Sunday, June 10, 2012

இன்றைக்குமில்லை...

பத்து தேய்த்து
பாத்திரங்கள் கழுவி
முகத்தைக் கழுவி
முந்தியால் ஒற்ற
கண்ணில் பட்டது
பழக் கூடை

நுனி கூட அழுகாத
மாம்பழங்கள்
இந்த வீட்டிலும்

இன்றைக்குமில்லை
மகனுக்கு
மாம்பழம்


இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...