Showing posts with label காங்கிரஸ். Show all posts
Showing posts with label காங்கிரஸ். Show all posts

Friday, May 23, 2025

சசி தரூரை காங்கிரஸ் சகிப்பது என்பது துயரம்

 பகல்காம் தாக்குதல்

அதை ஒட்டி இரு நாடுகளுக்குமிடையே நடந்த சண்டை
சண்டை நிறுத்தம்
இது கடந்து இது குறித்தான பாராளுமன்ற நிலைக்குழு
நிலைக் குழுவின் தலைவராக காங்கிரஸ் கட்சியின் சசிதரூர்
எழுதுகிறார்,
காங்கிரஸ் வெளியுறவுக் கொள்கை
பாஜக வெளியுறவுக் கொள்கை
இரண்டும் வேறு வேறல்ல
இந்திய வெளியுறவுக் கொள்கைதான்
இதை அவர் எழுதிய அதே நாளில் 14,000 பாலஸ்தீனக் குழந்தைகள் உணவின்றி மரணிக்க இருப்பதாகவும்
உணவு அனுப்ப யாரையும் அனுமதிக்க இஸ்ரேல் மறுப்பதாகவும் செய்தி
பிறகு உணவு போனது வேறு
இது பாஜகவிற்கு உவப்பானது
அது இஸ்ரேல் சார்பானது
காங்கிரசும் அப்படியா தரூர்?
சசி தரூரை காங்கிரஸ் சகிப்பது என்பது துயரம்

Wednesday, April 9, 2025

சோசலிச எதிர்ப்பு உரையை...

 காங்கிரஸ் இயக்கத்தில் இரட்டை உறுப்பினர் முறை அங்கீரிக்கப் பட்டிருந்த காலம்.

இடதுசாரி சிந்தனை கொண்டவர்களும் இடது சாரிகளும் சோசலிஸ்ட் கட்சியிலும் காங்கிரஸ் கட்சியிலும் உறுப்பினராக இருந்தனர். தமிழ் நாட்டில் தோழர்கள் பி. ராமமூர்த்தி, ஜீவா போன்றவர்கள் இதில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
சோசலிசத்தையும் சோவியத் ரஷ்யாவையும் அறவே பிடிக்காத பல தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர்.
சோவியத்தையும் சோசலிசத்தையும் வறட்டுத்தனமாக எதிர்த்தவர்களில் ஒருவர் மினுமசானி. அவர் போகும் இடங்களில் எல்லாம் அவை இரண்டிற்கும் எதிராக நஞ்சைக் கக்கும் வழக்கத்திலிருந்தார்.
அவர் ஒரு முறை சென்னையில் பேச வந்திருந்தார். அவர் பேச இருந்த பகுதி அங்கிருந்த அப்போதைய இளம் தோழர்களால் சோசலிச மற்றும் சோவித் ஆதரவை பூசிக் கொண்டிருந்தது.
பேச வந்திருந்த மினு மசானிக்கு இந்த விவரம் எடுத்துச் சொல்லப் பட்டது. தனது சோவியத் மற்றும் சோசலிச பேச்சிற்கு என்ன வரவேற்பு இருக்குமோ என்ற அச்சத்தோடுதான் மினு மசானி பேசினார். ஆனாலும் கொஞ்சமும் சமரசமின்றி தன் நிலையினின்று கொஞ்சமும் பிசகிப் போகாமல் சகட்டுமேனிக்கு கிழி கிழி என்று சோவியத்தையும் சோசலிசத்தையும் கிழித்துப் போட்டார்.
திரண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டாடியது.
எல்லோரும் சொல்வது போல் இல்லை. இங்கும் சோவியத் மற்றும் சோசலிச எதிர்ப்பே இருக்கிறது என்று மகிழ்ந்து திரும்பினார்.
எல்லாம் தெரிந்ததாய் நினைத்திருந்த அவருக்கு தெரியாமல் போனது இதுதான்,
அவரது ஆங்கில பேச்சினை தமிழில் பெயர்த்துக் கொண்டிருந்த தோழர் பி. ராமமூர்த்தி அவர்கள் அவரது சோவியத் மற்றும் சோசலிச எதிர்ப்பு உரையை ஆதரவு உரையாக மொழி மாற்றியிருந்தார்.

09.04.2025

Tuesday, September 26, 2023

உறுதியாக சொல்கிறோம் காங்கிரசும் பாஜகவும் ஒன்றல்ல

 காங்கிரஸ் என்னங்க

பிஜேபி என்னங்க

ரெண்டும் ஒன்றுதானே 

இப்ப அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இருக்குன்னா

அவங்க காலத்தில் எமர்ஜென்சியே அமலில் இருந்ததே

அவங்க விற்க ஆரம்பித்தாங்க
இவங்க விற்றுக் கொண்டு இருக்கிறார்கள் 

அவ்வளவுதானே

ரெண்டுக்கும் இடையில் அப்படி என்ன வித்தியாசத்தைக் கண்டு பிடித்தீர்கள் என்பவர்களுக்கு

எமர்ஜென்சியை இந்திரா காந்தி கொண்டுவந்ததையோ அதன் கொடூரமான விளைவுகளையோ இல்லை என்று மறுக்கவில்லை

அதே இந்திராகாந்தி தான் எமர்ஜென்சியைக் கொண்டு வந்ததற்காக மக்களிடம் மன்னிப்பைக் கேட்டார்

இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது கிட்டத்தட்ட இரண்டாயிரம் சீக்கியர்கள் கொல்லப் பட்டனர்

அப்போது அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி,

”ஒரு ஆலமரம் சாய்ந்தால் மண் அதிரத்தான் செய்யும்” என்று திமிராக பதில் சொன்னார்

ஆனால்

அந்தப் படுகொலைகளுக்காக சோனியா காந்தி காங்கிரச் சார்பாக மக்களிடம் வருத்தம் தெரிவித்தார்

சரியாக தெரியாததால்தான் வருத்தம் தெரிவித்தார் என்று சுறுக்கிக் கொள்கிறேன்

என் நினைவின் ஒரு மடிப்பு அவர் மன்னிப்பு கேட்டதாகவே சொல்கிறது

இப்போது நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில்
ஏறத்தாழ 90 செயலர்கள் ஒன்றிய அரசில் இருப்பதாகவும் அவர்களில் மூன்றே மூன்றுபேர் மட்டுமே ஓபிசி பிரிவைச் சார்ந்தவர்கள் என்றும்
இது திட்டங்களை வகுப்பதிலும் செயல்படுத்துவதிலும் ஓபிசியினரை பாதிக்காதா என்று ராகுல் கேட்கிறார்

உடனே

இதே நிலைதானே காங்கிரஸ் அரசாங்கத்தின்போதும் இருந்தது என்று பிஜேபி சொன்னபோது

ஆமாம், அதற்காக நான் வருந்துகிறேன்
I REGRET என்று கூறிய ராகுல்
ஆட்சி தங்களிடம் வரும்போது அதை சரிசெய்வோம் என்கிறார்

செய்த தவறுகளை உணர்வதும் தாம் செய்த தவறுகளால் விளைந்த விளைவுகளுக்காக வருந்துவதும் தம் தவறுகளினால் பாதிக்கப் பட்டவர்களிடம் மன்னிப்பு கோருவதும் நல்ல தலைவனின் அடையாளம்

அந்த இடத்திற்கு சன்னம் சன்னமாக ராகுல் வருகிறார்

உறுதியாக சொல்கிறோம்

காங்கிரசும் பாஜகவும் ஒன்றல்ல 

Wednesday, October 5, 2022

யார் காங்கிரசின் தலைவர் என்பது காங்கிரசின் வேலை

 காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நடக்க இருக்கிறது

தேர்தலில் போட்டியும் இருக்கிறது
போட்டியில் திரு மல்லிகார்ஜுனே அவர்களும் போட்டியிடுகிறார்
இதுவெல்லாம் அவர்களது உட்கட்சி விஷயங்கள்
இந்த நிலை காங்கிரஸ் கட்சியில் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடும்
அந்த வகையில் காங்கிரஸ் உத்வேகம் பெறுவது இந்த நாட்டுக்கும் நல்லதே
தேர்தலில் போட்டி இருக்கிறது என்ற வகையில் போட்டியாளர்கள்
ஏன் தான் வெற்றிபெற வேண்டும் என்றும்
ஏன் தன்னை எதிர்த்து போட்டி இடுபவர் தோல்வி அடைய வேண்டும் என்றும் கட்சி வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்வது இயல்பானது
அவர் யார், இவர் யார்
யார் கட்சிக்குத் தேவை என்று அந்தக் கட்சியனர் கூடி விவாதிப்பதும் புரிந்துகொள்ளக் கூடிய ஒன்று
காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக யார் வந்தால் நமக்கு வசதி என்று மற்ற கட்சிகள்
குறிப்பாக பாஜக எதிர்பார்ப்பதையும் புரிந்துகொள்ள முடியும்
யார் காங்கிரசின் தலைவராக வரவேண்டும் என்று கார்பரேட் முதலாளிகள் விரும்புவதும் இயல்புதான்
யார் வந்தால் பாஜக மதவெறி பாசிச எதிர்ப்பு வலுப்படும் என்ற கணக்கை பொதுமக்கள் போடுவதும் ஏற்கக்கூடியதுதான்
இந்தி எழுத்தாளர் ஆதேஜ் ராவல் காங்கிரஸ் கட்சியின் தேர்தலில் திரு மல்லிகார்ஜுனே போட்டியிடுவது குறித்து எழுத வரும்போது
”கருப்புக் குதிரையைவிட கருப்பானவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுகிறார்”
என்று எழுதி உள்ளதைக் கண்டித்து ஆசிரியர் வீரமணி 02.10.2022 விடுதலையில் எழுதி உள்ளார்
பிரச்சினை எழுந்ததும்
குதிரை பேரம் நடக்கிறது,
கருப்பு பணம் விளையாடுகிறது
அதைப் பற்றிதான் எழுதினேன் என்று சமாளிக்க முயன்று அம்பலப்பட்டு நிற்கிறார்
நானொன்றும் காங்கிரஸ்காரன் அல்ல
ஆனாலும்
அதேஜ் ராவலின் குரல் சனாதனத்தின் குரல்
காங்கிரசில் யார் வரவேண்டும் என்பதற்கு இவருக்கு காரணம் இருக்கலாம்
அதுகுறித்து எழுதலாம்
ஆனால் மல்லிகார்ஜுனே கருப்பு நிறத்தவர்
ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர்
ஆகவே அதை இவர் கிண்டல் செய்வார் என்றால்
காங்கிரசிற்கு உயர்சாதியை சார்ந்தவர், வெள்ளை நிறத்தவர்தான் வரவேண்டும் என்ற இவரது சனாதனப் புத்தி முந்திரிக்கொட்டையைவிட வேகமாக முன்னுக்கு வந்து நிற்கிறது
இவர் கருப்பு நிறத்தவர்
ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல
அவர் சனாதனத்திற்கு எதிராகவும் மதச்சார்பின்மைக்கு ஆதரவாகவும் தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுப்பவர்
அதில் இரண்டு சம்பவங்களையும் ஆசிரியர் தருகிறார்
27.11.2015 அன்று பாராளுமன்றத்தில்
மதச்சார்பின்மை, சமதர்மம்” ஆகியவை அம்பேத்கார் அறியாதவை என்றும்
அரசமைப்பு சட்டத்தின் 42 வது திருத்தமாக அவை சேர்க்கப்பட்டதாகவும்
ஆகவே ”மதச்சார்பின்மை” என்ற வார்த்தையையே ஒழிக்க வேண்டும் என்று
ராஜ்நாத்சிங் பேசியவுடன் எழுந்த மல்லிகார்ஜுனே
அந்த இரண்டு வார்த்தைகளும் அம்பேத்கார் கொண்டுவர நினைத்த வார்த்தைகள் என்றும்
அவர்கள் தடுத்துவிட்டதாகவும் கூறியதோடு நில்லாமல்
“நீங்கள் ஆரியர்கள், வேறு நாடுகளில் இருந்து வந்தவர்கள்
நாங்கள் 5000 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறோம். ஆனாலும் இங்குதான் வசிப்போம்”
என்றும் கூறுகிறார்
நான் ஆரியன் அல்ல, இந்த மண்ணின் மகன்” என்று மல்லிகார்ஜுனே பேசியதுதான் அவர்களின் கோவத்திற்கு காரணம்
மல்லிகார்ஜுனே ஆரியன் அல்ல
அவர் ஒடுக்கப்பட்ட பிரிவை சேர்ந்தவர்
அதுமட்டும் அல்ல
அவர் அதை உணர்ந்தவராகவும்
அதற்கு எதிராடுபவராகவும் இருக்கிறார்
ஆகவே அவர் காங்கிரசின் தலைவராகக் கூடாது என்று காங்கிரசிற்கு வெளியே இருக்கும் ஆரியர்கள் கத்துகிறார்கள்
யார் காங்கிரசின் தலைவர் என்பது காங்கிரசின் வேலை
மல்லிகார்ஜுனே வெற்றி பெறலாம்
தோற்கலாம்
தோற்றால்
அது இந்தக் காரணத்தினால் என்று இருக்கக் கூடாது
அவ்வளவுதான்
#சாமங்கவிய 50 நிமிடங்கள்
03.10.2022

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...