Wednesday, September 27, 2017

என் வீட்டிலிருந்து...

கலைமணி மிக நேர்த்தியான கவிதைகளைத் தந்து கொண்டிருக்கிறாள். உரைநடைக்கு வா என்று அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருக்கிறேன். 

நல்ல வாசிப்பாளி. எந்திரக்கணக்காய் வாசித்துக் குவித்தவள். பழைய மாதிரி வாசிப்பதில்லை தற்போது.

நன்கு எழுத வரும். ஆனால் எழுதுவதில்லை. 

என்ன செய்வது என்று குழம்பிக் கிடந்த பொழுதொன்றில் இருவரும் NCBH செல்ல வேண்டியத் தேவை வந்தது. இரண்டு மூன்றுமுறை”கீதாரி” யை எடுத்துப் பார்ப்பதும் வைப்பதுமாய் இருந்தாள். பார்த்துவிட்டேன். 

அவளுக்கேத் தெரியாமல் அதை வாங்கி “படி, தமிழ்ச்செல்வியின் எழுத்து நல்லா இருக்கும் என்று சொன்னேன்.

ஒரு அழகான ’ரைட் அப்’ கொடுத்திருக்கிறாள். ஒரு ரைட் அப் எப்படி தொடங்கப்பட்டு எப்படி நகர வேண்டுமோ அப்படி நகர்கிறது.

ஒரு தம்ளர் தண்ணீர்தான் . குற்றல நீர் வீழ்ச்சியையே அவளால் கொண்டுவந்து தரமுடியும் அவளால்.

இனி வாங்கிக் குவித்து வாசிக்க வைக்க வேண்டும்.

என் வீட்டிலிருந்து பெண்ணொருத்தி எழுதுகிறாள் என்ற திமிரோடு அதைப் பந்தி வைக்கிறேன். வாசித்து வாழ்த்துங்கள். மகிழ்ந்து நன்றி சொல்வேன்.

**********************************  


NCBH புத்தக நிலையத்தில் இந்தப் புத்தகத்தைக் கையிலெடுத்துப் பார்த்துப் பின் வைத்துவிட்டேன். "சு.தமிழ்ச்செல்வியின் எழுத்து நல்லாயிருக்கும், படி பாப்பா" என்று தோழர்.இரா எட்வின் நூலை வாங்கிக் கையில் திணித்தார். பத்து நாட்கள் பொறுத்திருந்து கையில் எடுத்தேன் 
இன்று காலை 10 மணியளவில். இரு பிள்ளைகளுக்கும் விடுமுறை என்பதால் நானும் விடுப்பில்..ஒரு கையில் கீதாரியும் மறுகையில் தேநீர்த் தயாரிப்புமாய் 11/30 மணி..ஒரு கையில் கீதாரியும் மறுகையில்அரிசியுமாய் , 12 மணி..ஒரு கையில் கீதாரியும் மறுகையில்கரண்டியுமாய் சமையலில், 12/30 மணி..இப்படிவலது மாறினாலும் இடது மாறாமல் முழுவதும் படித்து முடித்தபோது 1/45.படித்து முடித்து ஒருமணிநேரம் கடந்துவிட்டது.ஆனால் புத்தகம் இப்போது இருகைகளிலும்.மூடி வைக்க மனமில்லை.வாழ்த்துச் சொல்லவா?கண்கலங்கி நின்ற வரிகளுக்காக வைது தீர்க்கவா?சொல்லுங்கள் தோழி சு.தமிழ்ச்செல்வி

Saturday, September 16, 2017

நானூறு தேவதைகளின் தகப்பன்

மிகுதியான மன இறுக்கத்தோடு அமர்ந்திருக்கிறேன்.
சந்தியா தலைமையில் ஐந்தாறு குட்டித் தேவதைகள் அறைக்குள் படை எடுக்கின்றனர். இந்தப் பிள்ளைகள் பேச ஆரம்பித்தால் நரசிம்மராவே சிரிப்பார். பார்த்த மாத்திரத்தில் இறுக்கம் ஓடிவிட்டது.
“வாங்ங்ங்க... வாங்ங்ங்க”
“சார், எனக்கு பின்னடி உக்காந்திருப்பாள்ள...”
“இப்படி கிட்டக்க வாங்க மேடம்” என்றவாறே பிள்ளையை இடுப்போடு அணைத்தவாறே, “ ம்ம்ம், சொல்லுங்க. என்ன செஞ்சா அவ உங்கள”
“தலையிலேயே அடிக்கிறாங்க சார். ஒரு தாட்டினா பரவாயில்ல. அடிச்சுக்கிட்டே இருக்கா. இப்ப வாங்க , என்னானு கேளுங்க”
“ இதுக்குத்தான் இத்தன எரும வந்தீங்களா? ( எருமை என்றால் தேவதை என்பது என் பிள்ளைகளுக்குத் தெரியும்)”
“அதுக்கு எதுக்கு நான் வந்துக்கிட்டு. அவளுக்கு நான் உன் ப்ரண்டுன்னு தெரியாம இருக்கும். “
“ம்”
“நேரா போ”
“ம்”
“போயி, நான் எட்வினோட ப்ரண்டு. என்ன வம்பிழுத்தா எட்வின் வருவான். அடிப்பான்னு சொல்லு போ”
போய்விட்டார்கள்.
கொஞ்ச நேரம் கழித்து நான் வகுப்புகளைச் சுற்றிப் பார்க்க கிளம்புகிறேன். மரத்தடியில் குழந்தைகளை அமரச் செய்து தம்பிகள் அரவிந்தும் சுந்தரமூர்த்தியும் எதையோ வாசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களோடு நிற்கிற போது அந்த தேவதைப் பட்டாளம் வருகிறது.
“என்ன சாமி, சொன்னியா?”
“சொன்னேன்”
“என்ன சொன்ன?”
“நான் எட்வினோட ப்ரண்டு. ஏங்கிட்ட வம்பு வச்சுகிட்டா அவன் வருவான், அடிப்பான்னு சொன்னேன்”
“ஐ, அப்புறம்?”
“அவ எட்வின் எனக்கும் ப்ரண்டுதான் எனக்கும் வருவான் சொல்றா. வந்து என்னான்னு கேளுங்க”
அரவிந்தும் சுந்தரமூர்த்தியும் அதிர்கிறார்கள்.
நானூறு தேவதைகளின் அப்பன் நான்.
( ஹெட் மாஸ்டர அவன் இவன் என்று சொல்லலாமா என்று யாருக்கேனும் நெருடல் வருமெனில் இந்த தேவதைகளின் அப்பனிடம் அதற்கான பதில் எதுவும் இல்லை. ரொம்ப உறுத்துமெனில் அவர்கள் என்னை உதறிச் செல்லலாம்)

Saturday, September 2, 2017

கவிதை 082

நீங்கள் கொடுத்த பாடத்திட்டம்தான்
நீங்கள் கொடுத்த புத்தகங்கள்தான்
நீங்கள் கொடுத்த கேள்வித்தாள்தான்
நீங்கள் கொடுத்த தாளில்தான்
நீங்கள் குறித்து கொடுத்த நாளில்தான் நீங்கள் அனுப்பிய கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில்தான் எழுதினாள்
நீங்கள் அனுப்பிய ஆசிரியர்கள்தான் திருத்தினார்கள்
இத்தனைக்குப் பிறகுதான் இவ்வளவு எடுக்கிறாள்.
நீங்கள் மதிப்பிட்ட உங்கள் பிள்ளையைத்தான் அவன் தகுதி இல்லாதவனு சொன்னான்
நீ போட்ட மதிப்பெண் செல்லாதுன்றான்
நீ போட்ட மதிப்பெண்ணை அவன் அசிங்கப் படுத்தியதும் குழந்தை நாண்டுக்கறா
அசிங்கம் பார்க்க நமக்கேது நேரம்
எம் எல் ஏ ஓடிப்போயிடப்போறான்
அவனக் கவனி

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...