Showing posts with label கோரிக்கை. Show all posts
Showing posts with label கோரிக்கை. Show all posts

Sunday, June 8, 2025

உபரி

  10 மணி நேரம் வேலை என்கிறார் சந்திரபாபு

அப்போதுதான் உற்பத்தி அதிகரிக்கும் என்கிறார்
தொழிலாளிகளை அதிகப்படுத்தி உற்பத்தி பெருகினால் அது உற்பத்தி அதிகரிப்பு
வேலை நேரத்தைக் கூட்டி அதன் மூலம் அதிகரிக்கும் உற்பத்தி
உற்பத்தி
உபரி லாபம்
உபரி குறித்து பேசவேண்டும்

Monday, June 2, 2025

புன்னகைத்தபடி நுழைந்து புன்னகைத்தபடி திரும்பும்

  கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கின்றன

பள்ளிக்கல்வியில் நிறைய செய்துவரும் அமைச்சர் அழகுச் சகோதரர் மகேஷ் அவர்களிடம் வேண்டிக்கொள்வதற்கு ஒன்று உண்டு
ஆசிரியர்களும் குழந்தைகளும் வகுப்பிற்குள் சூழல் இயல்பாக வேண்டும்
இயல்பாக்குங்கள்
உங்களால் முடியும்

Wednesday, May 14, 2025

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் எப்படி விடுபட்டான்?

 பெறுதல்: திரு.கோபால்

சார்,
நக்கீரன்
வழி: தோழர். Govi Lenin
அன்பின் சார்,
வணக்கம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், CPM , பங்கினை நினைத்து திமிர் கொள்பவன் நான்
அதே நேரம்
நக்கீரன் பங்கினை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என்பதையும் உரக்கப் பேசுபவன்
ஆனாலும் இந்த ஒன்பது பேர் கொண்ட பட்டியலில் போதாமை உணரவில்லையா சார் நீங்கள்
பொள்ளாச்சி ஜெயராமன் மகன் எப்படி விடுபட்டான்?
விடாதீர்கள்
அ.இ.ஜ.மாதர் சங்க தேசியத்தலைவர்களில் ஒருவரான தோழர் Suganthi P அவர்களுக்கும் இதுகுறித்து கடிதம் எழுத இருக்கிறேன்
விடாதீங்க சார்
அன்புடன்,
இரா.எட்வின்
14.05.2025

ஒரு பிக்னிக்தான் சிலப்பதிகாரத்தின் தோற்றுவாய்

 புதிய ஆசிரியனும் காக்கையும் வந்ததாப்பா?

நான் ஊர்ல இல்ல எட்வின்.
எங்க?
கண்ணகி கோட்டம்
”மண்மகள் அறிந்திராத வண்ணச் சீறடிகளை
மதுரை வரை நடந்த சீரடிகளை
என் அன்பனை இழந்தேன் என்று கதறியழுதவளை
கேட்டதாகக் கூறுப்பா
மணிமேகலையை கண்ணகி மகளென்று மாதவி கூறியதை
கண்ணகி காதில் சொல்லி வாப்பா,
அள்ளிவந்த கண்ணகியில் ஒரு துண்டை அனுப்பு”
என்று சொல்கிறேன்
துண்டென்ன முழுசையும் அனுப்புகிறேன் என்ற பதில் வர சாய்கிறேன்
இப்படியான ஒரு பிக்னிக்தான் சிலப்பதிகாரத்தின் தோற்றுவாய்
இளங்கோ, வேண்மாள், சீத்தனார்
அமைச்சர்கள் புடைசூழ மலையழகை தரிசிக்க பிக்னிக் போகிறான் செங்குட்டுவன்
அங்கு அவனைக் காண வந்த மக்கள்
ஒற்றை முலையோடு நின்ற ஒரு பெண்ணை வானத்தில் இருந்து விமானத்தில் வந்தவர்கள் அதனுள் இருந்த அவளது கணவனைக் காட்டி அழைத்துப் போனார்கள் என்று சொல்கிறார்கள்
அதைக் கேட்டதும்
சாத்தனார் அது கண்ணகி என்றும்,
கண்ணகி காதையை சுருக்கமாக சொல்கிறார்
இதைக் கேட்டதும் இளங்கோ அதை ஒரு காவியமாக எழுத இருப்பதாக சொல்கிறார்
சாத்தானார் மகிழ்கிறார்
இப்படியாக,
அந்த மலைப் பயணம்தான் சிலம்பை கொடுத்திருக்கிறது
இந்த நினைவோடு சாய்ந்து கிடந்தவன்
நாட்டார் இலக்கியத்தில் ஒற்றை மொலைப் பெண்கள் குறித்து இருப்பதுகுறித்து படித்ததெல்லாம் நினைவிற்குள் வந்துபோயின
“ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி” என்பதும் நினைவிற்கு வந்தது
முகநூலைத் திறந்தால்
”அன்னாந்து அம்மா என்றேன்
ஒரு முலை உதிர்த்தாள்.
ஒவ்வொரு பசியின் கைகளிலும் ஒவ்வொரு முலைகள்.
பனங்காடே
முலையூட்ட நெடுநெடுவென வளர்ந்த தாயே
உமக்கு சலிப்பே வராதா...
கைவிடேன்
உன் மார்பை விட கனமானது உந்தன் அன்பு
சுமக்க முடியவில்லை.”
என்று Poondi Jeyaraj எழுதுகிறான்
ஆசிர்வாதம்

Wednesday, April 9, 2025

அவர் ஆங்கிலத்தில் பேசட்டும்

 இந்தியன் எக்ஸ்ப்ரஸ், ந்யூஸ் டைம், இந்தியா டுடே போன்ற சேனல்களில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொடுத்துள்ள நேர்காணல்களைப் பார்த்த பிறகு திமுக தலைமைக்கானஎன் கோரிக்கை

அருள்கூர்ந்து பழனிவேல்ராஜனை நாடு பூராவும் கருத்தரங்கங்களில் உரையாட ஏற்பாடு செய்யுங்கள்
அவர் ஆங்கிலத்தில் பேசட்டும்
யாராவது தமிழில் மொழி பெயர்க்கட்டும்

#சாமங்கவிய இரண்டு மணி ஒரு நிமிடம்
09.04.2025

Friday, March 1, 2024

பெரம்பலூருக்கு ஒரு ”கலைஞர் நூற்றாண்டு நூலகம்”

 



உங்கள் பிறந்தநாள் பரிசாக பெரம்பலூருக்கு ஒரு ”கலைஞர் நூற்றாண்டு நூலகம்” கேட்டு கையேந்தி

வாழ்த்துகிறேன்
மகிழ்ந்து நீண்டு வாழ்க ஸ்டாலின் சார்

Thursday, October 13, 2022

தினக்கூலியே குறைவென்பதும்

    அங்கன்வாடிகளில் உள்ள LKG மற்றும் UKG வகுப்பெடுப்பதற்கு

தாற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்திரவிட்டிருக்கிறது
மாதத்திற்கு 5000 ரூபாய் தொகுப்பூதியம் என்றும்
அதுவும் வருடத்திற்கு 11 மாதங்கள்தாம் என்றும் தெரிகிறது
இது வன்மையன கண்டனத்திற்கு உரியது
அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
சங்கங்கள் அரசிற்கு அழுத்தத்தைத் தர வேண்டும்
தனியார் பள்ளிகளில் அதுதானே என்பார்கள் சிலர்
அதுவும் தவறென்றும்
அதற்கெதிராகவும் அழுத்தங்களைத் தரவேண்டும் என்பதே நமது கோரிக்கை
இதைக் கண்டிக்கிற வேளையில்
இது தினக்கூலியைவிடக் குறைவாக இருக்கிறது என்றும்
துப்புரவுத் தோழர்களின் சம்பளத்தைவிடக் குறைவென்றும் தோழர்கள் பதிவது வருத்தம் அளிக்கிறது
தொகுப்பூதியம் குறைவென்பதும்
அது அநியாயமென்பதும்
அது களையப்பட வேண்டும் என்பதுதான் அவர்கள் சொல்ல வருவது
அதை சொல்ல வருகிறபோது தம்மையும் அறியாமல் தவறி விடுகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது
தினக்கூலியே குறைவென்பதும்
துப்புரவுப் பணியாளர்களின் ஊதியம் குறைவென்பதையும்
உணர முடியாதவர்கள் அல்ல நாம்
100 நாள் வேலைத் திட்டத்தை முறைப்படுத்தி ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்
அந்தப் பணிக்கான ஊதியமும்
ஆண்டு முழுவதும் வேலை என்பதையும்
உறுதிப்படுத்த வேண்டும் என்பதும் நாம் உணராதது அல்ல
கவனமாக கேட்போம்

Thursday, September 15, 2022

காலை உணவு என்பது இடைக்கால நிவாரணம்

 


ஒருமுறைஅண்ணன் எஸ்.அறிவுமணி எழுதினார்
“தாயே
தாலாட்டை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படித் தூங்குவது?
தந்தையே
அறிவுரையை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படிக் கேட்பது?
ஆசானே
பாடத்தை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படிப் படிப்பது?
எல்லோரும்
எல்லாவற்றையும் நிறுத்துங்கள்
முதலில் என் பசிக்கு பதில் சொல்லுங்கள் ”
நினைவில் வைத்து எழுதியது
கொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாம்
காலையில் பட்டினியோடு பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்
அதற்கான காரணங்களும் அதிகம்
கூட்டுவழிபாட்டுக் கூட்டத்தில் நிற்கமுடியாமல் சரியும் குழந்தைகளின் எண்ணிக்கை சொல்லி மாளாது
காரணங்களைக் கண்டடைந்து களைவது மக்களரசின் இலக்கு
காலை உணவு என்பது இடைக்கால நிவாரணம்
ஆமாம்,
பசிக்கிறபோது எப்படிப் படிப்பான்?
கைப்பற்றிக் கொள்கிறேன் ஸ்டாலின் சார்
இதை மேல்நிலைப் பள்ளிவரை விரிவு செய்யுங்கள்
சத்துணவின் ஒரு பகுதி ஆக்குங்கள்
ஊழியர்களது சம்பளத்தை நியாயமான அளவில் உயர்த்துங்கள்

Tuesday, June 28, 2022

திருச்சி மாநகராட்சிக்கு நமது கோரிக்கைகள்,

 


திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி அருகில் உள்ள பூங்கா இது

குழந்தைகளும் பெரியவர்களும் கணிசமாக வருகிறார்கள்
நடைபயிற்சியும் நடக்கிறது
அழகாகவும் அமைதியாகவும் இருக்கிறது
சின்னச் சின்ன குறைகள்
சில இடங்களில் சன்னமோ சன்னமான புதர் எழுகிறது
சரி செய்யாவிட்டால் புதர் பெருக்கும்

பூச்சிகள் அண்டக்கூடும்



சறுக்குப் பலகைகள் பிடுங்கப்பட்டு சாத்தி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்
குழந்தைகளின் குதூகலத்தை சறுக்கு விளையாட்டில்தான் காண முடியும்



குழந்தைகள் அமர்ந்து விளையாட ஸ்பிரிங்கின் மேல் பறவைகளோடு உள்ள இரண்டில் ஒன்றைக் காணோம்
எதிரெதிரே இரண்டு குழந்தைகள் அமர்ந்து விளையாடும்போதுதான் அந்த இடம் மலர்ந்து சிரிக்கும்
12 வயதுக் குழந்தைகளுக்கு மட்டுமே என்று அறிவிப்பு இருக்கிறது
ஆனால் 35 வயது யுவதிகளும் இளைஞர்களும் அதில் விளையாடுகிறார்கள்
இதனால் என்றாவது ஒருநாள் ஊஞ்சல் சங்கிலி அறுந்துபோக வாய்ப்பு உள்ளது
இது நடந்தால்,
ஊஞ்சலும் குழந்தைகளுக்கு இல்லாமல் போகும்





இறுதியாக உள்ள சின்ன அழகான குளத்தில் நீர் இருந்தால் அழகாக இருக்கும்
திருச்சி மாநகராட்சிக்கு நமது கோரிக்கைகள்,
சறுக்குப் பலகையை நிறுவுவது
அந்தப் பறவை பொம்மையை ஸ்ப்ரிங்கில் வைப்பது
ஊஞ்சலில் பெரியவர்கள் ஆடாமல் ஒரு காவலரைக் கொண்டு தடுப்பது
அந்தக் குளத்தில் நீரை நிரப்புவது
புதரை நீக்குவது
இதற்கான பட்ஜட் திருச்சி மாநகராட்சிக்கு ஒரு பொருட்டானதே இல்லை
இவற்றை திருச்சி மாநகர நிர்வாகம் கவனிக்க வேண்டும்

முகநூல்
28.06.2022

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...