Sunday, May 3, 2020

ஒரு திருடனுக்கு தெரிந்திருப்பது




மும்பை
அன்றைக்கு பம்பாய்
அந்தச் சாலையின் இருமருங்கும் கூட்டம்
கூட்டத்தோடு கூட்டமாய் நிற்கிறார் பஷீர்
அப்போது அவர் எழுதவெல்லாம் தொடங்கி இருக்கவில்லை
ஒரே பரபரப்பாய் இருக்கிறது
கொஞ்ச நேரத்தில்
ஒரு மனிதனை காவல்துறையினர் சங்கிலியால் கட்டி இழுத்து வருகிறார்கள்
இவரை அவர்கள் நெருங்க இருக்கிறபோது அந்த மனிதனை பஷீருக்கு அடையாளம் தெரிந்து விடுகிறது
அந்த மனிதனுக்கு பஷீர் கடன்பட்டிருக்கிறார்
எப்படியேனும் அந்த மனிதனது பார்வையில் பட்டு வணங்கி நன்றியைத் தெரிவித்துவிட வேண்டும் என்று முயற்சிக்கிறார்
முடியவில்லை
அவர்கள் கடந்துபோனதும் பஷீருக்கு பக்கத்தில் நின்றவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறே கூறுகிறார்,
“அப்பாடா, ஒரு வழியா அந்தத் திருட்டுப் பயல புடிச்சுட்டாங்க. இனி திருட்டு பயம் கொறஞ்சிடும்”
திருடனா?
அதிர்கிறார்
என்றாலும் அவன் செய்த உதவியைத் தன்னால் காலத்திற்கும் மறக்க முடியாது என்று நினைக்கிறார்
அப்படி என்ன செய்துவிட்டான் அந்த மனிதன்
ஒரு நாள் சாலை ஓரமாக நடந்து கொண்டிருக்கிறார் பஷீர்.
பசி மயக்கத்தைத் தரவே மயங்கி கீழே வீழ்கிறார்
முகத்தில் தண்ணீர் தெளிக்கப்படவே எழுகிறார்
ஒரு மனிதனின் மடியில் இவர் தலை இருக்கிறது
அந்த மனிதன் கடையில் வாங்கி வந்த உணவைத் தருகிறான்
உணவு உள்ளே போனதும் தெம்பு வருகிறது
எழுந்தவரிடம்
இன்னொரு பொட்டலத்தைக் கொடுத்து மதியம் சாப்பிட சொல்கிறான்
”சாப்பாடு முக்கியம், பசியோடு நடக்காதே”
நகர்ந்து விடுகிறான்
பொட்டலத்தில் காசு இருக்கிறது
அவன்தான் அன்று இழுத்துச் செல்லப்பட்ட திருடன்
எந்தவிதமான முன்னேற்பாடும் செய்யாமல் ஊரடங்கைத் தொடர்ந்து கொண்டுவந்திருக்கிறீர்கள்
இதன் விளைவாய் பசியோடு சுருண்டு கிடக்கிறார்கள் பலர்
சொந்த ஊருக்கு வெருங்காலோடும் ஒருவாரப் பசியோடும் நடக்கிறார்கள் வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்துள்ள தொழிலாளர்கள்
சிலர் செத்தே போயிருக்கிறார்கள்
தன்னார்வளர்கள் மட்டும் இல்லாவிட்டால்
இருப்பவர்களில் பலர் செத்திருப்பார்கள
அன்பிற்குரிய ஆளும் கனவான்களே,
பசியோடு இருக்கக் கூடாது, பசியோடு நடக்கக்கூடாது என்று ஒரு திருடனுக்கு தெரிந்திருப்பது
உங்களுக்கு ஏன் தெரியாமல் போனது?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...