தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட 1200 கிலோமீட்டர் கடற்கரை இருப்பதாகத் தெரிகிறது
எத்தனை கிராமங்கள் நகரங்கள் இந்தக் கடற்கரையில் உள்ளன
எத்தனை குடும்பங்கள்?
எத்தனை தனி நபர்கள்?
தெரியவில்லை
ஆனால்
வெப்பம் அதிகரித்துக் கொண்டே உள்ளது
கடலும் சூடாகி வருகிறது
விளைவாக, கடல்மட்டம் தரைமட்டத்தை விட உயர்ந்து கொண்டே வருகிறது
சென்னை உள்ளிட்ட பல ஊர்கள் அழியுமளவிற்கு கடல் மட்டம் உயரும் என்கிறார்கள்
அழியும் என்பது அதிகம் என்றே கொண்டாலும்
மக்கள் வாழ முடியாத இடங்களாக அவை நிச்சயமாக மாறக் கூடும்
எனில், அந்த மக்கள் உள்புறம் நோக்கி புலம்பெயர நேரும்
தமிழ் மக்கள் தமிழ் மண்ணிற்குள் புலம் பெயர்வர்
இது பல லட்சமளவில் இருக்கலாம்
இதுகுறித்து
எப்போது பேசுவோம்?
எப்போது பேச வைப்போம்?
05.05.2025
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்