Tuesday, July 28, 2026
வன்னியரசுவிற்கு இது தெரியும்.
அந்த ஏழைகளுக்கு நிலம் கிடைக்கும்வரை மகிழ்ச்சியோடு அடி வாங்குவோம்
இந்தப் படத்தை தம்பி Senthil Vel பக்கத்திலிருந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தப் படத்தோடு,
போராடும் தோழமைக் கட்சிகளுக்கே பாதுகாப்பில்லை. மக்களுக்கெங்கே பாதுகாப்பிருக்கப் போகிறது என்று சொல்லியிருந்தார்.
உண்மைதான். என்ன, போராடுவது யாரெனினும் எந்த ஆட்சியிலும் பாதுகாப்பில்லை என்பதுதான் கள எதார்த்தம்.
அவிநாசிக்கு அருகேயுள்ள ஈட்டி வீராம்பாளையத்திலுள்ள அறிவொளி நகரில் வீட்டு நிலமற்ற மக்களுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டது.
இது நடந்தது 1994 இல்.
ஆனால் அந்த நிலங்களை அளந்து பயனாளிகளுக்கு இதுவரை வழங்கவில்லை.
இது தொடங்கியபோது ஜெயலலிதா முதல்வர்
பிறகு 1996 முதல் கலைஞர் முதல்வர்
2011 முதல் மீண்டும் ஜெயலலிதா முதல்வர்
பிறகு பன்னீர் செல்வம் முதல்வர்
பிறகு பழனிசாமி முதல்வர்
அதன்பிறகு என் ஆயுளின் சிறந்த முதல்வர் என்று நான் கருதும் ஸ்டாலின் முதல்வர்
இப்போது விஜய்
எல்லோரது காலத்திலும் போராடியாயிற்று
எல்லோரிமும் அடிவாங்கியாயிற்று
இப்போதும் 15 நாட்களுக்குள் அளந்து தருவதாகக் கூறியிருக்கிறார்கள்.
இல்லையென்றால் 17.08.2026 அன்று மீண்டும் வருவோம்
அடிவாங்குவோம்
அந்த ஏழைகளுக்கு நிலம் கிடைக்கும்வரை மகிழ்ச்சியோடு அடி வாங்குவோம்
அவ்வளவுதான் செந்தில்
காணாமல் போனவர்கள் யாரேனும் உள்ளனரா
Thursday, January 15, 2026
எளிய மக்களுக்காக நிற்பதும்
இன்றைய பொங்கல் பொழுதை மகிழ்ச்சிப் படுத்திப் போயிருக்கிறார்கள் மில்ட்டன் கிராமத்தான், சேகுவாரா, சுபஸ்ரீ மற்றும் அவர்களோடிருந்த மூன்று பிள்ளைகள்
Thursday, January 1, 2026
அவனோடு நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறேன்
Al யில் அவனது குறும்பு
பெரம்பலூர் இடதிற்கான என் நம்பிக்கை அவன்
ஆசை ஆசையாக அவனோடு நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறேன்
வருவான்
Wednesday, December 24, 2025
Wednesday, December 17, 2025
57 என்பது 62 ஆக மாறி இருக்கிறது
Friday, July 11, 2025
எவனடா எங்களின் முகவரி கேட்டவன்
Wednesday, July 9, 2025
நாங்கள் எப்போதும் C/O மக்கள்
அன்பின் எடப்பாடி சார்,
Sunday, June 8, 2025
உபரி
10 மணி நேரம் வேலை என்கிறார் சந்திரபாபு
Monday, May 5, 2025
கனவு காண காசும் வேண்டும்
தோழர் சுபவீ முதன்முறையாக லண்டன் போனபோது கேட்கிறார்கள்
பார்க்க வேண்டிய இடங்கள் எவை
முதலும் முத்தாய்ப்புமாக ஒரு கல்லறை என்கிறார்
கண்கள் விரிய கேட்டவர் சொல்கிறார்
காரல் மார்க்ஸ் கல்லறை...
ஆம்
இதைப் படித்தபோது கீர்த்தியிடம் சொன்னேன்
அதெற்கெல்லாம் காசிருக்கனும்
நீ மொதல்ல போய் அவர் இருந்திருந்தாலும்
அவராலும் உன் கல்லறைக்கும் வரமுடியாது
ரெண்டுபேரும் காசில்லாதவர்கள்
அப்போது அவள் எட்டு அல்லது ஒன்பாதம் வகுப்பில்
இன்று அவள் MD நீட்டிற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறாள்
மாறவில்லை எதுவும்
முத்தம் மார்க்ஸ்
Friday, April 11, 2025
மொழி உயிரனையது
17.07.1903
ரஷ்ய சமூக- ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் பிரஸ்சல்சில் தொடங்குகிறது
கிட்டத்தட்ட 13 அமர்வுகள் அங்கு நடந்த நிலையில்
காவல்துறை அடாவடி செய்யவே
அடுத்த அமர்வுகள் லண்டனுக்கு மாற்றப்படுகிறது
கிட்டத்தட்ட அனைத்து அமர்வுகளுமே போல்ஷிவிக்குகளுக்கும் மென்சிவிக்குகளுக்கும் இடையிலான போராட்டங்களால் நிறைந்து கசிகிறது
மென்சிவிக்குகளின் தலைவராகவே காங்கிரஸ் முழுவதும் செயல்படுகிறார்
மொழிகளின் சமத்துவம் குறித்து பிரச்சினையிலும் குடிமக்களின் சம உரிமையே போதுமானது என்கிறார் மாரித்தவ்
இதை மிகச் சரியாக இதை எதிர்கொள்கிறார் லெனின்
தேசிய இனங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் உள்ளன
சில தேசிய இன மக்கள் தங்களது தாய்மொழியைப் பயன்படுத்தக் கூடாது என்று தடுக்கப்படுகிறார்கள்
எனவே மொழிகளின் சமத்துவம் என்பது முக்கியமானது என்கிறார்
மொழி உயிரனையது
Wednesday, April 9, 2025
சோசலிச எதிர்ப்பு உரையை...
காங்கிரஸ் இயக்கத்தில் இரட்டை உறுப்பினர் முறை அங்கீரிக்கப் பட்டிருந்த காலம்.
Monday, April 7, 2025
கம்யூனிஸ்டுகள் இல்லாவிட்டால் இந்தியா இருக்குமா?
எங்களை கிண்டல் செய்பவர்களுக்கு (விமர்சிப்பவர்களுக்கு அல்ல) எனக்கும் தோழர் யெச்சூரிக்கும் வேறுபாடெல்லாம் இல்லை
Sunday, April 6, 2025
நெகிழ்ச்சியும் நன்றியும்
தங்களிடமிருந்து பிரிந்து வந்த கட்சியின் அகில இந்திய மாநாட்டை வாழ்த்தும் CPI
நெகிழ்ச்சியும் நன்றியும்
மதுரை
06.04.2025
Thursday, April 3, 2025
இந்தியாவும் சிவக்கும்
மாநாட்டில் எங்கேனும் வைப்பதற்காக தோழர் ஜெயசீலன் கேட்டார்
Wednesday, April 2, 2025
கவிதை 04 /2025
படித்தோரை
Friday, March 28, 2025
பார்த்ததில் இருந்து கிடந்து பிசையுது
டில்லி பாபு
10 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்
கண்ணியமான அரசியல்வாதி
இதை போராட்டமாகக்கூட கொள்ள முடியாது
திண்டிவனத்தில் இருந்து ஆந்திரா நகரி வரைக்குமான மற்றும் NH 205 தேசிய நெடுன்சாலைத் திட்டத்திற்குமாக நிலம் கொடுத்த திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு இதுவரை உரிய இழப்பீடு கிடைக்கவில்லை
அதற்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், CPM கட்சியும் போராடிக்கொண்டிருக்கின்றன
அதன் ஒரு பகுதியாக 26.03.2025 அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கப் போனபோதுதான்
தோழர் டில்லி பாபு இப்படி நடத்தப்பட்டிருக்கிறார்
திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் திரு அந்தோணி கெட்டவார்த்தைகளால் வைதபடியே டில்லி பாபுவை இழுத்து போய் கைது செய்திருக்கிறார்
மாவட்ட ஆட்சித் தலைவரைப் பார்த்து மனு கொடுப்பது என்பது அவ்வளவு மோசமான செயலாகிப் போனதா என்பதை ஸ்டாலின் சார் விளக்க வேண்டும்
பாலியல் வழக்கு
காவல்துறை விசாரனைக்கு அழைக்கிறது
“முடியாது இப்ப என்ன பன்னுவ” என்று ஆணவத்தோடு பேச, கூடியிருந்தவர்கள் குதூகலித்துக் கொண்டாடியதை வேடிக்கைப் பார்க்கிறது தமிழ்நாடு காவல்துறை
ஒரு வழியாக விசாரனைக்கு வருகிறார். கோஷத்தோடு அவரை வரவேற்க ஒரு கூட்டமே காவல்நிலையம் முன்பு திரள்கிறது
சேனல்களுக்கு பேட்டி கொடுக்கிறார்கள்
காவலர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்
நியாயமா ஸ்டாலின் சார்
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
நடு வானத்திற்கும் மேற்கே இரண்டு மூன்று முழங்களைக் கடந்திருந்தான் சூரியன். கழுத்தில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்தவாறே கூவிக் கூவி கடவுள்...
-
“ சாதி ஒடுக்குமுறை உள்ள அல்லது சமத்துவமற்ற எதனோடும், அது தமிழ்த் தேசியமாகவே இருப்பினும் அதனோடு எனக்கு சம்மதம் இல்லை” சென்னை இக்ஷா அரங்கத...


