இந்தப் படத்தை தம்பி Senthil Vel பக்கத்திலிருந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தப் படத்தோடு,
போராடும் தோழமைக் கட்சிகளுக்கே பாதுகாப்பில்லை. மக்களுக்கெங்கே பாதுகாப்பிருக்கப் போகிறது என்று சொல்லியிருந்தார்.
உண்மைதான். என்ன, போராடுவது யாரெனினும் எந்த ஆட்சியிலும் பாதுகாப்பில்லை என்பதுதான் கள எதார்த்தம்.
அவிநாசிக்கு அருகேயுள்ள ஈட்டி வீராம்பாளையத்திலுள்ள அறிவொளி நகரில் வீட்டு நிலமற்ற மக்களுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டது.
இது நடந்தது 1994 இல்.
ஆனால் அந்த நிலங்களை அளந்து பயனாளிகளுக்கு இதுவரை வழங்கவில்லை.
இது தொடங்கியபோது ஜெயலலிதா முதல்வர்
பிறகு 1996 முதல் கலைஞர் முதல்வர்
2011 முதல் மீண்டும் ஜெயலலிதா முதல்வர்
பிறகு பன்னீர் செல்வம் முதல்வர்
பிறகு பழனிசாமி முதல்வர்
அதன்பிறகு என் ஆயுளின் சிறந்த முதல்வர் என்று நான் கருதும் ஸ்டாலின் முதல்வர்
இப்போது விஜய்
எல்லோரது காலத்திலும் போராடியாயிற்று
எல்லோரிமும் அடிவாங்கியாயிற்று
இப்போதும் 15 நாட்களுக்குள் அளந்து தருவதாகக் கூறியிருக்கிறார்கள்.
இல்லையென்றால் 17.08.2026 அன்று மீண்டும் வருவோம்
அடிவாங்குவோம்
அந்த ஏழைகளுக்கு நிலம் கிடைக்கும்வரை மகிழ்ச்சியோடு அடி வாங்குவோம்
அவ்வளவுதான் செந்தில்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்