Wednesday, August 16, 2023

மதம் மாறுவதைப் போலவே இதையும் கொள்வதெனில் ,

 

சாதி மாறுவதை அங்கீகரித்து சட்டம் இயற்ற வேண்டும் என்கிறார் கவிஞர் வைரமுத்து

தூங்குகிற ஸ்டாலின் சாரை அலைபேசியில் அழைத்து உரையாடக் கூடிய உரிமை உள்ளவர் கவிஞர் என்பது உலகறிந்த உண்மை
அப்படி இருக்கும் போது இவ்வளவு சென்சிட்டிவான ஒரு விசயத்தை நாங்குநேரி சம்பவம் மாதிரி ஒன்று நிகழ்ந்தேறியுள்ள நேரத்தில் சமூக வலைதளத்தில் பதிய வேண்டிய அவசியம் என்ன?
இதுவும் ஒரு வகை அரசியல்
அப்படி ஒரு சட்டம் வருவதாகவே கொள்வோம்
ஒரு பட்டியல் இனத்தவர் அய்யராக மாற விரும்புகிறார்
அவரை அய்யர் என்று யார் அங்கீகரிப்பது
ஒரு இந்து கிறிஸ்தவராக மாறுவது என்றால் அவர் ஏதோ ஒரு தேவாலயத்திற்கு செல்ல வேண்டும்
அங்கு அந்த தேவாலயத்தின் தலைவர்
அதாவது அந்தத் திருச்சபையின் குருமார் அவரை கிறிஸ்தவராக ஏற்பார்
ஒரு கிறிஸ்தவர் இந்துவாக மாறுவது என்றால் அவர் ஒரு ஏதேனும் ஒரு திருமடத்திற்கு சென்று அந்த மடத்தின் அதிபதியை அல்லது குருமகா சன்னிதானத்தை சந்தித்து தன் விருப்பத்தைக் கூறினால்
முறைப்படி அந்த குரு இவரை இந்துவாக அங்கீகரிப்பார்
இஸ்லாத்திற்கும் இதே வழிமுறைதான்
இப்படி மதம் மாறியவர்கள் அதற்கான சான்றுகளோடு அரசு இதழிலில் அதை வெளியிட்டு தங்களது மதமாற்றத்தை உறுதி செய்ய வேண்டும்
இப்போது சாதிக்கு வருவோம்
சாதி மாற விரும்பிய ஒரு பட்டியை இனத்தவரை யார் அய்யராக ஏற்பது?
மதம் மாறுவதைப் போலவே இதையும் கொள்வதெனில் ,
கவிஞர் அப்படித்தான் சொல்கிறார்
அய்யர் பட்டியல் இனத்தவரை அய்யர் ஒருவர் அய்யர் என அங்கீகரிக்க வேண்டும்
அல்லது
ஒரு செட்டியார் பிள்ளையாக மாறுவதெனில் எந்தப் பிள்ளையேனும் ஏற்பாரா
இல்லை இவை எல்லாம் வைரமுத்துவிற்குத் தெரியாதா?
தெரியும் என்பதுதான் அரசியல்
கொதிநிலை உச்சத்தில் சாதியே இல்லை என்று சட்டம் இயற்றுங்கள் என்றும்
சாதியற்ற சுடுகாடு என்று சட்டம் இயற்றுங்கள் என்றும்
கொதிநிலை வரும்
வரும் என்பது கவிஞருக்கும் தெரியும்
அதுதான்,
சன்னமாக மடைமாற்றுகிற காரியம் இது
அவர் சொல்ல வருவதும்
நாம் புரிந்துகொள்ள வேண்டியதும் இதுதான்
சாதி இருக்கட்டும் என்கிறார்

Saturday, August 12, 2023

வெட்டிய குழந்தைகளும் கருவிகள்தாம்

 


நாங்குநேரி சம்பவம் குறித்து நான் எழுதியதைப் படித்துவிட்டு
என்ன சார்,
வெறியோடு வெட்டிச் சாய்த்தவங்களையும் குழந்தைகள் என்கிறீர்கள்
வெட்டிச் சாய்க்கப்பட்டு மருத்துவமனையில் போராடிக்கொண்டிருப்பவர்களையும் குழந்தைகள் என்கிறீர்களே
கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லையா?
என்று நண்பர்கள் கேட்கிறார்கள்
மனசோடுதான் இருவரையும் குழந்தகள் என்று விளிக்கிறேன்
வெட்டப்பட்டவர்கள் திங்கள் முதல் சில நாட்களுக்கு பள்ளிக்கு வர முடியாது
வெட்டியவர்கள் பள்ளிக்கு வர பல காலம் ஆகும்
இரண்டிற்காகவும் வருந்துகிறேன்
பிரியத்திற்குரியவர்களே
அருவாள் மட்டும்தான் கருவி என்று கருதுகிறீர்களா?
வெட்டிய குழந்தைகளும் கருவிகள்தாம்
சாதி அருவாளையும் நம் முகவரிகளையும் நம் குழந்தைகளிடம் கொடுத்து அனுப்பி இருக்கிறது
”நம் குழந்தைகளிடம்” என்பதை அடிக்கோடிட்டு எடுத்துக் கொள்ள வேண்டுமாய் அன்போடு இறைஞ்சுகிறேன்
சாதி அவர்களது குழந்தைகளின் கைகளில் அரிவாளைக் கொடுத்து அனுப்பி இருப்பதாய் கொள்வது இந்த பிரச்சினையை நாம் நுனி மேய்வதாக ஆகும்
குழந்தைகள் கைகளில் அருவாள் வந்திருக்கிறது
இது நமக்கு மட்டுமல்ல
சாதி கொண்டாடுபவர்களுக்கும் ஆபத்தானது
கொஞ்சம் யோசித்துப் பார்ப்போமா
குழந்தை எப்ப படிக்கிறான் என்று கேட்கிறோமே தவிர
எப்போதாவது
குழந்தை எப்படி மற்றவர்களிடம் பழகுகிறான் என்று கேட்டிருக்கிறோமா?
இந்த மனநிலை பழுதானதல்லவா
என்ன மதிப்பெண் எடுக்கிறான்
போட்டித் தேர்வுகளுக்கு தோதான பாடத் திட்டமா என்பதுவரை கேட்குமளவிற்கு வந்திருக்கிறோம்
இருக்கிற பாடத் திட்டம் அன்பான பிள்ளையாக மாற்றுமா என்று கவலைப் பட்டிருக்கிறோமா?
நம்மை மாற்றிக் கொள்வோம்
அரிவாளோடு அனுப்புகிறார்கள்
நான் அன்பும் புன்னகையுமாய் அவர்களுள் நுழைவோம்
எவ்வளவு காலமாகும் தெரியாது
சக மனிதனை நேசிக்கச் சொல்லித் தருகிற கல்வித் திட்டத்தைக் கேட்போம்

அவர்கள் புரிந்துகொள்ளுகிற மொழியை நாம் கற்க வேண்டும்

 


அன்பிற்குரிய முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு,
வணக்கம்
இடைநிலைக் கல்வி இறுதித் தேர்வில் குழந்தைகளை ஐநூறு மதிப்பெண்ணிற்கு ஐநூறு மதிப்பெண் எடுக்க வைத்திருக்கிறோம்
மேல்நிலைக் கல்வி இறுதித் தேர்வில் குழந்த்சிகளை அறுநூறு மதிப்பெண்ணிற்கு அறுநூறு மதிப்பெண் எடுக்க வைத்திருக்கிறோம்
மகிழ்ச்சிதான்
தைவானிற்கு நமது குழந்தைகள் (அரசு பள்ளியில் படித்த ஏழைக் குழந்தைகள்) ஜெயஸ்ரீ மற்றும் ஜெயலெட்சுமி இருவரும் இளநிலைக் கல்வியைப் படிப்பதற்காக செல்வதாக இன்றைய தீக்கதிர் கூறுகிறது
பெரு மகிழ்ச்சி
நாங்குநேரியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் சின்னத்துரை என்ற குழந்தையையும் பத்தாம் வகுப்பு படிக்கும் அவனது சகோதரி செல்வியையும்
ஐந்தாறு குழந்தைகள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிச் சாய்த்துவிட்டு திரும்பி இருக்கிறார்கள்
அரிவாள்களோடு வந்து வெட்டிவிட்டு சென்று பிடிபட்டிருக்கிற யாரையும் சிறைக்கு அனுப்ப இயலாது
அவர்கள் அனைவரும் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகள்
விளையாடு பொருட்களோடு திரிய வேண்டிய குழந்தைகள்
இவர்கள் கைகளில் அரிவாளைக் கொடுத்த கொடுத்த சக்தி எது?
அதைத் தேடிக் கண்டடைந்து
அதை இல்லாமல் செய்ய வேண்டியதுதான் நமது முதல் வேலையாக இருக்க வேண்டும் முதல்வர் சார்
அவர்கள் வெட்டுவதை நேரில் பார்த்த பெரியவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார்
எனில்,
வெட்டியது மட்டுமல்ல,
அவர்கள் கண்களில் இருந்த வெறி
அவர்கள் செயலில் தெரித்த வெறி
அவர்கள் அப்போது பயன்படுத்திய சொற்களின் பின்னிருந்த வெறித்தனம்
இவை எல்லாம் சேர்ந்துதான் அவருக்கு மாரடைப்பைத் தந்திருக்க வேண்டும்
இதற்கெல்லாம் என்ன காரணம் என் அன்பிற்குரிய ஸ்டாலின் சார்?
சாதி
சின்னத்துரையை முன் மாதிரியாகக் கொள்ளுமாறு குழந்தைகளிடம் ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள்
எங்களுக்கு அவன் முன் மாதிரியா? என்று கொதித்திருக்கிறார்கள்
வெட்டுப்பட்ட சின்னத்துரை ஒன்றும் மனு கொடுத்து பட்டியல் இனத்தைச் சார்ந்த அந்தப் பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறக்கவில்லை
இவர்களும் யாருக்கும் மனு கொடுத்து அந்தந்த இடைச்சாதி பெற்றோருக்குப் பிள்ளைகளாகப் பிறக்கவில்லை
அவனவன் அந்தந்தப் பிரிவில் பிறந்தது அவனவன் விருப்பப்படி அல்ல
அந்தப் பிரிவுகளே கேவலமானவை ஆகும்
எந்தக் குழந்தையும் கேவலத்தை ஏற்பவர்கள் இல்லை
அப்புறம் எப்படி இவர்கள் அரிவாள் எடுக்கிறார்கள்?
கேவலத்தைப் புனிதம் என்றும் பெருமை என்றும் குழந்தைப் பருவத்தில் இருந்து நிலாவைக் காட்டி இவர்களுக்கு ஊட்டி வளர்த்திருக்கிறார்கள்
நாம் செய்ய வேண்டியது
இதை உடைக்க வேண்டும்
எப்படி உடைப்பது?
நாமும் இது கேவலம் என்பதை
இது அறத்திற்கு எதிரானது என்பதை
நிலாவைக் காட்டி குழந்தைக்கு சோறூட்டுவதுபோல ஊட்ட வேண்டும்
அதற்கான பாடத்திட்டம் அவசியம்
என் பிரியத்திற்குரிய முதல்வர் அவர்களே,
அந்தக் குழந்தை பள்ளிக்குப் போக அச்சமாக இருக்கிறது எனவே தான் பள்ளிக்கு போகவில்லை என்று தாத்தாவிடமும் அம்மாவிடமும் அழுதிருக்கிறான்
அவர்கள் ஆசிரியர்களிடம் முறை இட்டிருக்கிறார்கள்
எனில்,
ஆசிரியர்கள் இது குறித்து குழந்தைகளிடம் பேசியிருப்பார்கள்
எனில்
இவை அனைத்தையும் ஏற்கிற மனநிலை அந்தப் பிள்ளைகளுக்கு இல்லை
ஏன்?
பிறகு என்ன செய்யலாம்?
வெறியேறிக் கிடக்கிறார்கள் என்று விட்டுவிடலாமா சார்?
கூடாது
அவர்கள் புரிந்துகொள்ளுகிற மொழியை நாம் கற்க வேண்டும்
இவர்களை JJ போர்டில் நிறுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்புவதால் மட்டும் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடாது
அதைச் செய்யவும் வேண்டும்
என்ன செய்யலாம் என்பதைக் கூடிப் பேச வேண்டும் சார் முதலில்
சனாதனத்தை எதிர்க்கும் நம்மிடமும்
சனாதனத்திற்கு எதிராகக் களமாடும் நம்மிடமும்

சனாதனத்திடம் சமர் செய்யும் போக்கு இருக்கிறது சார்
இருக்கிறது சார்
இல்லாவிட்டால்
பெரம்பலூர் பொதுத் தொகுதியானதும் ஆ.ராசாவை பெரம்பலூரில் இருந்து நீலகிரிக்கு அனுப்புவோமா?
குழந்தைகள் சனாதனத்திற்கு பலியாவதை தடுக்க வேண்டுமெனில்
அதற்கு,
நாம் சனாதனத்திடம் சமரசம் செய்யக்கூடாது சார்
புரியும் உங்களுக்கு
கூப்பிடுங்கள்
வந்து உங்களோடு உரையாடக் காத்திருக்கிறோம்
சொல்லுங்கள் செய்யக் காத்திருக்கிறோம்
அன்பும் முத்தமும் முதல்வர் சார்
அன்புடன்,
இரா.எட்வின்
12.08.2023

Friday, August 11, 2023

வழக்கம் போலவே திருமிகு நிர்மலா பொய் சொல்கிறார்

 


எல்லாக் காலத்திலும் தமிழைப் போலவே இந்தியும் சமஸ்கிருதமும் விருப்ப மொழிகளாக பள்ளிகளில் உள்ளன
மீண்டும் சொல்கிறேன்
தமிழ்நாட்டில்
ஆங்கிலம் கட்டாய மொழிப் பாடம்
இந்தி, ஃப்ரெஞ்ச்,சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளைப் போலவே தமிழும் ஒரு விருப்ப மொழி
அவ்வளவுதான்
தமிழே படிக்காமல் தமிழ்நாட்டில் உயர் கல்வியை முடித்து விடலாம் என்ற அவலம் தான் இன்னமும் உள்ளது
இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பதுகூட
மூன்றாவது கட்டாய மொழியாக இந்தியைத் திணித்தது எதிர்த்து தான்
1965 வாக்கில் கூட இந்தி ப்ரக்சார சபாக்கள் தமிழ் நாட்டில் இயங்கியது என்றே அறிகிறேன்
ஆனால்,
தமிழ்நாட்டில் தங்களை இந்தியும் சமஸ்கிருதமும் படிக்க விடவில்லை என்று கூறுகிறார் ஒன்றிய நிதி அமைச்சர்
வேறொன்றுமில்லை,
வழக்கம் போலவே திருமிகு நிர்மலா பொய் சொல்கிறார்

03

 


நெட்டி முறிக்கிறது
உன் முதல் ரசிகனின்
உன் சொற்களுக்கான தவம்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...