Friday, July 24, 2020

கவிதை 006


அவரை இயக்குவது பலம் மிக்கவர்கள் என்பது கடந்து நம் எதிரிகள்



வழக்கு பதிவு சரி

ஏன் கைது செய்யவில்லை?

அவரை இயக்குவது பலம் மிக்கவர்கள் என்பது கடந்து நம் எதிரிகள்

எனவே அனைத்துக் எதிர்க் கட்சியினரும் ஒன்றினைந்து அவரது கைதைக் கோரி களமாட வேண்டும்

வழக்கு நீர்த்துப் போகாமல் முன்னெடுக்க வேண்டும்


24.07.2020
மதியம்

திரு குருமூர்த்தி சொல்லும் 60 பார்ப்பன எம்எல்ஏக்கள் என்பதும்

திரு SV சேகர் ஏதோ உளறிக் கொண்டிருப்பதாக நம்மில் பலர் கருதுகிறோம்
“ஹிந்து மதத்தின் உயரிய பீடமான பிராமணர்களை”
என்று அவர் சொன்னது
மிக மிக கவனமாக அவர்கள் யோசித்து ஆழமான பரிசீலனைக்குப்பின்
அவர்மூலமாக வந்தவை
அது மதநம்பிக்கையுள்ள இந்துக்கள் பரிசீலிக்க வேண்டியது
நான் மதமற்று தெய்வ நம்பிக்கையற்று வாழலாம்
எனது கவர் படம் பாருங்கள்
அது என் அம்மாயி
காளியம்மாள்
எனக்கு இரண்டு அம்மாக்கள்
பெத்தவர் எலிசபெத்
பார்த்ததில்லை அவரை
ரெண்டாவது அம்மா முனியம்மா
எப்பவும் நெற்றியில் நீறு அல்லது பட்டை
தம்பி இந்து பெண்ணை மணந்தான்
இறைநம்பிக்கையில்லாத நானும் கிறித்தவரான விட்டுவும் அப்பா அம்மாவாக அவன் கருதுவதாலும் ஊர் மக்களின் அன்பிற்கும் கட்டுப்பட்டும் அனைத்து சடங்குகளிலும் நின்று நான் விரும்பவே விரும்பாத பாத வணக்கத்தை ஏற்றவன்
தங்கை இந்து குடும்பம்
பழுத்த கிறிஸ்தவரான அப்பா இறந்தபோது
அவர்மீது இருந்த அன்பின் நிமித்தம் தெரு அண்ணன்களும் மாமாக்வளும் சித்தப்பன் பெரியப்பாக்களும் கேட்டதற்கிணங்க இந்துமுறைப்படி இந்துக்களுக்கான இடுகாட்டில் அடக்கம் செய்தோம்
தெருக்கார சொந்தங்கள் குளித்து பட்டைபோட்டு தண்ணீர் சுமந்துவந்தபோது அந்த அன்புகண்டு அழுதவன்
கருமாதியின் போது அப்பாவை மாமா என்று அழைத்த எங்கள் தெரு இந்துக்கள் மாமா மச்சினன் சீர் செய்தனர்
இவர்கள் எல்லோரும் இந்துக்கள்
இவர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று திரு சேகர் சொல்கிறார்
இது அவரது சொந்தக் கருத்தென்று யாரும் சொல்லவில்லை
எனவே இது அவர் மூலமாக வெளிவந்த அவர்களது கருத்துதான்
இதை மீண்டும் நிறுவுகிற முயற்சியைத் தொடங்குகிறார்கள்
இந்துக்கள் இதை எதிர்க்க வேண்டும்
அவர்களுக்கு இந்த ஆபத்தைக் கொண்டுபோக வேண்டும்
அதே நேரத்தில் இந்த பார்ப்பன கொக்கரிப்புக்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான பிராமணர்கள் உள்ளனர்
இதற்கு எதிரான களத்திலும் தீவிரமாக உள்ளனர்
அவர்களை அன்போடும் மரியாதையோடும் அரவணைத்து கரமிணைக்க வேண்டும்
அப்புறம்
ரஜினி நினைத்தால் பத்துநாளில் முதல்வராகலாம் என்பதையும் போகிற போக்கில் கொள்ளக் கூடாது
அது பல்ஸ் பார்ப்பதற்கான ஏற்பாடு
ரஜினியை முதல்வராக்கி தேரதலை எதிரகொள்வது பிஜேபியின் ஹிடன் அஜென்டாவாக இருக்கலாம்
அதற்கு மறுத்தால் 11 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வரலாம்
கவர்னர் ஆட்சியோடு தேர்தலை சந்திக்கவும் அவர்கள் விரும்புகிறார்கள்
குருமூர்த்தி சொல்லும் 60 பார்ப்பன எம்எல்ஏக்கள் என்பதும்
திரு முருகன் சொல்லும் 15 பிஜேபி எம்எல்ஏக்கள் என்பதும்
உளறல் அல்ல
அவர்களது இலக்கு
கவனமாகவும் கூர்மையாகவும் செயல்பட வேண்டிய நேரம்

எம்மதமும் சம்மதமில்லை...


Monday, July 20, 2020

இந்தியாவை விற்பதற்கான ஆதரவாளர் என்று

தொலைக் காட்சி வழி உரையாடலை மத்திய அரசு தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கிறது
அதில் ஒரு பகுதி வெற்றியும் பெற்றிருக்கிறது
அதற்காக இதற்கு முன்புவரை ஏதோ நியாயமான உரையாடலை ஊடகங்கள் வழங்கி வந்ததாகக் கொள்ளத் தேவை இல்லை
ஒருநாள் வலதுசாரி ஆதரவாளார் என்று ஒருவர் வருவார்
அவரே மறுநாள் சங்கரமட ஆதரவாளர் என்று வருவார்
அவரே மறுநாள் அல்லது அதே நாளில் இன்னொரு நேரத்தில் இன்னொரு தொலைக் காட்சியில் பாஜக காரராக விவாதத்தில் கலந்து கொள்வார்
இன்னும் இந்தியாவை விற்பதற்கான ஆதரவாளர் என்று ஒருவரும் வந்ததில்லை என்று நினைக்கிறேன்
ஒருக்கால் அதுவும் நிகழ்ந்து இருக்கக்கூடும்
ஐந்து பேர் விவாதத்திற்கு என்று கொண்டால்
நிச்சயம் மூன்றுபேர் சமயங்களில் நான்குபேர் அவர்களாகவே இருப்பார்கள்
அவர்கள் பேசுவதைவிட கத்துவதே பெரும்பான்மை நேரங்களில் நிகழும்
Aazhi Senthil Nathan சொன்னதுமாதிரி நமது கருத்தாளர்கள் பெரும்பாலும்
”தற்காப்பு ஆட்டத்தைத்தான்” ஆட வாய்த்தது
ஆனால் அதை நம் நண்பர்கள் மிகச் சரியாக செய்தனர்
வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவர்களை அம்பலப்படுத்தவும் செய்தனர்
இதையே அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை
அதற்கு நியாயமான காரணம் உண்டு
அவர்களது பிரதிநிதிகள் நிறைய பேசினாலும்
நமது மக்கள் குறைவாகவே பேசினாலும்
அதிலும் குறுக்கீடுகள் இருந்தாலும்
நமது நண்பர்கள் மக்களிடம் போய் சேர்ந்தார்கள்
அவர்கள் அம்பலப்பட்டு நின்றார்கள்
பாஜகவின் மிகப்பெரிய கனவு
“தமிழ்நாடு”
இந்த அளவிலான விவாதங்கள்கூட தங்களுக்கு ஆபத்தானவை என்று மிகச் சரியாக உணர்ந்தார்கள்
அவர்களுக்கான குரலைத் தவிர மற்றவற்றை மௌனப்படுத்திவிட முடிவெடுக்கிறார்கள்
விவாதிக்கும் நண்பர்களுக்கும் தொல்லை தந்திருக்கலாம்
அடுத்து அதையும் அவர்கள் தரக்கூடும்
வழக்குகள் பாயலாம்
சிரமப்படுத்தலாம்
அதற்கு முன்னதாக மக்கள் நலனில் ஆதரவு நிலையோடு இருந்த நெறியாளர்களை நெருங்கி இருக்கிறார்கள்
தோழர் அருணன் பேசும்போது,
ஆழியின் மொழியுரிமை விவாதத்தின்போது
புன்னகைத்த நெறியாளர்களையும் அவர்கள் கணக்கெடுத்திருக்கக் கூடும்
அதற்கான சாணக்கிய ஆளுமைகள் தமிழகத்தில் இல்லையா என்ன?
பட்டியல் ரெடி
அவர்கள் நம்புவது இதைத்தான்
ஏற்கனவே உள்ள மூவரோடு நெறியாளரும் சேர்ந்து நண்பர்களை அழுத்த வேண்டும்
நாம் போகாத நிலை வந்தாலும் அவர்களுக்கு மகிழ்ச்சியே
ஆனால் அவர்கள் நினைப்பது நடக்காது
காரணம் இப்போதைக்கு விவாதங்களை மக்கள் பார்ப்பதே நம் நண்பர்களின் செய்தியை, விவாதத்தைக் கேட்பதற்காகத்தான்
இவர்களும் இல்லை எனில்
மக்களுக்கு அது போரடிக்கும்
சரி முடிப்போம்,
ஊடக உரையாடலுக்கான வாய்ப்பு நமக்கு குறைந்திருக்கிறது என்பதை உணர வேண்டும்
நியாயமான ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை எப்படி எதிர்கொள்வது என்று தீர்மானிக்க வேண்டும்
”யூட்யூப்” உள்ளிட்ட ஊடகங்களைக் கையெடுக்க வேண்டும்
சிறு சிறு துண்டுப் பிரசுரங்கள்
தெருமுனைக் கூட்டங்கள் என்று
மக்களோடு உரையாட ஏராளமான வழிகள் உள்ளன
நம்பிக்கையோடு நகர்வோம்

Sunday, July 19, 2020

004

ரொம்பக் 
கனக்கிறது
வயிறு முட்ட பசி

கவிதை 003

இருட்டும் இருட்டும்
இருட்டில் கலந்து
இருட்டில் பிறந்த
இருட்டு நான்
இருட்டைத் தின்று
இருட்டைக் குடித்து
இருட்டைக் கக்கி
இருட்டைப் பேள
இருட்டால் துடைத்து
இருட்டால் எடுத்து
இருட்டில் எறிவாள்
என் தாய் இருட்டு
இருட்டை உடுத்தி
இருட்டை சுமந்து
இருட்டை மிதித்து
இருட்டை இழுத்து
இருட்டைப் பிடித்தபடி
இருட்டைக் கடக்க முயலும்
இருட்டு நான்
இருட்டில்
இருட்டோடு நாங்கள்
நடந்துகொண்டே இருப்பது
எங்கள் பேரப்பிள்ளைகளுக்கான
வெளிச்சத்திற்காக
சன்ன வெளிச்சத்திற்கே
கண்கள் கூசும் எங்களைக்
கிண்டல் செய்யாதீர்
தலைமுறை தலைமுறையாய்
எங்களுக்கான வெளிச்சத்தையும் சேர்த்தே
தின்று வளர்ந்தவர்கள் நீங்கள்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...