Showing posts with label 2024 தேர்தல். Show all posts
Showing posts with label 2024 தேர்தல். Show all posts

Wednesday, May 15, 2024

மாமன்னர் இப்போதைக்கு கலங்கிப்போய்தான் நிற்கிறார்

 2014

பாஜக ஆட்சிக்கு வருவதற்கான காரணங்களுள்
ஹசாரேவும் அவரது சிஷ்யப் பிள்ளையான கெஜ்ரிவாலும் உண்டு
2G எனும் ஊகத்தை ஊதிப் பெரிதாக்கி மாமன்னரைத் தூக்கி வந்து சிம்மானத்தில் உட்கார வைத்ததில் அவர்களது பங்கு அலாதியானது
அடிப்படையில் கெஜ்ரிவால் RSS காரர்
அதனால் அவர்கள் தேர்த்லை எப்படி எதிர்கொள்வார்கள் என்பது கெஜ்ரிவாலுக்கும்
கெஜ்ரிவால் எப்படி எதிர்கொள்வார் என்பது அவர்களுக்கும் தெரியும்
அதனால்தான் கைதே
இப்போது பாருங்கள்
மாமன்னர் ராமர் என்கிறார்
கெஜ்ரிவால் அனுமான் என்கிறார்
அவர்கள் எதிர்க் கட்சிகளிடம் உள்குத்து குடைசலைத் தருகிறார்கள்
கெஜ்ரிவால் மன்னர் அல்ல அவர்களது சாய்ஸ், அவர்களது சாய்ஸ் ஜெய்ஷாவின் அப்பா என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார்
உள்ளுக்குள் புகைகிறது
இது ராகுலால் முடியாதது
எனவே இந்தப் பகுதியை கெஜ்ரிவால் பார்த்துக் கொள்ள
சாதியால் விழுந்தவர்கள் சாதியால்தான் எழ வேண்டும். அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று இன்னொரு பகுதிக்கு அவர்களை இழுக்கிறார்
ப்ரியங்கா ஒரு பக்கம் இழுக்கிறர்
மாநிலக் கட்சிகள் இன்னும் சில பக்கம் இழுக்கின்றன
ஒன்று சொல்ல வேண்டும்
மாமன்னர் இப்போதைக்கு கலங்கிப்போய்தான் நிற்கிறார்

Monday, May 13, 2024

பல வடிவங்களில் இருக்கும் ஒரே கடவுளின்

 ”ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க”

என்பது திருவாசகம்
பல வடிவங்களில் இருக்கும் ஒரே கடவுளின் தாழ் பணிகிறேன் என்கிறேன் மாணிக்கவாசகர்
மாமன்னரரின் மதவெறிப் பேச்சு இந்த ஏகன் அநேகன் தத்துவத்திற்கு எதிரானது

அம்பானி அதானியை மன்னர் ராகுலிடம் தள்ளியது என்பது

 எதிரிக்கு எதிரி நண்பன் என்பது இயல்பானது

எதிரியின் நண்பனை நண்பனாக்குவது என்பது தந்திரம்
அம்பானி அதானியை மன்னர் ராகுலிடம் தள்ளியது என்பது பாசிசத்தின் பின் நவீனத்துவ யுக்தி

இந்த அழைப்பை ராகுல் ஏற்றுக் கொண்டிருக்கிற நிலையில்

 இந்த அழைப்பை ராகுல் ஏற்றுக் கொண்டிருக்கிற நிலையில்

மன்னரும் ஏற்பார் என்றே நம்புகிறோம்







பதில் சொல்லாமல் கிளம்பிப் போய்விட்டார் மன்னர்

 மன்னர்னாலே இப்படிக் கோபப்படுறியே ஏன்டா மாப்ள?

ஒரு நேர்காணல்
அநேகமா, கரண் தாப்பரோடு என்று நினைக்கிறேன்
குஜராத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறித்து சன்னமான கேள்வி
சன்னமான கேள்விதான்
அந்த சம்பவம் குறித்து வருத்தமேனும் படுகிறீர்களா?
இந்தச் சன்னமான கேள்விக்கே
கோபத்தோடு தண்ணீர் குடித்துவிட்டு
பதில் சொல்லாமல் கிளம்பிப் போய்விட்டார் மன்னர்
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு வருத்தம்கூட கொள்வதற்கு தயங்குகிற மனிதனை நினைத்தால் கோபம்தானே வரும்

Wednesday, May 8, 2024

எங்களுக்குத் தெரியும் மாமன்னா

 அம்பானி அதானியிடம் சாக்கு சாக்காக ராகுல் பணம் வாங்கியதாகக் கூறுகிறீர்கள்

வாங்கியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்பது தெரியும்

போக

இன்னும் மூன்று வாரங்களுக்கு நீங்கள்தான் பிரதமர்

ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்

அம்பானி அதானி என்ன

எலாம் மஸ்கே ராகுலோடு பேசியிருக்கக் கூடும்

அல்லது பேசக் கூடும்

70 முதல் 100 விழுக்காடு கஸ்டம்ஸ் வரியை 10 விழுக்காடு என்று நீங்கள் அவருக்கு குறைத்தது மாதிரி அவரிடமும் கேட்டிருப்பார்

அல்லது கேட்பார்

அங்குதான் எங்களுக்கான போராட்டப் புள்ளி என்று

எங்களுக்குத் தெரியும் மாமன்னா

கேவலமாகத்தான் பேசுவீர்களா நிர்மலா மேம்

 ப்ரஜல் ரேவண்ணா சில நூறு பெண்களை பாலியல் ரீதியாக வீணாக்கியிருக்கிறான்

அது குறித்து கருத்து சொல்ல வந்த நிர்மலா
ரேவண்ணாவும் காங்கிரஸ் கட்சி சிவக்குமாரும் ஒக்காலிக்கா வகுப்பைச் சேர்ந்தவர்களென்றும்
அந்த வகுப்பாரின் மொத்த வாக்குகளையும் அள்ளுவதற்காகவே இந்தக் குற்றச்சாட்டு என்றும் கூறுகிறார்
ரேவண்ணா செய்த கேவலத்திற்கு சற்றும் குறைவில்லாத கேவலம் இது

Saturday, May 4, 2024

கச்சசத் தீவு குறித்து

 பாஜக தேர்தல் அறிக்கையை நான் வாசிக்கவில்லை

தகவலுகாகக் கேட்கிறேன். வாசித்தவர்கள் சொல்லுங்கள்

அறிக்கையில் எங்கேனும் கச்சத்தீவு குறித்து ஏதேனும் இருக்கிறதா

Thursday, May 2, 2024

எதுத்த வீட்டு பாட்டிக்கே புரியுதுங்க சார்

 வாசலில் அமர்ந்திருக்கிறோம் நனும் விக்டோரியாவும்

வாக்கிங் போய்க்கொண்டிருந்த அந்தப் பாட்டி கேட்கிறார்
ஏன் சார் காங்கிரஸ் சொல்றதப் பார்த்தா அம்பானிக்கும் அதானிக்கும்தான பயம் வரணும்
சார் ஏன் கோபப்படறார்?
அதுதாங்க தெரியல என்கிறேன்
போங்க சார்
அவிங்க எல்லோரும் ஒன்னுதான சார்
எதுத்த வீட்டு பாட்டிக்கே புரியுதுங்க சார்

Saturday, April 27, 2024

சூரத்தில் NOTA இன்னமும் போட்டியில் இருக்கிறது

 எந்தத் தேர்தாலாயினும்

யார் போட்டியிடுகிறார்களோ இல்லையோ NOTA நிச்சயமாகப் போட்டியிடும்
வாக்குப் பதிவு செய்யும் எந்திரத்தில் நிச்சயமாக NOTA இருக்கும்
எனில்
சூரத்தில் NOTA இன்னமும் போட்டியில் இருக்கிறது என்றுதான் பொருள்
யாருக்கும் வாக்கு இல்லை என்று சொல்லுகிற உரிமை வாக்களருக்கு இருக்கிறது

அந்த உரிமையை யாராலும் அவராலும் பறிக்க இயலாது
அப்படி இருக்க
சூரத்தில் பாஜகவித் தவிர அனைத்து வாக்காளரும் திரும்பப் பெற்றதாக எப்படிக் கூற முடியும்?
யோசித்துப் பாருங்கள்
பாஜகவிற்கு 4 லட்சம் வாக்குகளும்
NOTA விற்கு 5 லட்சம் வாக்குகளும் கிடைத்தால்
பாஜக எப்படி வெற்றி பெற்றதாகக் கொள்வது

திருவாளார் 29.02 பைசா

 இதுவரை 29 பைசா என்று உதயநிதி சொல்லிக்கொண்டிருந்தாரே

இப்போது நிவாரணநிதி வந்துவிட்டதே இனி என்ன செய்வார்
29.02 பைசா என்று சொல்வார்
இப்பவும் செல்லாக் காசுதான்

இது மார்க்சிஸ்ட் கட்சிக்கான சாதகமாக இருக்கலாம்

 மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு விகிதாச்சாரம் சன்னமாக அதிகம்

என்கிறார்கள்
பொதுவாகவே ஆளும் கட்சிகளின் மீதான மக்களின் கோவம் இப்படியாகவும் வெளிப்படும் என்பது வாக்குப்பதிவின் சூத்திரங்களில் ஒன்று
எனில் மேற்கு வங்கத்தில் பாஜக மீதும், திரிணாமுல் மீதான மக்களின் கோவம்தான் வாக்குப் பதிவின் விகிதாச்சார உயர்விற்கான காரணமாகக் கொள்ளலாம்
எனில்,
இது மார்க்சிஸ்ட் கட்சிக்கான சாதகமாக இருக்கலாம் என்பதை மறுப்பதற்கு இல்லை

இதுதான் இந்தியா

 INDIA TODAY

**************
நேற்று வைரலான ஒரு விஷயத்தை இன்று வைக்கும் சுறுசுறுப்பு என்னுடையது
பெங்கலூரு
கிட்டத்தட்ட முப்பது குழந்தைகள் நிற்கிறார்கள்
19 - 22 வயது அளவில்
மைக்கை நீட்டுகிறார்
யாருக்கு, எதற்கு வாக்களிப்பீர்கள்?
ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. பதவியில் இருக்கும் முதல்வர்களே கைது செய்யப்படுகிறார்கள் என்கிறான் அந்தக் குழந்தை
மைக்கை நீட்டியதும் நம் அளவில் ஒரு குழந்தைதான்
அவர் எதிர்பார்த்த அல்லது விரும்பிய பதிலாக இது இல்லை
எனவே
கைது செய்யப்பட்டவர்களிடம் ஊழல் கறையே இருக்காது என்று நம்புகிறீர்களா? என்று விஷத்தில் நனைத்த காட்பரீசை நீட்டுகிறார்
நானே காட்பரீஸ்தான், எனக்கே காட்பரீசா என்பதாக சிரித்துக் கொண்டே எதிர்கொள்கிறான் அந்தக் குழந்தை
இருங்க, இருங்க அதற்குத்தான் வருகிறேன் என்றவன். அப்படி ஊழல் செய்தவங்க எல்லாம் அந்தக் கட்சிக்குப் போனா உத்தமர்களாக மாறுகிறார்களே எப்படி என்கிறான்
யாருக்கு வாக்கு என்ற அதே கேள்வியோடு இன்னொரு குழந்தையிடம் மைக் நீள்கிறது
இந்த சமூகத்தைப் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆராவாரிக்கிறார்கள் குழந்தைகள்.
பிரிப்பவர்களுக்கு எதிரானது எங்களது வாக்கு என்கிறாள். புரியும்படி சொன்னால் வெறுப்புக்கு இல்லை அன்பிற்குத்தான் எனது வாக்கு என்கிறாள்
குழந்தைகள் ஆரவாரிக்கிறார்கள்
நாம் தெளிவாக இருப்பதாக நினைக்கிறோம்
அந்தக் குழந்தைகளின் ஆரவாரம் சொல்கிறது
ஊழலைவிட வெறுப்பைத்தான் முதலில் அகற்ற வேண்டும்
மைக்கைப் பார்க்கிறேன்
"INDIYA TODAY" என்றிருக்கிறது
இதுதான் இந்தியா இன்னமும் என் அன்பிற்குரிய சார்

Friday, April 26, 2024

சத்தம்தான் பிரச்சினை

 கர்நாடகா

அநேகமாக அது ஒரு தேநீர்க் கடை
அளவிற்கு அதிகமான சத்தத்தில் அனுமார் பாடலை கேட்கிறார்
அது பக்கத்தில் உள்ள கடைக்காரர்களுக்கு தொந்தரவாக இருந்திருக்கிறது
சொல்கிறார்கள்
கேட்க மறுக்கிறார்
சண்டை வருகிறது
தாக்கி விடுகிறார்கள்
இவரும் காவல் நிலையத்தில்,
தான் சத்தமாக பாடலை வைத்துக் கேட்டதால் இவர்கள் தாக்கியதாக புகார் அளிக்கிறார் என்று அரண்செய் மகிழ்நண் ஒரு நேர்காணலில் கூறுகிறார்
இதில் எந்த இடத்திலும் அனுமார் குறித்த பாடல் என்பது பிரச்சினையாக இல்லை
சத்தம்தான் பிரச்சினை
அந்தப் பாடலுக்கு முந்தைய பாடல் அய்யப்பன் பாடலாகவும் இருந்திருக்கலாம் அல்லது ஒரு சினிமா பாடலாகவும் இருந்திருக்கக் கூடும்
அவர்கள் விசாரனை நடத்தி சிலரைக் கைதும் செய்கிறார்கள்
அவர்களில் பெரும்பான்மையோர் இந்துக்கள்
இந்த சத்தப் பிரச்சினையை
கடவுள் பிரச்சினையாக ஒரு மதவெறியர் மாற்ற முயன்றாலே தவறு
இந்தியா என்பது ஒரு குடும்பம் எனில் அந்தக் குடும்பத்தின் தலைவர் நீங்கள்
இவ்வளவு கேவலமாக இறங்குவீர்களா?
அசிங்கமாக இருக்கிறது சார்
Like
Comment
Share

Wednesday, April 17, 2024

இதுதான் கிழவன் செஞ்சு கிழிச்சது

 சென்ற ஆண்டு தஞ்சையில் நடந்த கவேரி கலை விழாவில் பேசும்போது

”பெரியார் என்ன செஞ்சு கிழிச்சார்னு கேட்பவர்களுக்கு ஒன்று சொல்வேன்
உளறுபவர்களைப் பார்த்து நல்ல சாதிக்குப் பொறந்தவனாட்டமா பேசற. ஏதோ ஈன சாதிக்கு பொறந்தவனாட்டம்ல பேசற என்று கேட்ட காலம் இருந்தது
இப்போது உளறுபவனைப் பார்த்தால் படித்தவன் பேசற மாதிரியாப் பேசற என்று கேட்கிறோம்
இதுதான் கிழவன் செஞ்சு கிழிச்சது”
என்று பேசினேன்
இப்ப என்னடன்னா கோவைக்கு வந்த சார்
“அண்ணாமலை நல்ல சாதிக்குப் பிறந்தவர்” என்று சொல்கிறார்
எனில் அண்ணாமலை சாதி கடந்து மற்ற சாதியில் பிறந்தவர்களை எல்லாம் ஈன சாதிக்கு பிறந்தவர்கள் என்கிறாரா
அப்பட்டமாக பொதுவெளியில் சாதி பார்க்கும் அவர்களைப் புறக்கணிப்போம்
இந்தியக் கூட்டணிக்கு வாக்களிப்போம்

Tuesday, April 16, 2024

150 கோடி மக்கள் வாழும் ஒரு பரந்த நாட்டிற்கான தேர்தல் அறிக்கையை

 கிட்டத்தட்ட 150 கோடி மக்கள் வாழும் ஒரு பரந்த நாட்டிற்கான தேர்தல் அறிக்கையை பாஜக 14 நாட்களில் தயாரித்ததாகக் கூறுகிறது

இந்திய மக்களை இதைவிட அழகாய் யாராலும் அலட்சியப் படுத்திவிட முடியாது
இந்த அலட்சியத்திற்காகவும் பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும்

குழாய் வழியாக தண்ணீரே வருவதில்லை

 குழாய் வழியாக எரிவாயு வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கை கூறுகிறது

குழாய் வழியாக தண்ணீரே வருவதில்லை
எரிவாயு எப்படி சாத்தியம் என்கிறார் திரு சிதம்பரம்
நியாயம்தான

“வள்ளுவர் பண்பாட்டு மையம்”

 உலகமெங்கும் “வள்ளுவர் பண்பாட்டு மையம்” அமைக்கப்படுமாம்

அங்கு யோகா உள்ளிட்டவைகள் பயிற்றுவிக்கப்படுமாம்
பாஜக தேர்தல் அறிக்கை கூறுகிறது
அடுத்த தேர்தலுக்கு
காந்தி பண்பாட்டு மையங்கள் ஏற்படுத்தி கோட்சே குறித்து கருத்தரங்குகள் நடத்துவதாக சொல்வீர்களோ

Friday, April 12, 2024

அப்பட்டமான விதி மீறல்கள்

 தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிற பிரதமர் ஆளுனர் மாளிகையில் தங்குகிறார்

அண்ணாமலை இரவு பத்தே முக்கால் மணிக்கு மேலும் பிரச்சாரம் செய்கிறார்
தட்டி கேட்பவர்களை அடித்து நொறுக்குகிறார்கள்
அப்பட்டமான விதி மீறல்கள்
பிரதமர் பிரச்சாரத்திற்கு குறிப்பிட்டகாலத் தடை விதிக்க வேண்டும்
அண்ணாமலையை டிஸ்குவாலிஃபை செய்ய வேண்டும்

Thursday, April 11, 2024

அந்த பனகல் அரசரின் பெயரில் அமைந்துள்ளதுதான்

 தென்னிந்தியர்கள் பிரிவினைவாதிகள் என்பது மாதிரி வடக்கே பேசிவிட்டு

இங்கு வந்து ஒன்றுமே தெரியாதது மாதிரி ”ரோட் ஷோ” நடத்துகிறீர்களே
ஒன்று தெரியுமா,
நீங்கள் எப்படிப்பட்டவர்கள்,
எப்படிப் பேசுவீர்கள் என்பது பற்றியெல்லாம் 107 ஆண்டுகளுக்கு முன்னமே எங்கள் தாத்தன்கள் எங்களுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்
20.08.1917
கோவையில் முதல் பார்ப்பனரல்லாதார் மாநாடு
எம் பாட்டனார் பனகல் அரசர்தான் தலைவர்
”இந்திய நாட்டின் சார்பாகப் பேசும் உரிமையை அவர்களுடையது மட்டுமே என்று கூறும் அவர்கள் நம்மை பிரிவினைவாதிகள் என்று குற்றம் சுமத்துகின்றனர்”
போதுமா சார்,
இன்னொரு தகவலையும் கேட்டுக் கொள்ளுங்கள்
அந்த பனகல் அரசரின் பெயரில் அமைந்துள்ளதுதான் நீங்கள் ஷோவைத் துவக்கிய “பனகல் பார்க்”
போங்க சார் போங்க

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...