10 மணி நேரம் வேலை என்கிறார் சந்திரபாபு
Sunday, June 8, 2025
உபரி
Monday, January 15, 2024
என்ன நியாயம் இது?
பாலின் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தி இருக்கிறது மாநில அரசு
நாங்கள் பெரம்பலூர் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் இருந்துதான் பால் வாங்குகிறோம்
மாதா மாதம் முதல் தேதில் இருந்து நான்காம் தேதி வரைதான் பால் அட்டை வழங்கப்படும்
இந்த மாதம் அட்டை வாங்கிய பிறகுதான் கொள்முதல் விலையை அரசு உயர்த்துகிறது
மிக நல்ல விஷயம்
கொள்முதல் விலை உயர்ந்ததால் விற்பனை விலையை நான்கு ரூபாய் உயர்த்தியது பால் உற்பத்தியாளர் சங்கம்
இதுவும் சரி
அட்டை வாங்கியவர்கள் மிச்சத் தொகையை செலுத்தினால்தான் பால் தொடர்ந்து பெற முடியும் என்று பா. உ.சங்கம் பால் விநியோகிப்பவர்கள் மூலம் தெரிவித்தது
இதுவும் சரி
கட்டி விட்டோம்
அட்டையில் இரண்டாவதாக PAID என்று வைத்திருக்கும் சீல் அதற்கானது
எல்லாமே சரி
அரசு கொள்முதல் விலையை உயர்த்துகிறது
நீங்கள் விற்பனை விலையை உயர்த்துகிறீர்கள்
அரசு உயர்த்திய கொள்முதல் விலை தங்களுக்கு வரவில்லை பால் உற்பத்தியாளார்கள் பெரம்பலூரில் போராட்டம் நடத்தியதை14.01.2024 நாளிட்ட தீக்கதிர் கூறுகிறது
என்ன நியாயம் இது?
Wednesday, January 10, 2024
வேண்டாம் ஸ்டாலின் சார்
அன்பின் ஸ்டாலின் சார்,
Sunday, January 7, 2024
இந்தியாவைக் காப்பாற்றுவதற்கு
Thursday, January 4, 2024
தெரிந்து கொள்ளும் ஆவல்தான்
Tuesday, January 2, 2024
அந்த அழுகைச்சத்தமாக வருகிற எழுத்துதான் எழுத்து
எப்பாடு பட்டேனும் பள்ளிக்குள் கொண்டு சேர்த்துவிட வேண்டும்
Friday, November 3, 2023
பாஜக நிலைக்கு முரண்படுகிறார் ரவி என்பது ஒன்று
பட்டம் பெற்ற குழந்தைகளையும் அறிஞர்களையும் அழைத்து
Thursday, November 2, 2023
தமிழ் நாடு அரசு அனைவரையும் உள்ளடக்க வேண்டும் என்ற முனைப்போடு
ஏராளம் செலவழித்து ஏராளமாக திகழ்ச்சிகளை நடத்துகிறது
அரசு நடத்தும்
அல்லது அரசின் ஏதோ ஒரு வகையிலான ஒத்துழைப்போடு நடைபெறும்
புத்தகக் கண்காட்சிகள் உள்ளிட்ட கலைவிழாக்களை அரசு இன்னும் எச்சரிக்கையோடு கண்காணிக்க வேண்டும் என்று கேட்கிறோம்
மயிலாடுதுறையில் நடந்த கலைத் திருவிழாவில் ஏகத்திற்கும் குளறுபடிகள் என்று செய்திகள் வருகின்றன
ஒன்றிய அல்லது வட்ட அளவில் வெற்றி பெற்ற குழந்தை மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் உண்மை எனில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
விழாக்களில் பங்கேற்பவர்களின் பட்டியல் நியாயமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்
துண்டு போடறான் என்று சொன்னாலும் கவலை இல்லை
ஏன் நான் இல்லை என்று ஒவ்வொருவருக்கும் உள்ள கேட்கும் உரிமையை உள்ளடக்கியதே இது
இது குறித்து தோழர் Sukirtha Rani இரண்டு நாட்களுக்கு முன்னர் எழுப்பிய கேள்வியையும்
"புத்தகம் பேசுகிறது அக்டோபர் 2023" தலையங்கத்தையும் வழிமொழிகிறேன்
Wednesday, October 13, 2021
"MADE IN TAMIL NADU"
"MADE IN TAMIL NADU" என்கிற கருத்தாக்கத்தை முதல்வர் அறிவித்திருக்கிறார்
Wednesday, November 14, 2018
ஆதலினால்கவாத்துசெய்வோம்
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
நடு வானத்திற்கும் மேற்கே இரண்டு மூன்று முழங்களைக் கடந்திருந்தான் சூரியன். கழுத்தில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்தவாறே கூவிக் கூவி கடவுள்...
-
சென்ற ஆண்டு இதே மாதிரி ஒரு மழை நாளில் கீர்த்தனாவோடு அமர்ந்து ஏதோ ஒரு செய்தி சேனலைப் பார்த்துக் கொண் டிருந்தேன். வழக்கமாக செய்தி சேனலை விர...



