Saturday, May 2, 2020

வெடிப்பதற்குள் திருந்திவிடுங்கள்

ஐந்து ஆண்டுகள் இருக்கும்
ராஜ முருகு பாண்டியன் (Arasa Murugu Pandian) ”போதி” யில் உரையாற்ற என்னை காரைக்குடிக்கு அழைத்திருந்தான்
பசிக்கு ஒருமணி நேரத்திற்குமுன் ஒலிவாங்கியைத் தந்தார்கள்
பசி தொடங்கி அரைமணி நேரத்தில் உரையை முடித்தேன்
பிறகு உரை குறித்தும் அது ஒட்டியும் சில நண்பர்கள் பேசினர்
அதில் ஒரு ஆசிரியர்,
“தோழர் பேசியது நெஞ்சை உலுக்கியது” என ஆரம்பித்தவர்
தனது பள்ளியில் மற்ற வேலைகளுக்கெல்லாம் மற்ற ஆசிரியர்களை அழைக்கும் தலைமை ஆசிரியர் கழிவறை போன்ற பணிகளுக்கு மட்டும் தன்னை அணுகி ஆள் ஏற்பாடு செய்யுமாறு கூறுவதாகவும்
கோவத்தில் உடைந்தார்
அது அப்படியாக இருக்கும் பட்சத்தில் அதை கோவத்தோடு மறுக்குமாறு நானும் பாண்டியனும் சொன்னோம்
சமீபத்தில்
பள்ளிக்கரணையில் தனது பக்கத்து வீட்டில் துப்புறவு பணியை மேற்கொள்ள வந்த எம் தோழர்களிடம் தன் ஜாதித் திமிரோடு ஒரு மனிதன் தனது சக மனிதனோடு பேசத் தகாத அளவில் ஒரு பார்ப்பனர் பேசியதைப் பார்த்தோம்
வழக்கு பதியப்பட்டதாக அறிய முடிகிறது. கைது செய்யப்பட்டாரா தெரியவில்லை
ஒருக்கால் கைது செய்யபடவில்லை என்றால் இந்த சமூகக் கட்டமைப்பின்மேல் சந்தேகம் எழுகிறது
ஆறு மாதங்களுக்கு முன்னால்
தென்கொரியா சென்றுவந்த இணை செயலாளர் ஒருவர் என்னோடு பேசிக் கொண்டிருந்தார்
அங்கு டிப்பர் லாரிகளில் குப்பைகள் கொண்டு செல்லப்பட்டு எரியூட்டும் நிலையங்களில் கொட்டப்படுமாம்
1300 என்றார், அது டிகிரியா வேறு ஏதேனும் அளவு முறையா என்று தெரியவில்லை அந்த அளவு வெப்பத்தில் எரிக்கப்படுமாம்
புகைகூட வருவதில்லையாம்
குப்பை எரிகிற வெப்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தாயாரிக்கப் படுகிறதாம்
பிறகு அந்த டிப்பரை ஸ்டீமரில் விட்டு ஸ்டெர்லைஸ் செய்கிறார்களாம்
ஸ்டெர்லைஸ் செய்தபின்பு அந்த டிப்பரில் குப்பை அள்ளுவார்களாம்
ஸ்டெர்லைஸ் செய்யப்பட்ட டிப்பரில்தான் குப்பையே அங்கு ஏற்றுகிறார்களாம்
ஆனால் கொரோனா காலத்தில் உயிரைக் கொடுத்து பணியாற்றும் எம் துப்புறவு மக்களுக்கு
குப்பைக் கொட்டிய அதே லாரியில் அவர்களுக்கான சாப்பாட்டைக் கொண்டுவந்து தருவதான செய்தித்தாள் நறுக்கினை பிள்ளை தமிழ்ப்பித்தன் (Poondi Jeyaraj) வைத்திருக்கிறான்
வலிக்கிறது என்ற தகவலையும்,
வெடிப்பதற்குள் திருந்திவிடுங்கள் என்ற கோரிக்கையையும் வைக்கிறேன்

24.04.2020

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...