ஒன்றிற்கொன்று தொடர்புடையதும் மிக முக்கியமானதுமான மூன்று செய்திகளை 28.07.2026 தீக்கதிரில் பார்க்க வாய்த்தது.
25.07.2026 அன்று பீகாரில் நீட் தாள் கசிவிற்கு எதிராக டில்லியில் நடந்த ஆர்ப்பட்டத்திற்கு ஆதராக பீகாரில் ஒரு பந்திற்கு SFI உள்ளிட்ட இடதுசாரி மாணவர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.
இதில் கடையை அடைத்துவிட்டு சாலையில் நடந்து வந்த 15 வயது சலீமை பீகார் காவலர் ஒருவர் AK 47 துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.
நல்வாய்ப்பாக கழுத்தில் இருந்து குண்டு எடுக்கப்பட்டு பிள்ளை நலமாக இருக்கிறான்.
AK 47 காவலருக்கு எப்படி வந்தது? அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இது போதாது. அவரைக் கைது செய்ய வேண்டும்.
கரப்பான் பூச்சிகள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டார்கள் என்பதற்காக மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையனவர்கள் முஸ்லிம் என்று அர்பா கானும் ஷெர்வானி என்ற பத்திரிக்கையாளர் கூறுகிறார்.
டில்லி போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டோர்மீது வழக்கெதுவும் இருக்காது. அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது.
இது மீறப்படுவதாகவும். சரி செய்யப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்றும் CJP செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் கூறுகிறார்.
பாஜகவிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
காணாமல் போனவர்கள் யாரேனும் உள்ளனரா என்பதையும் கண்டடைய வேண்டும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்