Showing posts with label கண்டனம். Show all posts
Showing posts with label கண்டனம். Show all posts

Friday, June 3, 2022

ஓராண்டு சிறை என்கிறார்கள்

 நண்பரோடு சேர்ந்து சித்து தாக்கியதில் முதியவர் இறந்திருக்கிறார்

இது கொலை
வழக்கு 35 ஆண்டுகளாக நடக்கிறது
ஓராண்டு சிறை என்கிறார்கள்
அவ்வளவுதானா?
நியாயம்தானா?

முகநூல்
26.0502022

Saturday, July 31, 2021

இது ஒன்றிய அரசின் தோல்வி

 மிசோரம், அசாம் எல்லைத் தகறாறு மனிதப் பலியில் நிற்கிறது

இது ஒன்றிய அரசின் தோல்வி என்கிறார் ராகுல்
விமர்சிப்பதால் மட்டும் மாறிவிடாது
பாஜகவிற்கு எதிராக ஒன்று திரட்டுங்கள்
அல்லது அவர்கள் அழித்துக் கொண்டே இருக்க
நீங்கள் விமர்சித்துக் கொண்டே இருக்க
நாங்கள் அழிந்துகொண்டே இருப்போம்

29.07.2021

இரண்டும் பிஜேபி ஆளும் மாநிலங்கள்

 ஒன்றியம் என்றால் கோவம் வருகிறது அவர்களுக்கு

ஒரே நாடு என்கிறார்கள்
மிசோரம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைத் தகறாறில் இதுவரை ஐந்து காவலர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்
இரண்டு முதல்வர்களும் திட்டிக் கொள்கிறார்கள்
இரண்டும் பிஜேபி ஆளும் மாநிலங்கள் என்பது தகவலுக்காக

29.07.2021

Thursday, July 8, 2021

ஒன்றியம் முழுக்க இந்த இயக்கம் ...





 

UAPA சட்டத்திற்கு எதிராக

கொடுஞ்சட்டத்தால் சிறையிருப்போரை விடுவிக்கக் கோரி
இன்று மாலை வள்ளுவர் கோட்டம் அருகே CPM நடத்தும் கண்டண இயக்கம்



விசிக உரிமையோடும் உணர்வோடும் அதில் பங்கேற்கிறது
திமுகவும் காங்கிரசும் கலந்துகொள்ள வேண்டும் என்பதே நமது ஆசை
கூட்டணிக்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப் பெரிய கண்டன இயக்கத்தை திமுக முன்னெடுக்க வேண்டும்
ஒன்றியம் முழுக்க இந்த இயக்கம் வீரியத்தோடு கொண்டுசெல்லப்பட வேண்டும்

Sunday, June 6, 2021

அவரது மௌனமும் இவரது எதிர்வினையும்

 ஒரு பள்ளியில் சில ஆசிரியர்கள் அந்தப் பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்

100 பக்க வாக்குமூலம் என்கிறார்கள்
சினிமாவிற்கு அழைத்துப் போனேன் என்கிறார்
கருக்கலைப்பு நடத்தினேன் என்கிறார்
சக ஆசிரியர்களுக்கு அனுப்பி வைத்தேன் என்கிறார்
வயிறு பத்திக் கொண்டு எரிகிறது
இத்தகைய சூழலில் எதிர்க்கட்சிகள்தான் நெருப்பாய் சுழலும்
எதிர்க்கட்சித் தலைவரை இதுகுறித்து கேட்கிறார்கள்
எதிர்க்கட்சித் தலைவர் ஏதும் பேசாமல் கடக்கிறார்
முன்னாள் அமைச்சர் வளார்மதியோ இதெல்லாம் ஒரு கேள்வியா என்கிறார்
அவரது மௌனமும் இவரது எதிர்வினையும் அந்தக் குற்றத்திற்கு சற்றும் சளைத்தது அல்ல

Monday, June 12, 2017

குறைந்தபட்சம் குடிநீரையேனும்

நேற்று நெய்வேலியில் நடைபெற்ற கடலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் உரையாற்றிவிட்டு வந்தேன். அது குறித்து பிறகு பேசலாம். CITU வின் இரண்டாவது சுரங்கக் கிளை வெளியிட்டிருந்த துண்டறிக்கை ஒன்று கிடைத்தது. அதில் பத்துப் பதினைந்து கோரிக்கைகள் இருந்தன.
ஏறத்தாழ இத்துப்போன நிலையிலிருக்கும் லாரியில் சுரங்க ஊழியர்களுக்கு குடிநீர் வழங்கப் படுகிறது. இதனால் நீரோடு இரும்புத்துருவும் கலந்து வந்து விடுகிறது. அதனால் ஊழியர்களின் உடல்நலம் ம்கவும் பாதிக்கப் படுகிறது. எனவே சில்வர் கண்டெய்னர்களி குடிநீர் கொண்டுவந்து வழங்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றாத நிர்வாகம் இப்போதேனும் அதை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை இருந்தது.
சுரங்கத்திற்குள் கரியோடு கரியாய் வெந்து சாகும் ஊழியர்களை பலமுறை இதற்காக கோரிக்கை வைக்க வைத்ததே பாவம்.
குறைந்தபட்சம் நல்ல குடிநீருக்காவது நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்

Wednesday, March 29, 2017

என் மரணம் தாண்டியும்

"என் மரணம் தாண்டியும் ஆசான் வாழனும் மாப்ள"
"பெரிய மனசுடா ஒனக்கு"
"ஆனா, நான் செத்ததுக்கப்பறம் தாறுமாறா எதனாச்சும் எழுதிடுவாரோனுதான் பயமாருக்கு"
"பயப்படதாடா மாப்ள, ஒன்னப் பத்திதான் அவருக்கு ஒன்னும் தெரியாதே. அப்புறம் எப்படி ஒன்னப் பத்தி எழுதுவார்"
"அவரு தெரிஞ்சத மட்டும் எப்படா மாப்ள எழுதியிருக்கார்"

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...