விரல்களுக்கிடையே
வியர்வை ஈரமாய்
மரணம்
ஒளிந்துகொண்டிருக்கிறது
சாகாமல் இருக்கிறோம் என்பதன் வெளிப்பாடுதான்
காரணம் வேறாயினும்
செத்தவர்களுக்காகவும் அழுகிறோம்
இன்னும்
சாகாமல் இருப்பதறிந்தும் அழுகிறோம்
அழுவதற்குத்
தெம்பில்லாதபோது
நான்
வாசிக்கிறேன்
வாசிக்க முடியாது கண்ணெரிந்தால்
உறங்குகிறேன்
வாசித்தலும்
உறக்கமும்
அழுகைதான் என்பது
பெருந்துயர்தான்
சாவுச் செய்தியின்
முகத்தில் முழிக்காத
ஒரு விழிப்புக்காக
செத்தே தொலைக்கலாம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்