Showing posts with label குட்டிப் பதிவுகள். Show all posts
Showing posts with label குட்டிப் பதிவுகள். Show all posts

Tuesday, December 23, 2025

இந்திய விழுமியங்களோடு சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள் சங்கிகள்

 

திருப்பரங்குன்றம் பத்தி நாலு அல்லது அஞ்சு வார்த்தைகளில் சொல்லுடா எட்வின்
இந்திய விழுமியங்களோடு சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள் சங்கிகள்

Thursday, June 26, 2025

அமெரிக்கா இந்தியாவின் பலத்திற்கும் கீழான நாடுதான்

 மெய்யாகவே எல்லா நாடுகளும் அணு ஆயுதங்களை அழித்துவிடும் நிலையில்

அமெரிக்கா இந்தியாவின் பலத்திற்கும் கீழான நாடுதான்
இரண்டுநாள் முன்பு ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலும்
இர்ரான் அதை எதிர்கொண்ட விதமும் இதைத்தான் சொல்கின்றன

Tuesday, June 24, 2025

ஈரானோடு நிற்பதென்பது

 

இந்த நொடியின் நியாயத்தோடு நிற்பது
மெளனமாக இருப்பதென்பது அநியாயத்தோடு நிற்பது

21.06.2025

Thursday, March 13, 2025

காதுகேட்கும் கருவி குறித்த என் பதிவு குறித்து

இன்று மாப்பிள்ளை அழைத்தான்

காதுகேட்கும் கருவி குறித்த என் பதிவு குறித்து பேசினான்
“அம்மாவிற்கு ஏற்பாடு செய்யவேண்டும் மாமா” என்று விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டான்
இதை எல்லாம் எழுத வேண்டுமா என்று நிறையபேர் கேட்டார்கள்
நான் காதுகேட்கும் கருவி வைத்திருப்பதுகுறித்து இதுவரை நான்கைந்துமுறை இங்கு வைத்திருக்கிறேன்
இதுவரை நான்கைந்துபேர் விசாரித்து, தயக்கம் களைந்து தெளிவு பெற்றிருக்கிறார்கள்
இதற்குத்தான் இதை இங்கு வைப்பது

வைத்துக்கொண்டுதான் இருப்பேன்

13.03.2025

Wednesday, January 24, 2024

பட்டேலுக்கு ஏன் சிலை வைத்தீர்கள் ரவி

 சுதந்திரத்திற்கு காரணம் காந்தியல்ல சுபாஷ்தான் என்பதை ஏற்பதில் சங்கடமில்லை

யார் கூட
யார் குறைச்சல் என்பதல்ல எமக்கு பிரச்சினை
அது உண்மையெனில்
சுபாசுக்கு வைக்காமல் பட்டேலுக்கு ஏன் சிலை வைத்தீர்கள் ரவி

Thursday, January 18, 2024

"என் நண்பர்களையோ எதிரிகளையோ என் மரணத்தின் பொருட்டு துன்புறுத்தாதீர்கள்"

 

"என் நண்பர்களையோ எதிரிகளையோ என் மரணத்தின் பொருட்டு துன்புறுத்தாதீர்கள்" ரோஹித் வெமுலா.
உன் எதிரிகள் விஷயத்தில் உன் கோரிக்கைக்கு தேவை இருக்கும் என்று நினைத்தாயா மகனே?

Wednesday, November 1, 2023

ஒருக்கால் பைனலில் ஜெயிச்சுட்டாங்கன்னா...?

 

ஆப்கானிஸ்தான் இந்த அடி அடிக்கிறாங்களே

ஒருக்கால் பைனலில் ஜெயிச்சுட்டாங்கன்னா...?
கொண்டாடுவோம்

Saturday, July 31, 2021

இரண்டும் பிஜேபி ஆளும் மாநிலங்கள்

 ஒன்றியம் என்றால் கோவம் வருகிறது அவர்களுக்கு

ஒரே நாடு என்கிறார்கள்
மிசோரம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைத் தகறாறில் இதுவரை ஐந்து காவலர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்
இரண்டு முதல்வர்களும் திட்டிக் கொள்கிறார்கள்
இரண்டும் பிஜேபி ஆளும் மாநிலங்கள் என்பது தகவலுக்காக

29.07.2021

தீண்டாமைச் சுவர் இடிக்கப்படும்வரை

 மேலக்கல்கண்டார்கோட்டை மாநகராட்சி அலுவலகம் முன்பு ராஜீவ்காந்தி நகரில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரி CPM ஆர்ப்பாட்டம் செய்த செய்தி 28.07.2021 தீக்கதிரில் வந்திருக்கிறது

தீண்டாமைச் சுவர் இடிக்கப்படும்வரை போராட்டம் தொடரட்டும்
தோழர்களுக்கு அன்பும் நன்றியும்

28.07.2021

Thursday, July 29, 2021

நம்பி வாக்களித்த மக்களை

 சென்னை முழுவதையும் ஸ்டாலினுக்கு சென்னை மக்கள் கொடுத்திருக்கிறார்கள்

இது கலைஞருக்கே வாய்க்காதது
அரும்பாக்கம் கூவம்பகுதி குடியிருப்புகளை அறிவிப்பின்றி இடிக்க முயற்சிப்பதாக வரும் தகவல்கள் கவலையளிக்கின்றன
நம்பி வாக்களித்த மக்களைப் பாதுகாக்க வேண்டியது ஸ்டாலினது கடமை

29.08.2021

மாநிலங்களுக்கு இடையேயான எல்லைத் தகறாறில் ...

 ஒன்றியம் என்றால் கோவம் வருகிறது அவர்களுக்கு

ஒரே நாடு என்கிறார்கள்
மிசோரம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைத் தகறாறில் இதுவரை ஐந்து காவலர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்
இரண்டு முதல்வர்களும் திட்டிக் கொள்கிறார்கள்
இரண்டும் பிஜேபி ஆளும் மாநிலங்கள் என்பது தகவலுக்காக

தீண்டாமைச் சுவர் இடிக்கப்படும்வரை

 மேலக்கல்கண்டார்கோட்டை மாநகராட்சி அலுவலகம் முன்பு ராஜீவ்காந்தி நகரில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரி CPM ஆர்ப்பாட்டம் செய்த செய்தி 28.07.2021 தீக்கதிரில் வந்திருக்கிறது

தீண்டாமைச் சுவர் இடிக்கப்படும்வரை போராட்டம் தொடரட்டும்
தோழர்களுக்கு அன்பும் நன்றியும்

Thursday, April 23, 2020

மருத்துவப் படிப்பிற்கே தேர்வை ரத்து செய்யும்போது...

இரண்டு நாட்களுக்கு முன்னால் தனக்கும் திரு கவுண்டமணி அவர்களுக்கும் இடையேயான அலைபேசி உரையாடலை தோழர் பாமரன்
(Ezhirko Pamaran Shanmugasundaram) வைத்திருந்தார்
மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்த மாணவர்களுக்கான இறுதித் தேர்வை அமெரிக்கா ரத்து செய்ததும் இல்லாமல் அவர்களுக்கு லைசென்சும் வழங்கி அவர்களை கொரோனாப் பணிக்கு அனுப்பிட்டதாக திரு கவுண்டமணி கூறியதாகவும்
ஏதோ அடித்து விடுகிறார் போல என்று நினைத்த தான் இணைய தளத்தில் சோதித்தபோது அது உண்மை என்பதை தெரிந்து கொண்டதாகவும் கூறியிருந்தார்
எவ்வளவு தேடலோடு இருக்கிறார் கவுண்டமணி
அது சரி,
மருத்துவப் படிப்பிற்கே தேர்வை ரத்து செய்யும்போது இத்தகைய கொடிய சூழலிலும் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வை எப்படியும் நடத்தியே தீர்வது என்ற நமது நிலை மெய்சிலிர்க்க வைக்கிறது

22.04.2020

Wednesday, April 22, 2020

அவ்வளவுதான் திரு ஜெயமோகன்

நானும் மனுஷன்
நீங்களும் மனுஷன்
அவ்வளவுதான் திரு ஜெயமோகன்
நீங்கள் மேலடுக்கு நான் கீழடுக்கு என நீங்கள் கருதுவீர்களென்றால்
நீங்கள் எத்தனை ஆயிரம் பக்கம் எழுதினால் எமக்கென்ன?
நீங்கள் கழிவறையில் கழிப்பதற்கும்
வால்யூம் வால்யூமாய் எழுதிக் குவித்திருப்பதற்கும்
ஒரே ஒரு வித்தியாசமும் இல்லை

பொறுப்பேற்க முடியாத எது குறித்தும்....

மூன்று நாட்களில் கொரோனா இல்லாமல் போகும் என்றீர்கள்
மூன்றாவது நாளில் பேரதிகமாய்த் தொற்று
இதற்கு நீங்கள் காரணம் இல்லை என்பது தெரியும்
பொறுப்பேற்க முடியாத எது குறித்தும் உளறுவதைத் தவிர்க்க வேண்டும்

Thursday, September 27, 2018

இதை இவ்வளவு காலம் சகித்ததே தவறு

கணவரது அனுமதி பெறாமல் திருமணமான அடுத்தவரோடு உடலுறவு கொள்வது குற்றம் என்றும் அதற்காக அந்த ஆணை தண்டிக்கவும் சொன்ன சட்டத்தைப் பற்றியும் அது தவறென்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது குறித்தும் நிறைய பேசலாம்.
பேசுவோம்.
முன்னதாக,
கணவரின் அனுமதி தேவை என்று சொன்ன அந்த சட்டம் கணவரின் அனுமதி இன்றி வரும் பெண்ணோடு உறவு கொள்ள அவரது மனைவியிடம் அனுமதி பெறுவது குறித்து கவலைப்படாததே குற்றம்
இதை இவ்வளவு காலம் சகித்ததே தவறு
மற்றபடி இது எந்த அளவு சரி எந்த அளாவு தவறு, இதன் மேன்மை கீழ்மை குறித்தான எனது  பார்வை  குறித்து காக்கையில் (Kaakkai Cirakinile) எழுத இருக்கிறேன்

Thursday, April 26, 2018

தமிழ் மக்கள் மறந்திருப்பார்கள் என்பதைத் தவிர

ஏதோ ஒரு அதிசயம் நடந்து ஒருவாரம் ஊடகங்கள் எல்லாம் இயங்க இயலாசூழல் ஏற்பட்டால்
தமிழிசை ராஜா போன்றோரை தமிழ் மக்கள் மறந்திருப்பார்கள் என்பதைத் தவிர வேறு என்ன நிகழ்ந்துவிடப் போகிறது?

Thursday, February 15, 2018

உங்களிடம் இருந்தும் நம் மண்ணை....

இது என் மண்,
உங்கள் மண்,
நம்ம மண் இது தமிழிசை அவர்களே.
இது ஆண்டாள் மண், பெரியார் மண் அல்ல என்றால் அது என் மண் இல்லை. இது என் மண் இல்லை என்றால் இது உங்கள் மண்ணும் இல்லை
சோகம் என்னவென்றால் இது ஆண்டாள் மண், நம்ம மண் இல்லை என்ற அவனது கூற்றை நீங்கள் சொல்வதுதான்.
இது உங்களுக்கும் ஒருநாள் புரியும். அதுவரைக்கும் உங்களிடம் இருந்தும் நம் மண்ணைக் காக்கவேண்டிய பொறுப்பு எங்களுக்குள்ளது

Tuesday, January 16, 2018

எதனால் மரணம்?


சந்தேகத்திற்கிடமான ஒரு மனிதனின் மரணம் குறித்து விசாரிக்கத் தேவையில்லை என்று சொல்வது அவரது மகனே ஆயினும் அந்தக் கூற்றுக்காகவே அவனும் அவசியம் விசாரிக்கப்பட வேண்டியவன்

Tuesday, December 27, 2016

நல்லவர்களா இருந்தா மட்டும்

நல்லவர்களே இல்லை என்கிறார்கள். இருக்கிறார்களே தோழர் என்று தொடங்கினால் நல்லவர்களா இருந்தா மட்டும் போதுமா? என்கிறார்கள்.

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...