Friday, April 26, 2024

சத்தம்தான் பிரச்சினை

 கர்நாடகா

அநேகமாக அது ஒரு தேநீர்க் கடை
அளவிற்கு அதிகமான சத்தத்தில் அனுமார் பாடலை கேட்கிறார்
அது பக்கத்தில் உள்ள கடைக்காரர்களுக்கு தொந்தரவாக இருந்திருக்கிறது
சொல்கிறார்கள்
கேட்க மறுக்கிறார்
சண்டை வருகிறது
தாக்கி விடுகிறார்கள்
இவரும் காவல் நிலையத்தில்,
தான் சத்தமாக பாடலை வைத்துக் கேட்டதால் இவர்கள் தாக்கியதாக புகார் அளிக்கிறார் என்று அரண்செய் மகிழ்நண் ஒரு நேர்காணலில் கூறுகிறார்
இதில் எந்த இடத்திலும் அனுமார் குறித்த பாடல் என்பது பிரச்சினையாக இல்லை
சத்தம்தான் பிரச்சினை
அந்தப் பாடலுக்கு முந்தைய பாடல் அய்யப்பன் பாடலாகவும் இருந்திருக்கலாம் அல்லது ஒரு சினிமா பாடலாகவும் இருந்திருக்கக் கூடும்
அவர்கள் விசாரனை நடத்தி சிலரைக் கைதும் செய்கிறார்கள்
அவர்களில் பெரும்பான்மையோர் இந்துக்கள்
இந்த சத்தப் பிரச்சினையை
கடவுள் பிரச்சினையாக ஒரு மதவெறியர் மாற்ற முயன்றாலே தவறு
இந்தியா என்பது ஒரு குடும்பம் எனில் அந்தக் குடும்பத்தின் தலைவர் நீங்கள்
இவ்வளவு கேவலமாக இறங்குவீர்களா?
அசிங்கமாக இருக்கிறது சார்
Like
Comment
Share

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...