Monday, May 4, 2020

திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றிய ....







திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றிய ஏறத்தாழ 1300 துப்புறவு ஊழியர்களை வேலையில் இருந்து அப்புறப்படுத்தி இருக்கிறது ஆலய நிர்வாகம்
காரணம்
அவர்கள் ஆலயத்தின் ஊழியர்கள் அல்ல. out sourcing ஊழியர்கள்
இத்தகைய இக்கட்டான சூழலில் ஆலய நிர்வாகம் இந்த ஊழியர்களின் பக்கம்தான் நின்றிருக்க வேண்டும்.
கவலையே படாதீர்கள், நிர்வாகம் இருக்கிறது என்று ஆறுதல் கூறியிருக்க வேண்டும்
ஆலய நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்காக நமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்
இந்த இடத்தில் எனக்குப் பட்டது சிலவற்றை இங்கு வைக்க விரும்புகிறேன்
out sourcing மூலமாக ஆலயத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இவர்கள் என்றால் இவர்கள் ஏதோ ஒரு நிறுவத்தின் company act இன் கீழ் வரும் ஊழியர்கள் ஆவார்கள்
இவர்களுக்கு PF உண்டு
இவர்கள் அந்த தனியார் நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்கள்தான்
எப்படி?
இவர்களது உடையில் இவர்களது நிறுவனத்தின் இலச்சினை இருக்கும்
அந்த இலச்சினைக்கு உரிய நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்கள் இவர்கள்
அந்த நிறுவனம் நிறைய ஊழியர்களை பணிக்கு அமர்த்தி இருக்கும்
அந்த நிறுவனம்தான் மாதா மாதம் இவர்களுக்கு ஊதியம் கொடுக்கும்
இவர்களுக்கு 5000 அல்லது 6000 என்பதுமாதிரி ஊதியம் கொடுக்கும்
இப்போது ஆலய நிறுவனம் இவர்களிடம் 1300 துப்புறவு ஊழியர்கள் வேண்டும் என்று கேட்டால் தாங்கள் எடுத்து வைத்திருந்த அல்லது கூடுதலாக எடுத்து அனுப்பி வைக்கும்
ஒரு ஒப்பந்தம் போடப்படும்
உதாரணமாக ஒரு ஊழியருக்கு 10000 தருவதாக ஆலயம் ஒப்புக் கொள்ளலாம்
இது அந்த நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையேயன ஒப்பந்தம்
ஊழியர்கள் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள்
அந்த நிறுவனம் போகச் சொல்லும் இடத்திற்கு வேலைக்குப் போக வேண்டும்
திடீரென ஆலயம் தனக்கு 1200 ஊழியர்கள் போதும் என்று கூறினால் மிச்சம் இருக்கும் நூறுபேரை வேறு ஏதாவது பணிகளுக்கு அனுப்பும்
இந்த ஆயிரத்து முன்னூறு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பது என்பது ஆலயத்திற்கு ஒரு பொருட்டே இல்லை
அதை செய்ய வேண்டும்
எது எப்படியோ
அந்த நிறுவனம் இந்த ஊழியர்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்
அவுட்சோர்சிங் ஆபத்தானது என்று சொல்லி வருகிறோம்
ஆனால் அது தவிர்க்க முடியாத பட்சத்தில்
அவுட்சோர்சிங் நிறுவனக்களைக் கூட்டாக இந்த ஊழியர்களே அமைத்துக் கொள்வதற்கு ஏன் உதவக் கூடாது

03.05.2020

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...