Saturday, May 2, 2020

இவர்களது உணவிற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்

இன்று முதல் நான்கு நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு
எங்கள் ஊரில் நேற்று முதலே முழுமையான ஊரடங்கு
இப்படி திடீரென அறிவித்தால் பொதுமக்கள் மளிகை மற்றும் காய் கறிகளை எப்படி வாங்குவார்கள் என்ற கோவம் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டு எல்லோருக்கும் இருந்தது
நியாயம்தான்
இன்று முதல் என்றதும் நேற்று கடைகளில் அப்படி ஒரு நெரிசல்
தனக்கு முன்னால் நின்ற குடும்பம் ஒன்று ஏதோ தாங்கள் இந்த பூமியையே காலி செய்துவிட்டு வேறு கிரகத்திற்கு போவதுபோல் கடையில் இருந்த ஏறத்தாழ மொத்தத்தையும் வாங்கிச் சென்றதாக மதுக்கூர் ராமலிங்கம் (Mathukkur Ramalingam) எழுதியிருந்தான்
இதுமாதிரி கோமாளித் தனங்களும் அரங்கேறி இருக்கின்றன
இதுவெல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கான பிரச்சினை இருக்கிறது
உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க சென்ற தன்னார்வலர்களிடம் காவலர்கள் நாளைக்கெல்லாம் நாங்கள் கடுமையாக இருப்போம் என்பதாக காவலர்கள் எச்சரித்து அனுப்பியிருப்பதாகவும்
சமைக்கிற தோழர்கள் வருவதிலும்கூட சிக்கல்கள் இருப்பதாகவும் ஆன்மனும்(ஆன் மன்) கவினும் (Kavin Malar) தங்கள் பக்கங்களில் எழுதியுள்ளனர்
ஆக சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு அரசு ஏதேனும் செய்யாவிட்டால் நான்கு நாட்களும் உணவு கிடைக்கப் போவதில்லை
இரண்டுதான்
அரசு இவர்களது உணவிற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்
அல்லது
தன்னார்வலர்கள் உணவு சமைப்பதற்கும் வழங்குவதற்குமான அனுமதியையும் பாதுகாப்பையும் தர வேண்டும்

26.04.2020

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...