்தியாகும் அனைத்து பொருட்களும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
இது ஜனநாயகத்தின் முக்கியமான கூறு என்றார்கள். எல்லாவகையான பொருட்களும் கிடைக்கும்போது தரமான, தங்கள் பட்ஜெட்டிற்குத் தகுந்த மாதிரி பொருட்களை அனைத்து நாட்டு மக்களும் தேர்ந்தெடுக்க முடியும் என்றார்கள்.
மேலோட்டமாகப் பார்த்தால் இது மிகச் சரியான விஷயம் என்பதாகவே படும். நுகர்வு என்கிற ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டால் இது மிகவும் சரியானதும் ஆகும்.
நாம் எளிதாகப் புரிந்துகொள்வதற்காக இதை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஏதோ ஒரு சிறிய நாடு இருக்கிறது என்று கொள்வோம். அந்த நாட்டில் வாழை நன்கு விளைகிறது. அவர்களுக்கு போதுமான அளவில் விளைகிறது.
இப்போது உலகமயம் தாராளமயத்தின் விளைவாக அந்த நாட்டிற்கு பக்கத்து நாட்டில் இருந்தும் வாழை வருகிறது என்று கொள்வோம். கெடு வாய்ப்பாகவோ நல்வாய்ப்பாகவோ இறக்குமதியாகும் வாழையின் விலை உள்ளூர் வாழையின் விலையைவிட மலிவாகவும் இருக்கிறது எனக் கொள்வோம். உள்ளூர் நுகர்வோர் எது மலிவோ அதை வாங்குவர். இது சரிதானே என்றும் நினைக்கத் தோன்றும். ஆனால் உள்ளூர் வாழை விவசாயிகளை இது பாதிக்கும் அல்லவா?
எனவே வளரும் நாடுகள் இதை மூர்க்கமாக எதிர்த்துப் பார்த்தன. ஏற்பதைத் தவிர வேறு வழி இல்லை என்பதைப் புரிந்துகொண்டவுடன் இதை ஏற்பதற்கு ஒரு கால அவகாசத்தைக் கேட்டன. அந்த நாடுகள் இந்த சிக்கலை ஈடுகட்டுவதற்கு தங்களைத் தகவமைத்துக் கொள்வதற்காக அவர்கள் கேட்ட கால அவகாசம் இது.
இந்த அவகாசத்திற்குப் பிறகும் வெளியூரில் இருந்து வரும் சில பொருட்கள் சொந்த நாட்டின் பொருட்களுக்குப் போட்டியாக வரக்கூடிய வாய்ப்பு உண்டு. அப்படி இறக்குமதியாகும் பொருட்களினால் தங்களது பொருட்கள் பாதிக்கும்போது அந்தத் தொழில் நசியும். வேலைவாய்ப்பு பாதிக்கும். இதில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அத்தகையப் பொருட்களின் மீது தீர்வை வரி போடப்பட்டது
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பேனாவின் சந்தை விலை மூன்று ரூபாய் என்று கொள்வோம். இந்தியாவில் தயாராகும் அதே பேனா மூன்றரை ரூபாய் என்றால் இந்தியப் பேனா விற்காமல் முடங்கும். அப்போது அதில் இருந்து மீட்க சீனப் பேனாவிற்கு 50 அல்லது 60 பைசா தீர்வை வரியாகப் போடுவது வழக்கம்.
இந்தத் தீர்வை வரிக்கு ஒரு அளவையும் உலகநாடுகள் தீர்மானித்திருந்தன. ட்ரம்ப் இரண்டாவது முறையாக வந்ததும் உலகநாடுகள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான தீர்வையை குறைக்க வேண்டும் என்று மிரட்டினார். அல்லது அந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் பொருட்களுக்கான தீர்வையைக் கூட்டுவேன் என்றார். இந்தியா உடனடியாக சில பொருட்களுக்கான தீர்வையை மிகக் கனிசமாகக் குறைத்தது.
அமெரிக்கா தீர்வையை ஏற்றினால் தாங்கள் இறக்குமதி செய்யும் அமெரிக்க பொருட்களுக்கான தீர்வையை அதே அளவு உயர்த்துவோம் என்று பல நாடுகள் ட்ரம்ப்பை எச்சரித்தன. மெக்சிகோவே எச்சரித்தது. நமது நாடு மட்டும் பம்மியது.
அனைத்து நாடுகளுக்குமான தீர்வையை கண்களை மூடிக்கொண்டு ட்ரம்ப் ஏற்றினார். மற்ற நாடுகளும் ஏற்றின. ஏற்றியதை இறக்கினார். மற்ற நாடுகளும் இறக்கின. இப்படியானதொரு கண்ணாமூச்சி விளையாட்டை ஆடுவதன் மூலம் அமெரிக்காவின் வருமானம் பெருகும் என்று நினைத்தார் ட்ரம்ப். மாறாக,
1) அமெரிக்காவில் இறக்குமதிப் பொருட்களின் விலை கணிசமாக ஏறியது
2) வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கப் பொருட்களின் விலையும் ஏறியது
இதனால் அமெரிக்கப் பொருளாதாரம் சரிவைச் சந்திக்க ஆரம்பித்தது. இதில் உச்சம் என்னவெனில் ட்ரம்ப் சீனாவோடு விளையாடியதுதான். சீனப் பொருட்களுக்கு 125 விழுக்காடு வரியை விதித்தார். சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு 125 விழுக்காடு தீர்வை விதித்தது. இதில் சீனப் பொருளாதாரத்தோடு அமெரிக்க டாலரும் சரிவைச் சந்தித்தது.
சீனாவில் சீனாக்காரர்கள் மட்டுமே முதலீடு செய்வதில்லை. இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். வெளிநாடுகளில் முதலீடு செய்பவர்கள் அங்கிருந்து கிளம்பி வந்து அமெரிக்காவில் முதலீடு செய்யுங்கள். தீர்வையில் இருந்து தப்பலாம் என்கிறார் ட்ரம்ப். இது பைத்தியக்காரத்தனமானது. இதையே சீனாவும் சொல்லலாமே.
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகள் அதே அளவிற்கு அமெரிக்காவில் இருந்தும் இறக்குமதி செய்துகொள்ள வேண்டும் என்கிறார். இதில் என்ன தவறு என்று தோன்றும்.
இந்தியா அமெரிக்காவிற்கு ஏறுமதி செய்வது அங்கிருந்து இறக்குமதி செய்வதைவிட அதிகம். அந்த இடைவெளியை அமெரிக்காவில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்யச் சொல்கிறார் ட்ரம்ப்.
நம் ஊரில் கோதுமையின் சந்தை விலை இரண்டாயிரம் ரூபாயில் இருந்து இரண்டாயிரத்து இருநூறு ரூபாய்வரை இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தால் அதன் விலை 1,600 ரூபாயாக இருக்கும். மக்களுக்கு நல்லதுதானே என்று தோன்றும். ஆனால் கோதுமை விவசாயிகள் பிழைப்பு கெட்டு தற்கொலை செய்துகொள்ளும் சூழல் வரும்.
மட்டுமல்ல, விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையையும் மானியத்தையும் இந்தியா நிறுத்த வேண்டும் என்கிறது. இது இந்திய இறையாண்மையில் மூக்கை நுழைப்பதற்கு ஒத்ததாகும்.
இந்தியாவும் அதை செய்யத்தான் ஆசைப்படுகிறது. அதற்கு எதிராகத்தான் உழுகுடிகள் டில்லியில் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள்.
உழுகுடிகளின் வீரஞ்செறிந்த போராட்டமும் ஆயிரம் பேரை பலி கொடுத்த தியாகமும்கூட ஒரு வகையில் அமெரிக்க பொருளாதார கட்டுப்பாடுகளுக்குக்கு எதிராக நடந்ததுதான்.
உலகத்தின்மீதான வர்த்தகப் போருக்கு எதிராக அமெரிக்க மக்களே ஒன்று திரண்டுகொண்டு இருக்கிறார்கள். அவர்களே இந்த அசிங்கமான போரை முடிவிற்கு கொண்டு வருவார்கள்.

Tuesday, May 13, 2025

இருவருக்குமே பொய்தான் பிழைப்பு என்பதால்

 நீங்கள் இருவரும் சண்டையை நிறுத்தவில்லை எனில் உங்களுடனான வர்த்தக உறவை நிறுத்திக் கொள்வேன் என்று விரட்டித்தான் இந்தியாவையும் அமெரிக்காவையும் சண்டையை தான் நிறுத்தச் செய்ததாக ட்ரம்ப் கூறுகிறார்

எனில்
ட்ரம்ப் கூற்றுப்படி சண்டையை நிறுத்த இரு நாடுகளும் விரும்பவில்லை என்றாகிறது
ஆனால் பாகிஸ்தான் கெஞ்சியதால் சண்டையை நிறுத்தியதாக மோடி சொல்கிறார்
இருவருக்குமே பொய்தான் பிழைப்பு என்பதால் யார் சொல்வது பொய் என்பதில் குழம்பிக் கிடக்கிறோம்
#சாமங்கவிந்து 08 நிமிடம்
13-05.2015

Saturday, May 3, 2025

இந்தியாவை என்னவென்று சொல்லும் கூகுள்

 ட்ரம்ப் வந்ததும் நிறைய சொன்னார்

மெக்சிகோ வளைகுடாவிற்கு இனி அமெரிக்க வளைகுடா என்று பெயர் என்பதும் அவற்றுள் ஒன்று
சிரித்துக் கடக்கலாம் என்று யோசித்தவற்றுள் இதுவும் ஒன்று
ஆனால்
கூகுளில் அமெரிக்காவில் தேடினால் அது அமெரிக்க வளைகுடா என்றும்
அமெரிக்கா தாண்டினால் அதே கூகுள் மெக்சிகோ வளைகுடா என்று காட்டுவதாகவும்
நேற்று நடந்த மே தினப் பொதுக் கூட்டத்தில் தோழர் சாமிநாதன் கூறினார்
அப்போதிருந்து ஒரு எண்ணம்
அமெரிக்க எல்லைக்குள் இந்தியாவை என்னவென்று சொல்லும் கூகுள்

Friday, March 21, 2025

கல்வியெனில் மாகாணம்தான்

 மாகாணப் பட்டியலுக்கு கல்வியை ட்ரம்ப் கொண்டுபோக இருப்பதாக தகவல்கள் வருகின்றன

எந்த நாடானாலும் மாகாணங்களிடம் கல்வி இருப்பதே சரி என்ற வகையில் இதை வரவேற்கலாம்

நிதி உள்ளிட்டு எங்கெங்கெல்லாம் மாகாணங்களுக்குப் பிரச்சினை வருகிறதோ

அதை பேசியோ போராடியோ சரிசெய்துகொள்ள வேண்டும்

Thursday, March 20, 2025

அவருக்கு ட்ரம்பையும் தெரியும்

 சுனிதா சந்திக்கப் போகும் தலைவலிகள் என்று நண்பர்கள் பட்டியலிட்டபடியே இருக்கிறார்கள்

அவரது பெரிய தலைவலியே ட்ரம்ப்தான்

அவர் சொன்னால்தான் 

அவர் சிக்கினாரா அல்லது

மகிழ்ந்து பணியாற்றினாரா தெரியும்

அவருக்கு ட்ரம்பையும் தெரியும்

உண்மையை சொன்னால் ட்ரம்ப் என்ன செய்வாரென்பதும் தெரியும்

மூன்று வாய்ப்புகள்தாம் அவருக்கு

உண்மையை சொல்லி விzளைவுகளை எதிர்கொள்வது என்பது ஒன்று

பொய்சொல்லி தப்பித்தலென்பது இரண்டு

மௌனமாக இருந்து விடுவதென்பது மூன்று

பார்ப்போம்

20.03.2024

Wednesday, March 19, 2025

அவரே விரும்பிப் பெற்ற பணிநீட்டிப்பு

சுனிதா வில்லியம்ஸ் வானில் சிக்கித் தவித்தார்

படாதபாடு பட்டார்

ட்ரம்ப் கேட்டுக்கொண்டதற்கிணங்க

எலான்மஸ்க் காப்பாற்றினார் என்ற அளவிற்கு நீள்வதெல்லாம்

அமெரிக்க அரசியலின் அசிங்க முகம்

அவர் சென்ற விண்களம் பழுதானது என்னவோ உண்மைதான்

ஆனால், அவர் விரும்பியிருந்தால் முன்னமே திரும்பியிருக்கலாம்

அவரே விரும்பிப் பெற்ற பணிநீட்டிப்பு காலத்தை நிறைவு செய்து திரும்பியிருக்கிறார்

கொஞ்சம் விரிவாக ஏப்ரல் Kaakkai Cirakinile இதழில்

Sunday, March 2, 2025

ஜனநாயகத்தின் எதிரிகள்தான் நீங்கள்

 ட்ரம்ப், அர்ஜென்டினா அதிபர் மிலே, மோடி மற்றும் தான் எதைப் பேசினாலும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் வந்துவிட்டதாக உலக இடதுசாரிகள் கூச்சல் போடுவதாக

22.02.2025 அன்று வாஷிங்டனில் நடைபெற்ற கன்சர்வேடிவ் மாநாட்டில் இத்தாலிய பிரதமர் மெலோனி கூறியுள்ளதாக 24.02.2025 நாளிட்ட தமிழ் இந்து கூறுகிறது
அது உண்மை இல்லையா மெலோனி
அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையே சுவர் கட்டவேண்டுமென்றார்
கட்டவேண்டுமானால் கட்டிக்கோ என்றால் காசு கொடு என்றார்
காசா இருக்காது என்கிறார்
ஈரான் இருக்காது என்கிறார்
உக்ரைன் இருக்காது என்கிறார்
பெகாசஸ், பாலஸ்தீனம் உள்ளிட்டு உங்கள் நிலை என்ன?
ஜனநாயகத்தின் எதிரிகள்தான் நீங்கள்

25.02.2025

Thursday, October 6, 2022

உலகம் கொஞ்சம் கொஞ்சமாய் சிவப்பது புரிகிறதா?






உலகம் கொஞ்சம் கொஞ்சமாய் சிவப்பது புரிகிறதா?

அமெரிக்காவை மீட்டெடுக்க அமெரிக்க கம்யூனிஸ்டுகள் போதும் பைடன்






 

Monday, February 20, 2017

சுவர்களைத் தகர்ப்போம்

முன்பு ஏர்டெல் சார்பாக ஒரு விளம்பரம் வரும்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே எல்லையாக கம்பி வேலி இருக்கும். வேலிக்கு அந்தப் பக்கம் ஒரு பாகிஸ்தானியக் குழந்தை. இந்தப் பக்கம் ஒரு இந்தியக் குழந்தை. இரண்டுக் குழந்தைகளுக்கும் இடையே ஒரு உதை பந்து. பந்தை வேலிக்குள் இருக்கும் இடைவெளி வழியே பாகிஸ்தானுக்கு அனுப்புவான் இந்தியப் பிள்ளை. அதை அதே மாதிரி இந்தியாவிற்குள் அனுப்புவான் பாகிஸ்தானியப் பையன். இப்படியே கொஞ்சநேரம் இரண்டு குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
இந்த வேலி மட்டும் இல்லேனா எவ்வளவு நல்லா இருக்கும் என்று நினைப்பேன். எல்லைக் கோடுகளே இல்லாத உலகத்திற்காக ஏங்கும் லூசுகளுள் நானும் ஒருவன்.
மெக்சிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே 2240 கோடி அமெரிக்க டாலர் செலவழித்து தடுப்பு சுவர் எழுப்பப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பது கண்டு நெஞ்சு பதைபதைக்கிறது. அவர் இதை சொல்லித்தான் வாக்கு கேட்டார். அவர் வந்துவிடக்கூடாது என்று நாம் ஆசைப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.
மட்டுமல்ல, அதற்கான செலவையும் மெக்சிகோ பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்றும் ட்ரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.
மனிதர்களைப் பிரிக்கும் சுவரில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் ஆகவே அதற்கான செலவைப் பங்கிட்டுக் கொள்ள இயலாது என்றும் மெச்சிக் அதிபர் என்ரிக் பீனா நீட்டோ கூறியிருக்கிறார்.
உடனே ட்ரம்ப் மெக்சிகோவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 20% இறக்குமதி வரி விதித்திருக்கிறார். வருடத்திற்கு 5000 கோடி டாலருக்கு அமெரிக்காவில் மெச்சிகோ பொருட்கள் இறக்குமதியாகின்றன. எனில், இந்த புதிய வரியின்மூலம் வருடத்திற்கு 1000 கோடி டாலர் மெச்சிக் பணம் அமெரிக்கா வரும். இரண்டரை ஆண்டுகளில் காம்பவுண்ட் சுவருக்கான செலவுத்தொகை அமெரிக்காவிற்கு வந்து விடும்.
இதன்மூலம் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மெக்சிகோ ஒருக்கால் விலையைக் கூட்டக் கூடும். அது நிகழ்ந்தால் அமெரிக்க மக்கள் தலையில் விழும்.
இரண்டு வீடுகளுக்கிடையே காம்பவுண்ட் சுவர் கட்டுவதென்று இருவரும் முடிவெடுத்தால் செலவினை இருவரும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு விருப்பமும் மற்றவருக்கு விருப்பமில்லை என்றால் விருப்பப் பட்டவர்தானே செலவு செய்ய வேண்டும் திரு ட்ரம்ப்.

Tuesday, January 24, 2012

செயத்தக்க...

சூரியனே கம்பளி கேட்கும் அளவு பனியும் குளிரும் அமெரிக்காவில், ஆனாலும் சூரியனை விடவும் சூடாய்தான் இருக்கிறது அமெரிக்க தேர்தல் களம்.


“ராணுவம் எவ்வளவு முக்கியமானது? அமெரிக்காவின் அடையாளமும் ஆளுமையுமே ராணுவம்தானே. ராணுவத்திற்கான செலவைக் குறைத்ததன் மூலம் அமெரிக்க ராணுவத்தின் மேன்மையைக் குலைத்துப் போட்ட ஒபாமாவுக்கா உங்கள் வாக்கு?” என்று தன்னால் முடிந்த அளவு தேர்தல் களத்தை சூடேற்றி தேர்தலை வசப் படுத்த முயல்கிறது இன்றைய எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சி.


குடியரசுக் கட்சியின் இந்த யுக்தி ஜனநாயக் கட்சியை வெகுவாக அசைத்துப் போடவே கட்சி ஒபாமாவைப் பார்க்கிறது.

பதறித்தான் போகிறார் ஒபாமா.

“அய்யோ, அய்யயோ... அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அவர்களைப் போலவே நானும் ராணுவத்தை நம்பித் தானே தேர்தலை சந்திக்க வேண்டும். வேறெந்த நல்லதை செய்திருக்கிறேன். சொல்லி வாக்கு கேட்க. இது கூடவா தெரியாது எனக்கு.

முன்பு எப்போதையும் விட  ராணுவத்திற்கு இப்போது அதிகம் நிதி ஒதுக்கப் படுகிறது.

இன்னும் சொல்லப் போனால் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக ராணுவத்திற்கு செலவு செய்யும் பத்து நாடுகளின் மொத்த செலவை விடவும் அதிகமாய் செலவு செய்கிறோம்.

எனவே குடியரசுக் கட்சியின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.”

இன்னொரு பக்கம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களும் ஏறத்தாழ இதே வாரத்தில் ஒரு உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார்.

நம் நாட்டில் உள் நாட்டு உற்பத்தியில் 0.9 சதத்திற்கும் குறைவாகவே அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக செலவு செய்கிறோம் என்று பேசியிருக்கிறார்.

அவர் செய்யக் கூடாத செலவை பேரதிகம் செய்கிறார். இவரோ செய்ய வேண்டிய செலவைத் தவிர்க்கிறார். இவர்கள் இருவருக்காகவும்தான் வள்ளுவன் இப்படி எழுதினானோ என்னவோ

”செயத்தக்க அல்ல

செயக் கெடும்
செயத்தக்க
செய்யாமையானும் கெடும்”

“செயத்தக்க அல்ல
செயக் கெடும்
செயத் தக்க
செய்யாமையானும் கெடும்”

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...