Monday, November 9, 2020

இந்தத் தீர்ப்பு இவர்களை உற்சாகப்படுத்திவிடக் கூடும்

 10.12.2019

ஹிதேஷ் ஷர்மாவின் வீட்டிற்கு சென்ற அந்த தலித் பெண் அவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள நிலத்தை தருமாறு கேட்கிறார்

அவரை வீட்டிற்குள் அடைத்து சாதியின் பெயரால் ஹிதேஷ் ஷர்மாவின் குடும்பம் அந்தப் பெண்ணை அவமானப் படுத்துகிறது

11.12.2019 அன்று அந்தப் பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கிறார்

எஸ் சி , எஸ்டி சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது

அதை எதிர்த்து ஹதிஷ் ஷர்மா உச்சநீதிமன்றம் போகிறார்

வெளியாட்கள் பார்க்க தலித்தை அவமானப் படுத்தினால்தான் எஸ்.சி, எஸ்.டி வழக்கு போட முடியும்

இந்த வழக்கைப் பொறுத்தவரை

அந்தப் பெண் வீட்டுக்குள் வைத்து அவமானப் படுத்தப் பட்டதாக சொல்லப்படுவதாலும்

அப்போது யாரும் இருந்து பார்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்படாததாலும்

இந்த அவமானம் பொது இடத்தில் நடக்கவில்லை என்று உறுதியாவதால்

இந்ந வழக்கை எஸ் சி, எஸ்டி பிரிவில் தொடுக்க இயலாது என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது

என்கிற தகவலை இன்றைய தீக்கதிரில் பார்க்க முடிந்தது

இவ்வளவு சட்டங்கள் இருந்தே

பீத்தண்ணீரைக் குடிக்கக் கொடுத்தார்கள்

மூத்திரத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள்

நிர்வாணப்படுத்தி அவமானப் படுத்தினார்கள்

இந்தத் தீர்ப்பு இவர்களை உற்சாகப்படுத்திவிடக் கூடும்

வலிக்கிறது

#சாமங்கவிந்து 29நிமிடங்கள்
07.11.2020

கவிதை 08

 முதல் மழைக்கும்

இரண்டாவது மழைக்கும் இடையேயான

இடைவெளி நீ

கவிதை 07

வைப்பர்
அழிக்க அழிக்க
எனக்கான கவிதையை
எழுதிக்கொண்டே இருக்கிறது
மழை










 



Sunday, November 8, 2020

இதையும் இன்றுதான் வாசிக்கிறேன்

 திரு. ஜானகிராம்மூர்த்தி ஒரு வழக்கறிஞர்

நெல்லூர்க்காரர்

பார்ப்பனர்

16.09.1926 அன்று நீலா வெங்கட சுப்பம்மா என்கிற பெண்ணை இரண்டாந்தாரமாக சென்னையில் மணக்கிறார்

இவர் ஒரு திராவிடர்

இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றனர்

ஜானகிராமமூர்த்தி காலமாகிறார்

நீலா அம்மையாரை ஜானகிராமமூர்த்தியின் முதல் மனைவி ஒதுக்குகிறார்

இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றுவதற்கு தனது கணவரின் சொத்துக்களை அனுபவிக்கும் முதல் மனைவி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று ஜில்லா கோர்ட்டில் வழக்கு தொடுக்கிறார்

மாதம் 20 ரூபாய் ஜீவனாம்சம் என்பது தீர்ப்பு

முதல் மனைவி உயர்நீதிமன்றம் போகிறார்

கனவான்கள் திரு பாண்டுரங்கராவ் மற்றும் திரு சோமையா நீதிபதிகள்

இருவரும் பார்ப்பனர்கள்

ஆரியர் திராவிடர் கலப்புமணம் செல்லாது என்பது தீர்ப்பு

அண்ணாவின் ஆரியமாயையில் இருந்து இந்த சம்பவம் எடுத்தாளப்பட்ட 03.11.2020 நாளிட்ட விடுதலையை

இன்று வாசித்தேன்

இது

பிராமணனுக்கும் அவனது சூத்திர மனைவிக்கும் பிறக்கும் குழந்தைக்கு அவனது தந்தையின் சொத்தில் உரிமை இல்லை

என்கிற மநுதர்மத்தின் உத்தரவை ஒட்டியதுதான்

20.04.2019 அன்று கமல் இட்ட ட்விட்டரை தோழர் M S Rajagopal அவரது பக்கத்தில் வைத்திருக்கிறார்

அதில் இசைஞானியோடு இணைந்து மருதநாயகத்திற்காக அவர் எழுதிய பாடலில் இருந்து

"மதங் கொண்டு வந்தது சாதி

மனிதனை விரட்டுது

மநு சொன்ன நீதி"

என்ற வரிகளை வைத்திருக்கிறார்

இதையும் இன்றுதான் வாசிக்கிறேன்

ஒன்றரை வருடத்தில்

மநுசாஸ்திரம் இப்போது புழக்கத்தில் இல்லை. எனவே அதுபற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை என்கிற கமலின் கூற்றையும்

இன்றுதான் பார்க்கிறேன்

#சாமங்கவிந்து2மணி17நிமிடங்கள்

05.11.2020

Thursday, November 5, 2020

பொலிவியத் தேர்தல் 2020

 அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள் இன்று மெல்ல மெல்ல வரத் தொடங்கி இருக்கின்றன

ஒரு நாட்டில் தேர்தல் நடப்பதும் அதை ஒட்டி தேர்தல் முடிவுகள் வருவதும் வழக்கம்தான்

எந்த ஒரு நாட்டின் தேர்தல் முடிவும் ஏதோ ஒரு வகையில் சர்வதேச நாடுகளை பாதிக்கும் என்ற வகையில்

எந்தக் கட்சி வெற்றி பெற்றால் தேவலாம் என்று மற்ற நாடுகள் எதிர்பார்த்துக் காத்திருப்பதும் வாடிக்கைதான்

அந்த வகையில் அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ எல்லா நாடுகளையுமே நிச்சயம் பாதிக்கும் என்பதால்

அதுகுறித்த ஆவல் பேரதிகமாய் இருக்கும் என்பதிலும் அய்யம் இல்லை

அதுவும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரும் இந்நாள் அதிபருமான திரு ட்ரம்ப் தோற்க வேண்டும் என்பதே பலரது ஆசையுமாக இருக்கிறது

ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வந்தால் மட்டும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை அப்படி ஒன்றும் பெரிதாக மாறிவிடப் போவதில்லை

ஜோ பைடன் முன்னனியில் இருப்பதாகத் தெரிகிறது

மாறலாம் என்கிறார்கள்

எல்லாம் இருக்கட்டும்

ஆனால் இந்த தேர்தல்மீது காட்டப்படும் ஆர்வமும் வெளிச்சமும் 18.10.2020 அன்று தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் நடைபெற்ற தேர்தல் குறித்து ஏன் காட்டப்பட வில்லை

மூன்றிற்கு இரண்டு என்ற அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது போயினும்

சோசலிசத்திற்கான இயக்கம் ஏறத்தாழ 55 விழுக்காடுகளுக்கும் கொஞ்சம் அதிகமான வாக்குகளோடு இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைக்கிறது

ஈவோ அதிபராக இருந்த முந்தைய ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்தவரும் இடதுசாரியுமான லூயி ஆர்க் இப்போது அதிபராகிறார்

சென்ற ஆட்சியில் வறுமையை குறிப்பிட்டு சொல்லுமளவு ஒழித்துக் காட்டினார்கள்

பள்ளிகள் மருத்துவமனைகள் சாலைகள் போடப்பட்டன

வளங்களை தேசியமாக்கியதன் விளைவு அது

இவ்வளவையும் சாதித்த ஈவோ அடுத்த நாட்டில் தஞ்சம் புகவேண்டிய தேவை வந்தது

முதலாளித்தவமும் அமெரிக்காவும் மட்டுமல்ல ஈவோவும் அதற்கு காரணம் என்பதை ஆர்க் உணார்ந்தே இருக்கிறார்

அதனால்தான் ஈவோவின் சாதனைகளில் இருந்து எடுக்கவேண்டியதை எடுப்போம் தள்ளவேண்டியதை தள்ளுவோம் என்கிறார்

லித்தியம் வளமானது

பொலிவியாவில் அது ஏராளம் இருக்கிறது

இந்த வளம் அந்த நாட்டின் வளார்ச்சியை இன்னும் இன்னுமாய் நகர்த்த உதவும்

ஆனால் மூன்றில் இரண்டு பங்கு அறுதிப் பெரும்பான்மை இல்லை

சவால் நிறைந்ததாகவே இருக்கும்பொலிவியத் தேர்தல் 2020

சாதிக்கட்டும் ஆர்க்

#சாமங்கவிந்து10நிமிடங்கள்
04.11.2020

Wednesday, November 4, 2020

நோட்டிஸ் என்பது ரொம்பக் குறைவானது

ராமேஸ்வரம் கோவில் உள்ள நகைகளின் எடை குறைந்திருப்பதாகவும்

அதை ஒட்டி அங்கு வேலை பார்க்கும் பார்ப்பனர்கள் 30 பேருக்கு நோட்டீஸ் கொடுக்கப் பட்டிருப்பதாகவும் தெரிகிறது

வெளியே வந்துவிட்டதால் கேட்கலாம்,

1) எவ்வளவு குறைகிறது?

2) எவ்வளவு இருந்தது?

3) எப்படிக் குறைகிறது?

மூன்றாவது அய்யத்தை விளக்கினால்தான் புரியும் என்று நினைக்கிறேன்

5000 உருப்படிகள் இருக்கிறது என்று கொள்வோம். அவற்றின் எடை 100 கிலோ என்றும் கொள்வோம்

எடை குறைந்திருக்கிறது என்று மிக நுட்பமாக கூறப்படுகிறது

5000 உருப்படிகளில் 50 உருப்படிகள் குறைந்தாலும் எடை குறையும்

அல்லது உருப்படிகளின் எண்ணிக்கை குறையாமல் எடை மட்டும் குறைகிறதா?

இரண்டாவது காரணம் எனில் தொழிலில் அறிவுடையவர்கள்:தான் இதை செய்ய முடியும்

ஏற்கனவே பழநி முருகனை சுரண்டி கொழுத்தவர்களாயிற்றே

அதுமாதிரி சுரண்டியோ எடை குறைவான உருப்படிகளை வைத்துவிட்டு எடை அதிகமான உருப்படிகளை எடுத்திருக்கிறார்களா?

எனில் அது திருட்டு அல்லவா

ஏன் சம்பத்தப்பட்டவர்களை இன்னமும் கைது செய்யவில்லை ?

ராமேஸ்வரத்தில் தனக்கொரு கோவிலைக் கட்ட சொல்லி இறைவன் மன்னர் சேதுபதியிடம் கனவில் வந்து கட்டளை இட்டதாகவும்

அதற்கு உதவுமாறு மன்னர் இஸ்லாமியரான சீதக்காதியிடம் கேட்டுக் கொண்டதாகவும்

அவரது உதவியுடன் அந்தக் கோவில் எழுந்ததாகவும்

கல், மணல் உட்பட ஏராளமான தளவாட சாமான்கள் மிச்சப் பட்டதாகவும்

இவற்றைக் கொண்டு இன்னொரு கோவிலைக் கட்டிவிடலாமா என்று மன்னரிடம் சீதக்காதி கேட்டபோது

இறைவனின் கட்டளை எதுவென்று பார்க்கலாம் என்று மன்னர் சொன்னதாகவும்

பிறகொருநாள்,

இறைவன் மிச்சமுள்ள தளவாட சாமான்களைக் கொண்டு ஒரு பள்ளிவாசலைக் கட்ட உத்தரவிட்டதாக மன்னர் சீதக்காதியிடம் சொல்ல

அவற்றைக் கொண்டு கீழக்கரை பள்ளிவாசல் கட்டப்பட்டதாகவும்

ஒரு பெருமையும் மதங்களைக் கடந்த மாண்புமிக்க ஆன்மிக அறமும் நெகிழ்ச்சியுமான ஒரு வரலாறு இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்

ஒரு இஸ்லாமியர் இந்து ஆலயத்தை எழுப்பித் தந்திருக்கிறார்

இந்துக் கடவுள் பள்ளிவாசலைக் கட்ட கட்டளை இட்டிருக்கிறார்

புனைவாகக்கூட இருக்கட்டும்

இந்த அறம் கொண்டாடத் தக்கது

இப்படியான ஒரு இடத்தில் இறைவனுக்கு ஊழியம் செய்பவர்களால் இந்தக் காரியம் நடைபெற்றிருப்பது

கவலைக்குரியது

கண்டிக்கத் தக்கது

தண்டிக்கத் தக்கது

நோட்டிஸ் என்பது ரொம்பக் குறைவானது

நியாயம் வேண்டும்

#சாமங்கவிந்து27நிமிடங்கள்

03.11.2020

Friday, August 28, 2020

விரைவுபடும்

 

16.08.2006

புதன் கிழமை

பிரதமர் தொடக்கம் உள்ளூர் ஊராட்சித் தலைவர் வரைக்கும் கொடியேற்றி விடுதலைநாள் செய்தியை வண்ண வண்ணமாய் வழங்கி இருபத்தி நான்கு மணிநேரம்கூட ஆகியிருக்கவில்லை

அழகர், மகாலிங்கம் என்ற இரண்டு அருந்ததிய இளைஞர்கள்மலக் குழியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மலக்குழியிலேயே மூழ்கி செத்துப் போனார்கள்

மதுரைவீரன், மகாலிங்கம், அழகர் மற்றும் தீரன் என்ற நான்கு அருந்த்திய இளைஞர்களும் மலக்குழியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்

மதுரைவீரன் மலக்குழிக்குள் இறங்குகிறார்.

கழுத்துவரை மலச்சகதி. மேலே தேங்கி இருந்த நீரை வாளியால் மொண்டு அப்புறப்படுத்துகிறார்

35 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாத மலக்குழி

கடுமையான நாற்றம்

பணியைத் தொடர இயலாது என்று கூறுகிறார்கள்

ஒன்றும் ஆகாது என்றும் பேசிய கூலியைவிட 200 ரூபாய் அதிகம் தருவதாகவும் கூறி வேலையைத் தொடருமாறு அந்த வீட்டின் உரிமையாளர் கேட்டுக் கொள்கிறார்

200 ரூபாய் என்பது அந்த இளைஞர்களின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம். எனவே அந்த வேலையை செய்யத் துணிகிறார்கள்

ஒரு கட்டத்தில் மதுரைவீரன் நெடி தாங்காமல் மயங்கி மலக்குழிக்குள்ளேயே விழுகிறார். உடனே அழகரும் மகாலிங்கமும் குழிக்குள் குதித்து மதுரைவீரனை மேலே தூக்கிவிட முயற்சிக்கின்றனர்.. குழிக்கு மேலே நின்றபடி தீரன் மதுரைவீரனை தாங்கி மேலே கிட்த்துகிறார்

மகாலிங்கம் மேலே ஏறிவிடுகிறார். ஆனாலழகர் ஏற முடியாமல் தவிக்கிறார். ஒருகட்ட்த்தில் அவர் மயங்கி மலச் சகதிக்குள் விழுந்து மூழ்கத் தொடங்குகிறார்

அழகரைக் காப்பாற்றுவதற்காக மகாலிங்கம் குழிக்குள் குதிக்கிறார்.. எதிர்பாராதவிதமாக இவரும் மயங்கி சகதிக்குள் மூழ்கத் தொடங்குகிறார்

இதைப் பார்த்த தீரன் மயங்கி விழுகிறார்

எப்படியோ மேலே எடுக்கப்பட்ட மகாலிங்கமும் அழகரும் சிகிச்சை பயனின்றி இறந்து விட்டனர் என்கிற செய்தியை செப்டம்பர் 2006 “தலித் முரசு” சொல்கிறது

வெகுதிரள் அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் மிகுந்த கவனத்தோடும் எச்சரிக்கையோடும் இந்த செய்தியைத் தவிர்த்து விடுகின்றன

அருப்புக்கோட்டையில் நடந்த அந்த சம்பவம் செங்கோட்டையை உலுக்கியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையாவது கொந்தளித்திருக்க வேண்டும்.

ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை

ஆனால் ஒரு கேள்வியை மனசாட்சியுள்ள மனித்த் திரளிடம் அது எழுப்பியுள்ளது

ஒரு 200 ரூபாய் அதிகப்படியான கூலிஉயிரையே காவு கேட்க்க் கூடிய ஒரு தொழிலைச் செய்ய நான்கு இளைஞர்களை நிர்ப்பந்திக்குமானாலந்த இளைஞர்கள் சார்ந்துள்ள சமூகத்தின் பொருளாதாரம் எவ்வளவு கீழே இருக்கும்

இன்னொரு கேள்வியும் எழுகிறது,

இதே பொருளாதார நிலையில் உள்ள மேல்சாதியினர் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்பவர்கள் இன்னும் 500 ரூபாய் கூட கொடுத்தாலும் இந்த வேலையை செய்வார்களா?

செய்வார்கள் எனில் இதை முழுக்க முழுக்க பொருளாதாரப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்

இல்லை எனில் இது பொருளாதாரம் நிர்ப்பந்திக்கும் ஜாதிப் பிரச்சினை

சத்தியமாய் என்ன கூலி கொடுத்தாலும் மேலாய் தங்களை நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த வேலையை ஒருபோதும் செய்ய மாட்டார்கள்

எனவே இது பொருளாதாரத்தால் நிர்ப்பந்திக்கப்படுகிற ஜாதிப் பிரச்சினை

இது ஒருபுறமிருக்க, இட ஒதுக்கீடு ஏதோ தலித் மக்களுக்கு ஏதோ ஏராளத்திற்கும் வழங்கி அவர்களது வாழ்க்கை வளப்பட்டுக் கிடப்பது போலவும்,

அதனால் இவர்களது வாய்ப்பு பறிக்கப்பட்டு தங்களது வாழ்க்கை இருண்டு கிடப்பதாகவும் மேட்டுக்குடித் தெருக்களில் இருந்து கூச்சல் கிளம்புகிறது

இட ஒதுக்கீட்டின் பயனாக வேலை வாய்ப்பினைப் பெற்ற தலித்துகளில் 90 விழுக்காடு பேருக்கு நான்காம் நிலை வேலைவாய்ப்பே கிடைத்துள்ளது என்பதையும்

இடஒதுக்கீடே இல்லாது போயினும் இந்த வேலைகள் இவர்களுக்கே வந்து சேரும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். காரணாம் இந்த வேலைகளை உயர்சாதியினர் ஒருபோதும் செய்ய மாட்டார்கள்

நெல்லை மாவட்டம் தெற்குப்பட்டி சமூகநலத்துறை அமைச்சர் பூங்கோதை அவர்களின் தொகுதியில் உள்ள ஒரு கிராம்ம்

அந்த ஊரில் உள்ள அங்கன்வாடியில் அருந்ததியர் வீட்டுக் குழந்தைகளை சேர்ப்பதில்லை என்கிற செய்தி உண்டு. திட்டமிட்டு இவர்களுக்கு கல்வி மறுக்கப்படுவதையே இது சொல்கிறது

விடுதலைப் பெற்று இத்தனைப் பத்தாண்டுகளுக்குப் பிறகும் , இத்தனைச் சட்டங்களுக்குப் பிறகும் மனிதன் கையால் மைத மலத்தை அள்ளுகிறான் என்பதே கொடுமை. அதற்கும் பல இடங்களில் உரிய கூலி இல்லை என்பது கொடுமையினும் கொடுமை

மாற்று வேலைகளை உருவாக்குவது, இந்த வேலைகளைல் இருந்து இவர்களை மீட்பது என்கிற வேலைத் திட்டங்களை நிர்ப்பந்திக்க்க் கூடிய சக்தி இவர்களிடம் இருக்கிறதா?

சாத்தியமே என்கிற நம்பிக்கையை சமீபத்திய நிகழ்வுக்லள் நமக்குத் தருகின்றன

 

நான் சமீபத்தில் கலந்துகொண்ட பேரணிகளுள் உன்னதமானதும் அதிகப் பொருள் செறிந்த்தும் சத்திய ஆவேசம் நிரம்பி வழிந்த்துமாக நான் கருதுவது 12.06.2007 அன்று அருந்த்தியர்கள் வாழ்வுரிமைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நட்த்தியப் பேரணிதான்

”மூக்கைப் பிடிக்கத் தின்றுவிட்டு சிலர் செய்யும் அசுத்தங்களை மூக்கைப் பிடிக்காமலே சுத்தம் செய்யும் த்குப்புறவுத் தொழிலாளிகளது வாழ்க்கை…” என்று உ.வாசுகி அவர்கள் உரையாற்றத் தொடங்கியபோது பேரணியின் நிறைவிட்த்தை எங்கள் வரிசை அடைந்த்து

“அவனைப்போல இவனைப்போல ஏன் எண்ட்ஷக் கொம்பனையும்போலசகலவிதமான உரிமைகளோடும் வாழப் பிறந்தவர்கள் நீங்கள். இந்த மண்ணின் ஜனக்கள் நீங்களொன்றும் அனாதைகளல்ல, உங்களது வாழ்வுரிமைக்காகத் தோள் கொடுக்க, போராட, தியாகிக்க நாங்கள் இருக்கிறோம் “

என்ற மார்க்சிஸ்டுகளின் வெளிப்பாடாகவே அந்தப் பேரணியைப் பார்க்க முடிந்தது

அதற்காப் போராடும் அமைப்புகளை ஒன்று திரட்டி அரவணைத்த மார்க்சிஸ்ட் கட்சியை மகிழ்வோடு பற்றிக் கொள்ளத் தோன்றுகிறது

மரத்துப்போன மக்கள் எந்த மெட்டுக்குள்ளும் அடங்க மறுக்கும் தங்கள் விடுதலை கீத்த்துடன் வீதியை அளந்த்து நம்பிக்கையைத் தருகிறது

அடங்க மறுக்கும் அவர்களின் விடுதலைத் தேடலும் செங்கொடி இயக்கத்தின் தியாகமும் வியூகமும் அவர்களின் விடுதலையை நிச்சயம் விரைவுபடுத்தும்

இதை உறுதிப்படுத்துவதாக பேரணியின் ஊடாகவே தலைவர்களை முதல்வர் கலைஞர் அழைத்திருப்பது நம்பிக்கையை வலுவாக்குகிறது

Friday, July 24, 2020

கவிதை 006


அவரை இயக்குவது பலம் மிக்கவர்கள் என்பது கடந்து நம் எதிரிகள்



வழக்கு பதிவு சரி

ஏன் கைது செய்யவில்லை?

அவரை இயக்குவது பலம் மிக்கவர்கள் என்பது கடந்து நம் எதிரிகள்

எனவே அனைத்துக் எதிர்க் கட்சியினரும் ஒன்றினைந்து அவரது கைதைக் கோரி களமாட வேண்டும்

வழக்கு நீர்த்துப் போகாமல் முன்னெடுக்க வேண்டும்


24.07.2020
மதியம்

திரு குருமூர்த்தி சொல்லும் 60 பார்ப்பன எம்எல்ஏக்கள் என்பதும்

திரு SV சேகர் ஏதோ உளறிக் கொண்டிருப்பதாக நம்மில் பலர் கருதுகிறோம்
“ஹிந்து மதத்தின் உயரிய பீடமான பிராமணர்களை”
என்று அவர் சொன்னது
மிக மிக கவனமாக அவர்கள் யோசித்து ஆழமான பரிசீலனைக்குப்பின்
அவர்மூலமாக வந்தவை
அது மதநம்பிக்கையுள்ள இந்துக்கள் பரிசீலிக்க வேண்டியது
நான் மதமற்று தெய்வ நம்பிக்கையற்று வாழலாம்
எனது கவர் படம் பாருங்கள்
அது என் அம்மாயி
காளியம்மாள்
எனக்கு இரண்டு அம்மாக்கள்
பெத்தவர் எலிசபெத்
பார்த்ததில்லை அவரை
ரெண்டாவது அம்மா முனியம்மா
எப்பவும் நெற்றியில் நீறு அல்லது பட்டை
தம்பி இந்து பெண்ணை மணந்தான்
இறைநம்பிக்கையில்லாத நானும் கிறித்தவரான விட்டுவும் அப்பா அம்மாவாக அவன் கருதுவதாலும் ஊர் மக்களின் அன்பிற்கும் கட்டுப்பட்டும் அனைத்து சடங்குகளிலும் நின்று நான் விரும்பவே விரும்பாத பாத வணக்கத்தை ஏற்றவன்
தங்கை இந்து குடும்பம்
பழுத்த கிறிஸ்தவரான அப்பா இறந்தபோது
அவர்மீது இருந்த அன்பின் நிமித்தம் தெரு அண்ணன்களும் மாமாக்வளும் சித்தப்பன் பெரியப்பாக்களும் கேட்டதற்கிணங்க இந்துமுறைப்படி இந்துக்களுக்கான இடுகாட்டில் அடக்கம் செய்தோம்
தெருக்கார சொந்தங்கள் குளித்து பட்டைபோட்டு தண்ணீர் சுமந்துவந்தபோது அந்த அன்புகண்டு அழுதவன்
கருமாதியின் போது அப்பாவை மாமா என்று அழைத்த எங்கள் தெரு இந்துக்கள் மாமா மச்சினன் சீர் செய்தனர்
இவர்கள் எல்லோரும் இந்துக்கள்
இவர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று திரு சேகர் சொல்கிறார்
இது அவரது சொந்தக் கருத்தென்று யாரும் சொல்லவில்லை
எனவே இது அவர் மூலமாக வெளிவந்த அவர்களது கருத்துதான்
இதை மீண்டும் நிறுவுகிற முயற்சியைத் தொடங்குகிறார்கள்
இந்துக்கள் இதை எதிர்க்க வேண்டும்
அவர்களுக்கு இந்த ஆபத்தைக் கொண்டுபோக வேண்டும்
அதே நேரத்தில் இந்த பார்ப்பன கொக்கரிப்புக்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான பிராமணர்கள் உள்ளனர்
இதற்கு எதிரான களத்திலும் தீவிரமாக உள்ளனர்
அவர்களை அன்போடும் மரியாதையோடும் அரவணைத்து கரமிணைக்க வேண்டும்
அப்புறம்
ரஜினி நினைத்தால் பத்துநாளில் முதல்வராகலாம் என்பதையும் போகிற போக்கில் கொள்ளக் கூடாது
அது பல்ஸ் பார்ப்பதற்கான ஏற்பாடு
ரஜினியை முதல்வராக்கி தேரதலை எதிரகொள்வது பிஜேபியின் ஹிடன் அஜென்டாவாக இருக்கலாம்
அதற்கு மறுத்தால் 11 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வரலாம்
கவர்னர் ஆட்சியோடு தேர்தலை சந்திக்கவும் அவர்கள் விரும்புகிறார்கள்
குருமூர்த்தி சொல்லும் 60 பார்ப்பன எம்எல்ஏக்கள் என்பதும்
திரு முருகன் சொல்லும் 15 பிஜேபி எம்எல்ஏக்கள் என்பதும்
உளறல் அல்ல
அவர்களது இலக்கு
கவனமாகவும் கூர்மையாகவும் செயல்பட வேண்டிய நேரம்

எம்மதமும் சம்மதமில்லை...


Monday, July 20, 2020

இந்தியாவை விற்பதற்கான ஆதரவாளர் என்று

தொலைக் காட்சி வழி உரையாடலை மத்திய அரசு தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கிறது
அதில் ஒரு பகுதி வெற்றியும் பெற்றிருக்கிறது
அதற்காக இதற்கு முன்புவரை ஏதோ நியாயமான உரையாடலை ஊடகங்கள் வழங்கி வந்ததாகக் கொள்ளத் தேவை இல்லை
ஒருநாள் வலதுசாரி ஆதரவாளார் என்று ஒருவர் வருவார்
அவரே மறுநாள் சங்கரமட ஆதரவாளர் என்று வருவார்
அவரே மறுநாள் அல்லது அதே நாளில் இன்னொரு நேரத்தில் இன்னொரு தொலைக் காட்சியில் பாஜக காரராக விவாதத்தில் கலந்து கொள்வார்
இன்னும் இந்தியாவை விற்பதற்கான ஆதரவாளர் என்று ஒருவரும் வந்ததில்லை என்று நினைக்கிறேன்
ஒருக்கால் அதுவும் நிகழ்ந்து இருக்கக்கூடும்
ஐந்து பேர் விவாதத்திற்கு என்று கொண்டால்
நிச்சயம் மூன்றுபேர் சமயங்களில் நான்குபேர் அவர்களாகவே இருப்பார்கள்
அவர்கள் பேசுவதைவிட கத்துவதே பெரும்பான்மை நேரங்களில் நிகழும்
Aazhi Senthil Nathan சொன்னதுமாதிரி நமது கருத்தாளர்கள் பெரும்பாலும்
”தற்காப்பு ஆட்டத்தைத்தான்” ஆட வாய்த்தது
ஆனால் அதை நம் நண்பர்கள் மிகச் சரியாக செய்தனர்
வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவர்களை அம்பலப்படுத்தவும் செய்தனர்
இதையே அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை
அதற்கு நியாயமான காரணம் உண்டு
அவர்களது பிரதிநிதிகள் நிறைய பேசினாலும்
நமது மக்கள் குறைவாகவே பேசினாலும்
அதிலும் குறுக்கீடுகள் இருந்தாலும்
நமது நண்பர்கள் மக்களிடம் போய் சேர்ந்தார்கள்
அவர்கள் அம்பலப்பட்டு நின்றார்கள்
பாஜகவின் மிகப்பெரிய கனவு
“தமிழ்நாடு”
இந்த அளவிலான விவாதங்கள்கூட தங்களுக்கு ஆபத்தானவை என்று மிகச் சரியாக உணர்ந்தார்கள்
அவர்களுக்கான குரலைத் தவிர மற்றவற்றை மௌனப்படுத்திவிட முடிவெடுக்கிறார்கள்
விவாதிக்கும் நண்பர்களுக்கும் தொல்லை தந்திருக்கலாம்
அடுத்து அதையும் அவர்கள் தரக்கூடும்
வழக்குகள் பாயலாம்
சிரமப்படுத்தலாம்
அதற்கு முன்னதாக மக்கள் நலனில் ஆதரவு நிலையோடு இருந்த நெறியாளர்களை நெருங்கி இருக்கிறார்கள்
தோழர் அருணன் பேசும்போது,
ஆழியின் மொழியுரிமை விவாதத்தின்போது
புன்னகைத்த நெறியாளர்களையும் அவர்கள் கணக்கெடுத்திருக்கக் கூடும்
அதற்கான சாணக்கிய ஆளுமைகள் தமிழகத்தில் இல்லையா என்ன?
பட்டியல் ரெடி
அவர்கள் நம்புவது இதைத்தான்
ஏற்கனவே உள்ள மூவரோடு நெறியாளரும் சேர்ந்து நண்பர்களை அழுத்த வேண்டும்
நாம் போகாத நிலை வந்தாலும் அவர்களுக்கு மகிழ்ச்சியே
ஆனால் அவர்கள் நினைப்பது நடக்காது
காரணம் இப்போதைக்கு விவாதங்களை மக்கள் பார்ப்பதே நம் நண்பர்களின் செய்தியை, விவாதத்தைக் கேட்பதற்காகத்தான்
இவர்களும் இல்லை எனில்
மக்களுக்கு அது போரடிக்கும்
சரி முடிப்போம்,
ஊடக உரையாடலுக்கான வாய்ப்பு நமக்கு குறைந்திருக்கிறது என்பதை உணர வேண்டும்
நியாயமான ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை எப்படி எதிர்கொள்வது என்று தீர்மானிக்க வேண்டும்
”யூட்யூப்” உள்ளிட்ட ஊடகங்களைக் கையெடுக்க வேண்டும்
சிறு சிறு துண்டுப் பிரசுரங்கள்
தெருமுனைக் கூட்டங்கள் என்று
மக்களோடு உரையாட ஏராளமான வழிகள் உள்ளன
நம்பிக்கையோடு நகர்வோம்

Sunday, July 19, 2020

004

ரொம்பக் 
கனக்கிறது
வயிறு முட்ட பசி

கவிதை 003

இருட்டும் இருட்டும்
இருட்டில் கலந்து
இருட்டில் பிறந்த
இருட்டு நான்
இருட்டைத் தின்று
இருட்டைக் குடித்து
இருட்டைக் கக்கி
இருட்டைப் பேள
இருட்டால் துடைத்து
இருட்டால் எடுத்து
இருட்டில் எறிவாள்
என் தாய் இருட்டு
இருட்டை உடுத்தி
இருட்டை சுமந்து
இருட்டை மிதித்து
இருட்டை இழுத்து
இருட்டைப் பிடித்தபடி
இருட்டைக் கடக்க முயலும்
இருட்டு நான்
இருட்டில்
இருட்டோடு நாங்கள்
நடந்துகொண்டே இருப்பது
எங்கள் பேரப்பிள்ளைகளுக்கான
வெளிச்சத்திற்காக
சன்ன வெளிச்சத்திற்கே
கண்கள் கூசும் எங்களைக்
கிண்டல் செய்யாதீர்
தலைமுறை தலைமுறையாய்
எங்களுக்கான வெளிச்சத்தையும் சேர்த்தே
தின்று வளர்ந்தவர்கள் நீங்கள்

Tuesday, May 5, 2020

மாமா, செத்துட்டியா?”

தூங்கிக்கொண்டிருந்தவனின் காலைத் தட்டி எழுப்புகிறார் லேஷந்த்
நல்ல தூக்கம்
“ஏந்தம்பி?”
“எங்க அப்பா துப்பாக்கி வாங்கித் தந்தாங்க”
“அதுக்கு என்னடா?”
“எந்திரி, நான் உன்ன சுடறேன்”
“தூக்கமா இருக்கு தம்பி”
“எந்திரி மாமா, சுடறேன். செத்து விழுவில்ல. அப்படியே தூங்கு. எந்திரி மாமா”
சுடறான்
செத்து விழுந்தேனா?
விழுந்து செத்தேனா?
என்ன நடந்தது என்று தெரியவில்லை.
சிரித்துக் கொண்டே கேட்கிறார்,
“மாமா, செத்துட்டியா?”
“செத்துட்டேன்”
“குட் பாய்”

Monday, May 4, 2020

கோயம்பேட்டை மூடினால்...

ஆண்டவன் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவைத் திறப்பான்
ஆள்பவர் கோயம்பேட்டை மூடினால் டாஸ்மாக்கைத் திறப்பார்

04.05.2020

லாரி வாடகை கூடினால்...

மதிப்புக் கூட்டு வரியின் மூலம் பெட்ரோல் டீசல் விலை ஏறியிருக்கிறது
டீசல் விலை உயர்ந்தால்
லாரி வாடகை கூடும்
லாரி வாடகை கூடினால்
காய்கறி மற்றும் மளிகை சாமான்கள் விலை கூடும்
அது ஏழைகளை பாதிக்கும்
இரு சக்கர வாகனங்களில் பால் மற்றும் காய்கறி விற்கும் ஏழை வியாபாரிகளையும் பால்காரர்களையும் பாதிக்கும்
வாடகைக்கு ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டும் ஆட்டோ ஓட்டுனர்களை பாதிக்கும்
கண்டனங்கள்
03.05.2020

திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றிய ....







திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றிய ஏறத்தாழ 1300 துப்புறவு ஊழியர்களை வேலையில் இருந்து அப்புறப்படுத்தி இருக்கிறது ஆலய நிர்வாகம்
காரணம்
அவர்கள் ஆலயத்தின் ஊழியர்கள் அல்ல. out sourcing ஊழியர்கள்
இத்தகைய இக்கட்டான சூழலில் ஆலய நிர்வாகம் இந்த ஊழியர்களின் பக்கம்தான் நின்றிருக்க வேண்டும்.
கவலையே படாதீர்கள், நிர்வாகம் இருக்கிறது என்று ஆறுதல் கூறியிருக்க வேண்டும்
ஆலய நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்காக நமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்
இந்த இடத்தில் எனக்குப் பட்டது சிலவற்றை இங்கு வைக்க விரும்புகிறேன்
out sourcing மூலமாக ஆலயத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இவர்கள் என்றால் இவர்கள் ஏதோ ஒரு நிறுவத்தின் company act இன் கீழ் வரும் ஊழியர்கள் ஆவார்கள்
இவர்களுக்கு PF உண்டு
இவர்கள் அந்த தனியார் நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்கள்தான்
எப்படி?
இவர்களது உடையில் இவர்களது நிறுவனத்தின் இலச்சினை இருக்கும்
அந்த இலச்சினைக்கு உரிய நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்கள் இவர்கள்
அந்த நிறுவனம் நிறைய ஊழியர்களை பணிக்கு அமர்த்தி இருக்கும்
அந்த நிறுவனம்தான் மாதா மாதம் இவர்களுக்கு ஊதியம் கொடுக்கும்
இவர்களுக்கு 5000 அல்லது 6000 என்பதுமாதிரி ஊதியம் கொடுக்கும்
இப்போது ஆலய நிறுவனம் இவர்களிடம் 1300 துப்புறவு ஊழியர்கள் வேண்டும் என்று கேட்டால் தாங்கள் எடுத்து வைத்திருந்த அல்லது கூடுதலாக எடுத்து அனுப்பி வைக்கும்
ஒரு ஒப்பந்தம் போடப்படும்
உதாரணமாக ஒரு ஊழியருக்கு 10000 தருவதாக ஆலயம் ஒப்புக் கொள்ளலாம்
இது அந்த நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையேயன ஒப்பந்தம்
ஊழியர்கள் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள்
அந்த நிறுவனம் போகச் சொல்லும் இடத்திற்கு வேலைக்குப் போக வேண்டும்
திடீரென ஆலயம் தனக்கு 1200 ஊழியர்கள் போதும் என்று கூறினால் மிச்சம் இருக்கும் நூறுபேரை வேறு ஏதாவது பணிகளுக்கு அனுப்பும்
இந்த ஆயிரத்து முன்னூறு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பது என்பது ஆலயத்திற்கு ஒரு பொருட்டே இல்லை
அதை செய்ய வேண்டும்
எது எப்படியோ
அந்த நிறுவனம் இந்த ஊழியர்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்
அவுட்சோர்சிங் ஆபத்தானது என்று சொல்லி வருகிறோம்
ஆனால் அது தவிர்க்க முடியாத பட்சத்தில்
அவுட்சோர்சிங் நிறுவனக்களைக் கூட்டாக இந்த ஊழியர்களே அமைத்துக் கொள்வதற்கு ஏன் உதவக் கூடாது

03.05.2020

மேலேயிருந்து பூக்கொட்டி

மேலேயிருந்து பூக்கொட்டி அவர்கள் நன்றி சொல்கிறார்களாமாம்
கீழே நின்று மேலே ஹெலிகாப்டர்களைப் பார்த்து கைதட்டி அவர்களுக்கு இவர்கள் பதிலுக்கு நன்றி சொல்கிறார்களாமாம்
இந்தக் காசில் வெண்டிலேட்டர்கள் வாங்கி இருக்கலாம்
என்னென்னவோ செய்திருக்கலாம்
என்பதெல்லாம் உண்மைதான் என்பது கடந்து
இத்தனை சிரமங்களுக்கு இடையேயும்
இன்னுமொரு சிரமமாக
இந்தப்பூக்களை சுத்தம் செய்யும்
துப்புரவு பணியார்களின் வேதனை குறித்தான
தோழர் கருப்பு கருணா வின் வேதனை கலந்த கோவத்தில்
அவர் கரம்பற்றி நானும் இணைகிறேன்

Sunday, May 3, 2020

ஒரு திருடனுக்கு தெரிந்திருப்பது




மும்பை
அன்றைக்கு பம்பாய்
அந்தச் சாலையின் இருமருங்கும் கூட்டம்
கூட்டத்தோடு கூட்டமாய் நிற்கிறார் பஷீர்
அப்போது அவர் எழுதவெல்லாம் தொடங்கி இருக்கவில்லை
ஒரே பரபரப்பாய் இருக்கிறது
கொஞ்ச நேரத்தில்
ஒரு மனிதனை காவல்துறையினர் சங்கிலியால் கட்டி இழுத்து வருகிறார்கள்
இவரை அவர்கள் நெருங்க இருக்கிறபோது அந்த மனிதனை பஷீருக்கு அடையாளம் தெரிந்து விடுகிறது
அந்த மனிதனுக்கு பஷீர் கடன்பட்டிருக்கிறார்
எப்படியேனும் அந்த மனிதனது பார்வையில் பட்டு வணங்கி நன்றியைத் தெரிவித்துவிட வேண்டும் என்று முயற்சிக்கிறார்
முடியவில்லை
அவர்கள் கடந்துபோனதும் பஷீருக்கு பக்கத்தில் நின்றவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறே கூறுகிறார்,
“அப்பாடா, ஒரு வழியா அந்தத் திருட்டுப் பயல புடிச்சுட்டாங்க. இனி திருட்டு பயம் கொறஞ்சிடும்”
திருடனா?
அதிர்கிறார்
என்றாலும் அவன் செய்த உதவியைத் தன்னால் காலத்திற்கும் மறக்க முடியாது என்று நினைக்கிறார்
அப்படி என்ன செய்துவிட்டான் அந்த மனிதன்
ஒரு நாள் சாலை ஓரமாக நடந்து கொண்டிருக்கிறார் பஷீர்.
பசி மயக்கத்தைத் தரவே மயங்கி கீழே வீழ்கிறார்
முகத்தில் தண்ணீர் தெளிக்கப்படவே எழுகிறார்
ஒரு மனிதனின் மடியில் இவர் தலை இருக்கிறது
அந்த மனிதன் கடையில் வாங்கி வந்த உணவைத் தருகிறான்
உணவு உள்ளே போனதும் தெம்பு வருகிறது
எழுந்தவரிடம்
இன்னொரு பொட்டலத்தைக் கொடுத்து மதியம் சாப்பிட சொல்கிறான்
”சாப்பாடு முக்கியம், பசியோடு நடக்காதே”
நகர்ந்து விடுகிறான்
பொட்டலத்தில் காசு இருக்கிறது
அவன்தான் அன்று இழுத்துச் செல்லப்பட்ட திருடன்
எந்தவிதமான முன்னேற்பாடும் செய்யாமல் ஊரடங்கைத் தொடர்ந்து கொண்டுவந்திருக்கிறீர்கள்
இதன் விளைவாய் பசியோடு சுருண்டு கிடக்கிறார்கள் பலர்
சொந்த ஊருக்கு வெருங்காலோடும் ஒருவாரப் பசியோடும் நடக்கிறார்கள் வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்துள்ள தொழிலாளர்கள்
சிலர் செத்தே போயிருக்கிறார்கள்
தன்னார்வளர்கள் மட்டும் இல்லாவிட்டால்
இருப்பவர்களில் பலர் செத்திருப்பார்கள
அன்பிற்குரிய ஆளும் கனவான்களே,
பசியோடு இருக்கக் கூடாது, பசியோடு நடக்கக்கூடாது என்று ஒரு திருடனுக்கு தெரிந்திருப்பது
உங்களுக்கு ஏன் தெரியாமல் போனது?

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...