Thursday, April 23, 2020

மருத்துவப் படிப்பிற்கே தேர்வை ரத்து செய்யும்போது...

இரண்டு நாட்களுக்கு முன்னால் தனக்கும் திரு கவுண்டமணி அவர்களுக்கும் இடையேயான அலைபேசி உரையாடலை தோழர் பாமரன்
(Ezhirko Pamaran Shanmugasundaram) வைத்திருந்தார்
மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்த மாணவர்களுக்கான இறுதித் தேர்வை அமெரிக்கா ரத்து செய்ததும் இல்லாமல் அவர்களுக்கு லைசென்சும் வழங்கி அவர்களை கொரோனாப் பணிக்கு அனுப்பிட்டதாக திரு கவுண்டமணி கூறியதாகவும்
ஏதோ அடித்து விடுகிறார் போல என்று நினைத்த தான் இணைய தளத்தில் சோதித்தபோது அது உண்மை என்பதை தெரிந்து கொண்டதாகவும் கூறியிருந்தார்
எவ்வளவு தேடலோடு இருக்கிறார் கவுண்டமணி
அது சரி,
மருத்துவப் படிப்பிற்கே தேர்வை ரத்து செய்யும்போது இத்தகைய கொடிய சூழலிலும் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வை எப்படியும் நடத்தியே தீர்வது என்ற நமது நிலை மெய்சிலிர்க்க வைக்கிறது

22.04.2020

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...