காலையில் தலைமை ஆசிரியர் ஏதோ வேலையாக இருந்தார். அநேகமாக சுற்றுச்சுவர் குறித்தான வேலையாக இருக்க வேண்டும். வகுப்புகளை ஒரு சுற்று முடித்துவிட்டு எனது அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். என்ன பிரிவென்று ஞாபகம் இல்லை. அது தேவையும் இல்லை. பத்தாம் வகுப்பு மாணவி ஒரு பையனை ஏறத் தாழ இழுத்துக் கொண்டு என்னிடம் வந்தாள். அநேகமாக வகுப்புத் தலைவியாக இருக்க வேண்டும்.
“சார் டீச்சர் இவன உங்ககிட்ட கூட்டிட்டுப் போகச் சொன்னாங்க”
“ எந்த டீச்சர்?”
“ மலர் விழி டீச்சர்”
“ அப்ப டென்த் ஏ. “
“ஆமாம் சார்”
“சொல்லு என்ன தப்பு செஞ்சான்?”
“கரண்டு மாதிரி எப்பவாதுதான் வரான் சார். வரதும் தெரியல. போறதும் தெரியல”
வெடித்துச் சிரித்ததில் சத்தம் கேட்டு சேவியர் ஆசிரியர் அறையிலிருந்து வெளியே வந்து விட்டார். “ ஒன்னும் இல்ல சேவி” என்று நடந்ததை
சொன்னேன். அவரும் சிரித்தார்.
”சரி, சரி பள்ளி விட்டதும் என்னை வந்து பார்”
அவனை அனுப்பிவிட்டு அறைக்குள் நுழைந்தேன்.
போகிற போக்கில் எப்படி சொல்லிவிட்டாள். ஒழுங்காக வருவதில்லை, எப்போதாவது வருகிறான் என்பதை எப்போதாவது வரும் மின்சாரத்தோடு ஒப்பிட்டு விட்டாளே. இந்தச் சின்னக் குழந்தைக்குள் இவ்வளவு அரசியலா?
அவளுக்குள் ஒளிந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக் கொணர்ந்தால் பெரிய படைப்பாளியாக அவள் மாறவும் கூடும். அது குறித்து அவளிடம் பேசவில்லை,. தேர்வுநேரம் என்பது மட்டுமல்ல, ஒரு பள்ளிக்கு ஒரு லூசு போதாதா என்ன?
எப்பேர்பட்ட ராட்ஷச இயந்திரங்களையெல்லாம் இயக்கி உயிர் கொடுக்கும் மின்சாரம் ஒழுங்காக பள்ளிக்கு வராத மாணவனோடு ஒப்பிடுமளவிற்கு சன்னமாய் சிறுத்து கீர்த்தியிழந்து கீழ்மைப் படக் காரணம்தான் என்ன?
முன்னர் ஒரு முறை அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சொன்னார்,
“ ஒருக்கால் அடுத்த தேர்தலில் கழகம் தோற்குமானால் அதற்கு நான்தான் காரணமாக இருப்பேன்,” என்று . அன்றைய தினத்தில் மின்வெட்டு அவ்வளவு கடுமையாக இருந்தது. அப்போதெல்லாம் ஆற்காடு வீராசாமி அவர்களை தமிழக மின்வெட்டுத் துறை அமைச்சர் என்றே பெரும்பான்மைத் தமிழர்கள் அழைத்தனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி. மு. க படு தோல்வி அடைந்ததற்கு அவர் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட இயலாது என்றாலும் அவரது துறையின் மோசமான செயல்பாடுகள் அதற்கு பெருமளவு பங்காற்றியதையும் மறைக்க இயலாது.
இவ்வளவு கடுமையான மின்வெட்டிற்கு என்னதான் காரணம்?
தயாராகும் இடங்களில் இருந்து பயனாளியை அடைவதற்குள் விணாகக் காரணமாகும் கசிவு,
அரசியல் கூட்டங்களுக்கு அதற்கு இதற்கு என்று கொக்கிப் போடும் வகையில் ஏற்படும் மின்திருட்டு,
பெரும் வணிக நிருவனங்கள் வைக்கும் விளம்பர பலகைகளுக்கு அநியாத்திற்கும் போடப்படும் அதிக மின்சாரத்தை உறிஞ்சக் கூடிய மின் விளக்குகள்,
பெரியப் பெரிய வணிக நிருவனங்கள் அலங்காரம் , அழகு, குளிர் சாதன வசதி என்று ஆடம்பரமாய் நீட்டும் ஊதாரித்தனம்,
போக பன்னாட்டு நிருவனக்களின் ஆலைகள் அள்ளிக் குவிக்கும் மின்சாரம்,
போதுமான அளவு மின் உற்பத்திக்கு ஏற்பாடு செய்யாமை,
இவை எல்லாம் கடந்து இப்படி ஒரு கடுமையான மின்வெட்டைக் கொடுத்தால் மக்கள் பையப் பைய கூடங்குளத்தின் பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை என்பதைக் கூட நிராகரிக்க இயலாதுதான்.
இவை எல்லாம் இருக்க வேறு சில காரணங்களும் உள்ளன.
எங்கள் பள்ளியின் ஆசிரியர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்த போது டால்மியா சிமிண்ட் ஆலையில் இரண்டு உலைகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டு வந்ததாகவும் , அவர்களிடமிருந்து மின்சாரத்தை வாங்குவதை தமிழ் நாடு மின்சார வாரியம் நிறுத்திக் கொண்டதால் ஒரு உலை மட்டுமே தற்போது இயங்குவதாகவும் சொன்னார்,
அந்தப் பகுதிக்காரர் அவர். மின் உலை மூடப் பட்டதால் அவர் பகுதி மக்கள் சிலர் வேலை வாய்ப்பை இழப்பார்களே என்ற கவலை அவருக்கு.
ஏறத்தாழ இருபது மெகாவாட் மின்சாரத்தை டால்மியா சிமிண்ட்டிடமிருந்து வாங்குவதை தமிழ் நாடு மிசார வாரியம் நிறுத்திக் கொண்டிருக்கிறது.
இதேபோல இன்னும் பல ஆலைகளிடம் இருந்தும் மின்சாரம் பெறுவதை தமிழ் நாடு மின்சார வாரியம் நிறுத்திக் கொண்டிருக்கிறது என்றும் தெரிய வருகிறது.
இது குறித்து முக நூலில் எழுதியபோது நூற்றுக் கணக்கான சின்ன சின்ன குட்டி ஆலைகள் கூட அவர்களுக்குத் தேவை போக மீதமுள்ள மின்சாரத்தை த. நா. மி. வாரியத்துக்கு வழங்கி வந்ததாகவும், அவையும் தற்போது முற்றாக நின்று போனதாகவும் ஒரு நண்பர் எழுதியிருந்தார்.
மட்டுமல்ல,
தமிழ் நாட்டில் பயன் படுத்தப் படும் குண்டு விளக்குகளை குழல் விளக்குகளாக மாற்றினால் ஏறத்தாழ 640 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்றும் , இது கூடங்குளம் உலையிலிருந்து தமிழ் நாட்டிற்கு கிடைக்கப் போகும் மின்சார அளவை விட அதிகம் என்றும் ஓ ஞாநி எழுதியிருந்ததாக ஞாபகம்.
பல மாநிலங்களில் குண்டு விளக்குகளை குழல் விளக்குகளாக மாற்ற மானியம் வழங்கப் படுவதாக அறிகிறோம்.
காற்றாலைகள் தொடங்கவும் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும் மக்களுக்கு வேண்டிய அளவிற்கு ஊக்கம் தர அரசு தயங்குவதுதான். ஏனென்று புரியவில்லை.
இந்தப் பாராவை எழுதும்போது தமிழக முதல்வர் அறிவிக்கிறார்,
“தமிழகத்தில் முதல் தவனையாக 20000 தெரு விளக்குகள் சூரிய ஒளி மின் விளக்குகளாக மாற்றப் படும், 19000 இடங்களில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையங்கள் நிறுவப் படும்.
மெய்யாகவே இதற்காக முதல்வரை பாராட்டத்தான் வேண்டும். வஞ்சனையே இல்லாமல் பாராட்டி விடலாம்.
20000 மின் விளக்குகள் வெய்யிலைப் பயன்படுத்தத் தொடங்கினால் ஏறத்தாழ ஒரு மெகாவாட் மிச்சமாகும். தமிழ் நாடு முழுவதும் இருக்கும் கடைசி தெரு விளக்கு வரைக்கும் இதை விரிவு படுத்தினால்...?
சரிதானா தெரியாது, ஒரு குத்து மதிப்பாக தமிழ் நாட்டில் ஒரு கோடி தெரு விளக்குகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இவை அனைத்தையும் வெயிலோடு இணைத்தாலேறக்குறைய 1000 மெகாவாட் மிச்சமாகும்.
போக, உடன்குடி அனல் மின் நிலையத்தைத் துவக்கினால் 1600மெகாவாட் கிடைக்கும். அதற்கான அறிவிப்பு கூட வந்து விட்டது.
முக நூலில் எழுதிய நண்பர் போன அரசாங்கம் ஆலைகளில் இருந்து பெற்ற மின்சாரத்திற்கு நிறைய நிலுவை வைத்திருப்பதுதான் இப்போது அவர்களிடம் வாங்க இயலாமைக்கு காரணம் என்றும் சொல்லியிருந்தார். அந்த நிலுவைத் தொகையை கட்ட போதுமான அளவு பணம் அரசிடம் இல்லை என்பதுதான் காரணம் எனில் அரசு தைரியமாக மக்களிடம் வரலாம். inverter வாங்க ஏராளம் செலவு செய்யும் மக்கள் தட்டுப் பாடற்ற மின்சாரம் கிடைக்குமெனில் நிச்சயம் உதவுவார்கள். இதற்கென்று கடன் பத்திரமே வெளியிடலாம்.
இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் தமிழ் மண்ணை இருட்டுக்குத் தின்னக் கொடுக்கக் காரணம் என்ன?
ஒரு காரணம் சொல்லப் படுகிறது. நாட்டை இருளில் தள்ளிவிட்டு, கூடங்குளம் மட்டுமே வெளிச்சத்தைக் கொண்டு வரும் என்ற எதிபார்ப்பை மக்களிடம் விதைக்க அரசு முயல்கிறது என்றால் அது மிகவும் ஆபத்தானது.
அணு ஆலையில் மோசமான விபத்து ஒன்று நிகழுமானால் அதன் விளைவு இந்த இருளை விடவும் அதி பயங்கரமானதாக இருக்கும்.
ஒன்றை மட்டும் சொல்லலாம்,
ஏராளம் காரணங்கள் வரிசையாய் நின்றாலும் மூக்கைத் துருத்திக் கொண்டு முந்திச் சென்று போன ஆட்சியை வீட்டிற்கு அனுப்பியது இந்த இருட்டுதான்.
நன்றி : ”குறி”
“சார் டீச்சர் இவன உங்ககிட்ட கூட்டிட்டுப் போகச் சொன்னாங்க”
“ எந்த டீச்சர்?”
“ மலர் விழி டீச்சர்”
“ அப்ப டென்த் ஏ. “
“ஆமாம் சார்”
“சொல்லு என்ன தப்பு செஞ்சான்?”
“கரண்டு மாதிரி எப்பவாதுதான் வரான் சார். வரதும் தெரியல. போறதும் தெரியல”
வெடித்துச் சிரித்ததில் சத்தம் கேட்டு சேவியர் ஆசிரியர் அறையிலிருந்து வெளியே வந்து விட்டார். “ ஒன்னும் இல்ல சேவி” என்று நடந்ததை
சொன்னேன். அவரும் சிரித்தார்.
”சரி, சரி பள்ளி விட்டதும் என்னை வந்து பார்”
அவனை அனுப்பிவிட்டு அறைக்குள் நுழைந்தேன்.
போகிற போக்கில் எப்படி சொல்லிவிட்டாள். ஒழுங்காக வருவதில்லை, எப்போதாவது வருகிறான் என்பதை எப்போதாவது வரும் மின்சாரத்தோடு ஒப்பிட்டு விட்டாளே. இந்தச் சின்னக் குழந்தைக்குள் இவ்வளவு அரசியலா?
அவளுக்குள் ஒளிந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக் கொணர்ந்தால் பெரிய படைப்பாளியாக அவள் மாறவும் கூடும். அது குறித்து அவளிடம் பேசவில்லை,. தேர்வுநேரம் என்பது மட்டுமல்ல, ஒரு பள்ளிக்கு ஒரு லூசு போதாதா என்ன?
எப்பேர்பட்ட ராட்ஷச இயந்திரங்களையெல்லாம் இயக்கி உயிர் கொடுக்கும் மின்சாரம் ஒழுங்காக பள்ளிக்கு வராத மாணவனோடு ஒப்பிடுமளவிற்கு சன்னமாய் சிறுத்து கீர்த்தியிழந்து கீழ்மைப் படக் காரணம்தான் என்ன?
முன்னர் ஒரு முறை அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சொன்னார்,
“ ஒருக்கால் அடுத்த தேர்தலில் கழகம் தோற்குமானால் அதற்கு நான்தான் காரணமாக இருப்பேன்,” என்று . அன்றைய தினத்தில் மின்வெட்டு அவ்வளவு கடுமையாக இருந்தது. அப்போதெல்லாம் ஆற்காடு வீராசாமி அவர்களை தமிழக மின்வெட்டுத் துறை அமைச்சர் என்றே பெரும்பான்மைத் தமிழர்கள் அழைத்தனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி. மு. க படு தோல்வி அடைந்ததற்கு அவர் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட இயலாது என்றாலும் அவரது துறையின் மோசமான செயல்பாடுகள் அதற்கு பெருமளவு பங்காற்றியதையும் மறைக்க இயலாது.
இவ்வளவு கடுமையான மின்வெட்டிற்கு என்னதான் காரணம்?
தயாராகும் இடங்களில் இருந்து பயனாளியை அடைவதற்குள் விணாகக் காரணமாகும் கசிவு,
அரசியல் கூட்டங்களுக்கு அதற்கு இதற்கு என்று கொக்கிப் போடும் வகையில் ஏற்படும் மின்திருட்டு,
பெரும் வணிக நிருவனங்கள் வைக்கும் விளம்பர பலகைகளுக்கு அநியாத்திற்கும் போடப்படும் அதிக மின்சாரத்தை உறிஞ்சக் கூடிய மின் விளக்குகள்,
பெரியப் பெரிய வணிக நிருவனங்கள் அலங்காரம் , அழகு, குளிர் சாதன வசதி என்று ஆடம்பரமாய் நீட்டும் ஊதாரித்தனம்,
போக பன்னாட்டு நிருவனக்களின் ஆலைகள் அள்ளிக் குவிக்கும் மின்சாரம்,
போதுமான அளவு மின் உற்பத்திக்கு ஏற்பாடு செய்யாமை,
இவை எல்லாம் கடந்து இப்படி ஒரு கடுமையான மின்வெட்டைக் கொடுத்தால் மக்கள் பையப் பைய கூடங்குளத்தின் பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை என்பதைக் கூட நிராகரிக்க இயலாதுதான்.
இவை எல்லாம் இருக்க வேறு சில காரணங்களும் உள்ளன.
எங்கள் பள்ளியின் ஆசிரியர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்த போது டால்மியா சிமிண்ட் ஆலையில் இரண்டு உலைகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டு வந்ததாகவும் , அவர்களிடமிருந்து மின்சாரத்தை வாங்குவதை தமிழ் நாடு மின்சார வாரியம் நிறுத்திக் கொண்டதால் ஒரு உலை மட்டுமே தற்போது இயங்குவதாகவும் சொன்னார்,
அந்தப் பகுதிக்காரர் அவர். மின் உலை மூடப் பட்டதால் அவர் பகுதி மக்கள் சிலர் வேலை வாய்ப்பை இழப்பார்களே என்ற கவலை அவருக்கு.
ஏறத்தாழ இருபது மெகாவாட் மின்சாரத்தை டால்மியா சிமிண்ட்டிடமிருந்து வாங்குவதை தமிழ் நாடு மிசார வாரியம் நிறுத்திக் கொண்டிருக்கிறது.
இதேபோல இன்னும் பல ஆலைகளிடம் இருந்தும் மின்சாரம் பெறுவதை தமிழ் நாடு மின்சார வாரியம் நிறுத்திக் கொண்டிருக்கிறது என்றும் தெரிய வருகிறது.
இது குறித்து முக நூலில் எழுதியபோது நூற்றுக் கணக்கான சின்ன சின்ன குட்டி ஆலைகள் கூட அவர்களுக்குத் தேவை போக மீதமுள்ள மின்சாரத்தை த. நா. மி. வாரியத்துக்கு வழங்கி வந்ததாகவும், அவையும் தற்போது முற்றாக நின்று போனதாகவும் ஒரு நண்பர் எழுதியிருந்தார்.
மட்டுமல்ல,
தமிழ் நாட்டில் பயன் படுத்தப் படும் குண்டு விளக்குகளை குழல் விளக்குகளாக மாற்றினால் ஏறத்தாழ 640 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்றும் , இது கூடங்குளம் உலையிலிருந்து தமிழ் நாட்டிற்கு கிடைக்கப் போகும் மின்சார அளவை விட அதிகம் என்றும் ஓ ஞாநி எழுதியிருந்ததாக ஞாபகம்.
பல மாநிலங்களில் குண்டு விளக்குகளை குழல் விளக்குகளாக மாற்ற மானியம் வழங்கப் படுவதாக அறிகிறோம்.
காற்றாலைகள் தொடங்கவும் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும் மக்களுக்கு வேண்டிய அளவிற்கு ஊக்கம் தர அரசு தயங்குவதுதான். ஏனென்று புரியவில்லை.
இந்தப் பாராவை எழுதும்போது தமிழக முதல்வர் அறிவிக்கிறார்,
“தமிழகத்தில் முதல் தவனையாக 20000 தெரு விளக்குகள் சூரிய ஒளி மின் விளக்குகளாக மாற்றப் படும், 19000 இடங்களில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையங்கள் நிறுவப் படும்.
மெய்யாகவே இதற்காக முதல்வரை பாராட்டத்தான் வேண்டும். வஞ்சனையே இல்லாமல் பாராட்டி விடலாம்.
20000 மின் விளக்குகள் வெய்யிலைப் பயன்படுத்தத் தொடங்கினால் ஏறத்தாழ ஒரு மெகாவாட் மிச்சமாகும். தமிழ் நாடு முழுவதும் இருக்கும் கடைசி தெரு விளக்கு வரைக்கும் இதை விரிவு படுத்தினால்...?
சரிதானா தெரியாது, ஒரு குத்து மதிப்பாக தமிழ் நாட்டில் ஒரு கோடி தெரு விளக்குகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இவை அனைத்தையும் வெயிலோடு இணைத்தாலேறக்குறைய 1000 மெகாவாட் மிச்சமாகும்.
போக, உடன்குடி அனல் மின் நிலையத்தைத் துவக்கினால் 1600மெகாவாட் கிடைக்கும். அதற்கான அறிவிப்பு கூட வந்து விட்டது.
முக நூலில் எழுதிய நண்பர் போன அரசாங்கம் ஆலைகளில் இருந்து பெற்ற மின்சாரத்திற்கு நிறைய நிலுவை வைத்திருப்பதுதான் இப்போது அவர்களிடம் வாங்க இயலாமைக்கு காரணம் என்றும் சொல்லியிருந்தார். அந்த நிலுவைத் தொகையை கட்ட போதுமான அளவு பணம் அரசிடம் இல்லை என்பதுதான் காரணம் எனில் அரசு தைரியமாக மக்களிடம் வரலாம். inverter வாங்க ஏராளம் செலவு செய்யும் மக்கள் தட்டுப் பாடற்ற மின்சாரம் கிடைக்குமெனில் நிச்சயம் உதவுவார்கள். இதற்கென்று கடன் பத்திரமே வெளியிடலாம்.
இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் தமிழ் மண்ணை இருட்டுக்குத் தின்னக் கொடுக்கக் காரணம் என்ன?
ஒரு காரணம் சொல்லப் படுகிறது. நாட்டை இருளில் தள்ளிவிட்டு, கூடங்குளம் மட்டுமே வெளிச்சத்தைக் கொண்டு வரும் என்ற எதிபார்ப்பை மக்களிடம் விதைக்க அரசு முயல்கிறது என்றால் அது மிகவும் ஆபத்தானது.
அணு ஆலையில் மோசமான விபத்து ஒன்று நிகழுமானால் அதன் விளைவு இந்த இருளை விடவும் அதி பயங்கரமானதாக இருக்கும்.
ஒன்றை மட்டும் சொல்லலாம்,
ஏராளம் காரணங்கள் வரிசையாய் நின்றாலும் மூக்கைத் துருத்திக் கொண்டு முந்திச் சென்று போன ஆட்சியை வீட்டிற்கு அனுப்பியது இந்த இருட்டுதான்.
நன்றி : ”குறி”