Showing posts with label வானிலை. Show all posts
Showing posts with label வானிலை. Show all posts

Monday, May 5, 2025

அழியும் என்பது அதிகம் என்றே கொண்டாலும்

 தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட 1200 கிலோமீட்டர் கடற்கரை இருப்பதாகத் தெரிகிறது

எத்தனை கிராமங்கள் நகரங்கள் இந்தக் கடற்கரையில் உள்ளன

எத்தனை குடும்பங்கள்?

எத்தனை தனி நபர்கள்?

தெரியவில்லை

ஆனால்

வெப்பம் அதிகரித்துக் கொண்டே உள்ளது
கடலும் சூடாகி வருகிறது

விளைவாக, கடல்மட்டம் தரைமட்டத்தை விட உயர்ந்து கொண்டே வருகிறது

சென்னை உள்ளிட்ட பல ஊர்கள் அழியுமளவிற்கு கடல் மட்டம் உயரும் என்கிறார்கள்

அழியும் என்பது அதிகம் என்றே கொண்டாலும்

மக்கள் வாழ முடியாத இடங்களாக அவை நிச்சயமாக மாறக் கூடும்

எனில், அந்த மக்கள் உள்புறம் நோக்கி புலம்பெயர நேரும்

தமிழ் மக்கள் தமிழ் மண்ணிற்குள் புலம் பெயர்வர்

இது பல லட்சமளவில் இருக்கலாம்

இதுகுறித்து

எப்போது பேசுவோம்?

எப்போது பேச வைப்போம்?

05.05.2025

Saturday, January 1, 2022

அவரை இயற்கை இந்தப் பாடு படுத்தக் கூடாது

 யாரும் எதிர்பார்க்கவே இல்லை

ஏன்?
வானிலை ஆய்வு மையமே அதை கணித்திருக்கவில்லை
நேற்று (30.12.2021) அப்படியொரு கடும் மழை சென்னையில் கொட்டித் தீர்த்திருக்கிறது
ஒருநாள் மழையில் சென்னை சாலைகளில் மழைநீர்
ராட்சஷ மோட்டார்களைக் கொண்டு நீரை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்
அந்தப் பணியைப் பார்வையிட வருகிறார் முதல்வர்
நேற்று முன்னிரவுவரை திருச்சியில் இருந்தவர் இன்று அதிகாலை சென்னையில் மழைநீரை அகற்றும் பணியை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்
அவரை இயற்கை இந்தப் பாடு படுத்தக் கூடாது
“பேய்போல கொட்டித் தீர்த்துவிட்டது” என்று அவர் கூறுகிறார்
அப்படியொரு மழை
நேற்று இப்படி ஒரு மழை வரும் என்று வானிலை ஆய்வு மையம் ஏன் கணித்து சொல்லவில்லை என்று வானிலை ஆய்வு மைய இயக்குனரை ஊடகவியலாளர்கள் கேட்கிறார்கள்
இந்த மழையை வானிலை ஆய்வு மையம் கணிக்கத் தவறிவிட்டதை திரு புவியரசன் ஒத்துக் கொண்டிருக்கிறார்
நிலத்தில் இருந்த வளிமண்டல சுழற்சியை கடலில் இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தவறாகக் கணித்து விட்டதாகக் கூறுகிறார் அவர்
போக,
தங்களிடம் போதுமான அளவு ரேடார்கள் இல்லாததால்
தாங்கள் தரவுகளின் அடிப்படையில்தான் கணித்துக் கொண்டிருப்பதாகவும்
அவர் கூறுகிறார்
பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு தயாநிதி மாறன் அவர்கள் 2020 டிசம்பர் மாதமே ரேடார் தேவை குறித்து ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதியிருப்பதாகவும்
ஒரு வருடமாக ஒன்றிய அரசிடம் இருந்து எந்தவிதமான பதிலும் இல்லை என்றும் சென்ற பெரு மழையின்போது கூறினார்
போதுமான ரேடார்களைக் ஒன்றிய அரசிடம் கேட்டுப்பெற வேண்டும் மாநில அரசு
#சாமங்கவிய ஒரு மணி முப்பத்திநான்கு நிமிடங்கள்
31.12.2021

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...