புதிய ஆசிரியனும் காக்கையும் வந்ததாப்பா?
நான் ஊர்ல இல்ல எட்வின்.
எங்க?
”மண்மகள் அறிந்திராத வண்ணச் சீறடிகளை
மதுரை வரை நடந்த சீரடிகளை
என் அன்பனை இழந்தேன் என்று கதறியழுதவளை
கேட்டதாகக் கூறுப்பா
மணிமேகலையை கண்ணகி மகளென்று மாதவி கூறியதை
கண்ணகி காதில் சொல்லி வாப்பா,
அள்ளிவந்த கண்ணகியில் ஒரு துண்டை அனுப்பு”
என்று சொல்கிறேன்
துண்டென்ன முழுசையும் அனுப்புகிறேன் என்ற பதில் வர சாய்கிறேன்
இப்படியான ஒரு பிக்னிக்தான் சிலப்பதிகாரத்தின் தோற்றுவாய்
இளங்கோ, வேண்மாள், சீத்தனார்
அமைச்சர்கள் புடைசூழ மலையழகை தரிசிக்க பிக்னிக் போகிறான் செங்குட்டுவன்
அங்கு அவனைக் காண வந்த மக்கள்
ஒற்றை முலையோடு நின்ற ஒரு பெண்ணை வானத்தில் இருந்து விமானத்தில் வந்தவர்கள் அதனுள் இருந்த அவளது கணவனைக் காட்டி அழைத்துப் போனார்கள் என்று சொல்கிறார்கள்
அதைக் கேட்டதும்
சாத்தனார் அது கண்ணகி என்றும்,
கண்ணகி காதையை சுருக்கமாக சொல்கிறார்
இதைக் கேட்டதும் இளங்கோ அதை ஒரு காவியமாக எழுத இருப்பதாக சொல்கிறார்
சாத்தானார் மகிழ்கிறார்
இப்படியாக,
அந்த மலைப் பயணம்தான் சிலம்பை கொடுத்திருக்கிறது
இந்த நினைவோடு சாய்ந்து கிடந்தவன்
நாட்டார் இலக்கியத்தில் ஒற்றை மொலைப் பெண்கள் குறித்து இருப்பதுகுறித்து படித்ததெல்லாம் நினைவிற்குள் வந்துபோயின
“ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி” என்பதும் நினைவிற்கு வந்தது
முகநூலைத் திறந்தால்
”அன்னாந்து அம்மா என்றேன்
ஒரு முலை உதிர்த்தாள்.
ஒவ்வொரு பசியின் கைகளிலும் ஒவ்வொரு முலைகள்.
பனங்காடே
முலையூட்ட நெடுநெடுவென வளர்ந்த தாயே
உமக்கு சலிப்பே வராதா...
கைவிடேன்
உன் மார்பை விட கனமானது உந்தன் அன்பு
சுமக்க முடியவில்லை.”
என்று Poondi Jeyaraj எழுதுகிறான்
ஆசிர்வாதம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்