Tuesday, June 17, 2025

காரணம் எவனெனினும்

 


காரணம் எவனெனினும்

ட்ரம்ப் எனினும்

நெதனெனினும்

அவன் யார் தொழும் கடவுளே ஆயினும்

நாசமா போகட்டும்


17.06.2025

கூடாது என்றால் எந்தவொரு நாட்டிலும் கூடாது

அணுகுண்டு ஈரானில் இருக்கலாமா வேண்டாமா என்பதை 5400 அணுகுண்டுகளை வைத்திருக்கும் அமெரிக்கா தீர்மானிக்கக்கூடாது

கூடாது என்றால் எந்தவொரு நாட்டிலும் கூடாது
யாராக இருப்பினும் தங்களிடம் உள்ள அத்தனை அணு குண்டுகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு பிறகு வந்து பேசட்டும்

கவிதை 12/2025

 ஏவுகணைகள்

நொறுக்கிப்போட்ட
கட்டடங்களின்
சிதிலங்களின்மேல் நின்றபடி
உலகோடு
உரையாடிக்கொண்டிருக்கும்
பத்திரிக்கையாளனின்
இடது காலை
ஏதோ நிமிண்ட
குனிந்து பார்க்கிறான்
அட்டைமாதிரி
ஏதோ ஒன்று
வலது காலால்
தட்டிவிட்டு
விவரணையைத்
தொடர்கிறான்
மீண்டும்
அதே இடது காலை
ஏதோ நிமிண்ட
அட்டையாகத்தான்
இருக்கும் என்று
குனிந்து பார்க்காமலே
சிதிலங்களில் சிக்கிக்கொண்டிருக்கும்
குழந்தையின் விரலை
வலது காலால் தட்டிவிட்டு
விவரணைகளைத்
தொடர்கிறான்
அந்த செய்தியாளன்

Thursday, June 12, 2025

இவ்வளவு ஈனத்தனமா எல்லாம் பேசக்கூடாது

 



தம்பி நீங்க மரியாதைக்குரிய ஒன்றிய அமைச்சர்
இவ்வளவு ஈனத்தனமா எல்லாம் பேசக்கூடாது

வந்து சந்திக்கிறேன் ஜெயதேவன் தோழர்

 




தோழர் ஜெயதேவன்,
சுகன் எனக்களித்த பெருங்கொடை
என்மீது கொஞ்சம் மிகையான மதிப்பீடு வைத்திருந்தவர்
அதை பொதுவெளியிலும் வெளிப்படையாக வைத்தவர்
அதை அவர் வைத்த விதம் அவருக்கு கொஞ்சம் எதிர்ப்பைக் கிளப்பியது
நானே சன்னமாக எதிர்த்தேன்
அது அப்படித்தாங்க எட்வின். ப்ரோஸ்னா எனக்கு எட்வின்தான். நான் அப்படித்தான் சொல்வேன்
அதுதான் ஜெயதேவன்
நான் பாரா பிரிக்கும் விதத்தை இதுவரை நன்கறியப்பட்ட நான்கு எழுத்தாளர்கள் கொஞ்சம் நீண்டே என்னோடு பேசி இருக்கிறார்கள்
இருவர் தாங்களும் அந்த வடிவத்தை கையெடுக்க முயற்சிப்பதாகவும் சொன்னார்கள்
இதை கொஞ்சம் எழுதுங்களேன். எனக்கும் கொஞ்சம் கௌரவம் அல்லவா என்றேன்
நான்கு ஐந்து ஆண்டுகளாக ஏதும் நடக்கவில்லை
இதை ஜெயதேவன் முகநூலில் எழுதினார்
தனது ஒரு நூலை எனக்கு காணிக்கையாக்கினார்
அப்போதெல்லாம் திண்டுக்கல்லில் வருடத்திற்கு நான்கு கூட்டங்களாவது வரும்
அப்போது அவரும் நன்றாக இருந்தார். வந்துவிடுவார்
காக்கையின்மீது மிகுந்த அன்பு வைத்திருந்தவர்
நான்கு தலைமுறைக் கவிஞர்களைக் கண்டவர்
கவிதையில் எனக்குத் தெரிய இவரளவு தொடர்ந்து அப்டேட் ஆனவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம்
எழுபதுகளில் எழுத ஆரம்பித்தவர்
கால வரிசையாக அவரது நூல்களைப் படித்தால் அவரது மொழியாளுமை நம்மை பிரமிக்க வைக்கும்
இறுதியாக எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் மிஸ் பண்ணுவதாக எழுதியிருந்தார்



வந்து சந்திக்கிறேன் தோழர்
அன்பும் முத்தமும்











Wednesday, June 11, 2025

முருகன் எங்கள் பிள்ளை

  மரியாதைக்குரிய அமித்ஷா,

வணக்கம்
தேர்தலைத் தவிர வேறு எதுகுறித்தும் கலைப்படவே மாட்டீர்களா நீங்கள்?
வெள்ளம் வந்து மக்கள் தத்தளித்தபோது வந்துபார்க்காத நீங்கள்
தேவையான உதவிகளை செய்யாத நீங்கள்
எங்கள் மக்களுக்குரிய பணத்தை தர மறுக்கிற நீங்கள்
பூரி ஜெகநாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறை சாவியை ஏதோ தமிழ்பூமி களவாண்டுகொண்டு வந்ததுவிட்டது என்று
தமிழ் மண்ணை இழிவுபடுத்திய நீங்கள்
தேர்தலுக்காக முருகனைத் தூக்கிக்கொண்டு எம் மண்ணை எதிர்கொள்ள முயற்சி செய்கிறீர்கள்
முருகன் எங்கள் பிள்ளை
முருகன் எங்கள் தகப்பன்
முருகன் எங்கள் தோழன்
நீங்கள் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிடும் அதே மதுரையில்தான்
கணவன் இறந்ததும் அழுது சிவந்த விழிகளோடு அரண்மனை வாசலுக்கு வந்த கண்ணகி அங்கிருந்த வாயிற்காவலினிடம்
”வாயிலோயே
வாயிலோயே
அறிவு அறை போகிய
பொறி அற நெஞ்சத்து
இறை முறை பிழைத்தோன்
வாயிலோயே”
என்பாள்
அறிவு முற்றிலும் கீழற்றுப்போய் அற நினைவு சிறிதும் இல்லாத அரசநீதி தவறிய பாண்டியனின் காவலனே
உங்களது அறிவாற்றல் எனக்குத் தெரியும். உறுப்பினர்களே இல்லாத மாநிலங்களிலும் ஆட்சியை அமைத்த எதிமறை அறிவின் உச்சம் நீங்கள்
ஆகவே முதல் பகுதியை எடுத்து விடுகிறேன்
”அற நினைவு சிறிதும் இல்லாத அரசநீதி தவறிய மன்னனின் காவலனே” என்று கண்ணகி உங்கள் மாளிகை வாசல் காவலர்களிடம் பேசுவது போலவே உள்ளது

Tuesday, June 10, 2025

“புதிய ஆசிரியன்” ஆலோசனைக்கூட்டம் 01

 



09.06.2025
மதுரை
“புதிய ஆசிரியன்” ஆலோசனைக்கூட்டம்
ஏதோ ரொம்ப சீரியசா பேசுவதாவெல்லாம் நினைக்க வேண்டாம்

புதிய ஆசிரியன்" ஆலோசனைக் கூட்டம்

  


09.06.2025

மதுரை "புதிய ஆசிரியன்" ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு

இடமிருந்து வலமாக

1) மதுரை சரவணன், 2) நான், 3) பேராசிரியர் கே.ராஜு 4) கலகல வகுப்பறை சிவா

Sunday, June 8, 2025

உபரி

  10 மணி நேரம் வேலை என்கிறார் சந்திரபாபு

அப்போதுதான் உற்பத்தி அதிகரிக்கும் என்கிறார்
தொழிலாளிகளை அதிகப்படுத்தி உற்பத்தி பெருகினால் அது உற்பத்தி அதிகரிப்பு
வேலை நேரத்தைக் கூட்டி அதன் மூலம் அதிகரிக்கும் உற்பத்தி
உற்பத்தி
உபரி லாபம்
உபரி குறித்து பேசவேண்டும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...