Monday, May 19, 2025

கவிதை 02/2025

 

விரல்களுக்கிடையே
வியர்வை ஈரமாய்
மரணம்
ஒளிந்துகொண்டிருக்கிறது
அலைபேசியை எடுத்ததும்
பேச முடியாது
விசும்புவதென்பதுகூட
சாகாமல் இருக்கிறோம் என்பதன் வெளிப்பாடுதான்
காரணம் வேறாயினும்
செத்தவர்களுக்காகவும் அழுகிறோம்
இன்னும்
சாகாமல் இருப்பதறிந்தும் அழுகிறோம்
அழுவதற்குத்
தெம்பில்லாதபோது
நான்
வாசிக்கிறேன்
வாசிக்க முடியாது கண்ணெரிந்தால்
உறங்குகிறேன்
வாசித்தலும்
உறக்கமும்
அழுகைதான் என்பது
பெருந்துயர்தான்
சாவுச் செய்தியின்
முகத்தில் முழிக்காத
ஒரு விழிப்புக்காக
செத்தே தொலைக்கலாம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...