Wednesday, April 8, 2020

எல்லோரையும் “அவர்கள்” பட்டியலில் சேர்த்து விடாதீர்கள்

என் நட்பில் உள்ள மரியாதைக்குரிய தோழியர்கள் சிலர் குடும்பச் சூழலுக்கு கட்டுப்பட்டு அன்றைய தினம் விளக்கேற்றினார்கள்
இருவரும் அதற்காக மிகவும் வருந்தி பதிவிட்டு இருந்தனர்
அதில் ஒருவர்
“என் வீட்டிலும் ஒரு சங்கி இருக்கே. என்ன செய்ய?”
இவர்
அப்படி ஒரு அழுத்தமான இடதுசாரியாக வாழ ஆரம்பித்திருப்பவர். இந்துத்துவாவை மூர்க்கமாக எதிர்ப்பவர்.
கணவர் ஆசாரமான பக்திமான்
இன்னொருவர்,
“இத செய்யலன்னா என் வீட்டுக்காரர் என்னை அன்பொண்டாட்டி செய்துடுவார்” என்றும் பதிவிட்டிருந்தனர்
”அன்பொண்டாட்டி”
அய்யோ அய்யோ என்ன ஒரு பகடி
சொல்லி சொல்லி சிரித்துக் கொண்டிருக்கிறேன்
இவர் மதவெறிக்கு எதிராக கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு பக்தர்
நான் சொல்வது இதுதான்
இருவருமே இப்படி ஆதங்கப் படுவதற்கு ஏதும் இல்லை
இன்னும் சொல்லப்போனால் ஆண்கள் விளக்கேற்ற விரும்பாமல் இருந்த குடும்பங்களிலும் பெண்கள் ஏற்றி வைத்திருக்கக் கூடும்
இது இறைநம்பிக்கை சார்ந்த விஷயம்
எங்கள் கிராமத்தில்
எங்க அம்மாவும் ஏற்றி
வைத்திருக்கும்
என் தம்பி ஏற்றி வைத்திருப்பான்
என் அம்மாவும் தம்பியும் அழுத்தமான திமுக காரர்கள்
இவர்கள் யாரும் மதவெறி ஆட்கள் இல்லை
இறை நம்பிக்கை உடையவர்கள்
நம் தோழியர்களின் கணாவர்களும் இறைநம்பிக்கையாளர்கள்தான்
விளக்கு ஏற்றினால் தெய்வம் காப்பாற்றிவிடும் என்ற நம்பிக்கை
அல்லது,
ஏற்றாவிட்டால் இறைவன் இன்னும் பேரதிகமாய் சோதிப்பான் என்ற பயம்
வெறுக்காதீர்கள்
எல்லோருக்கும் சொல்வது இதுதான்,
எல்லோரையும் “அவர்கள்” பட்டியலில் சேர்த்து விடாதீர்கள்
நமக்கு வேலை அதிகமாக இருக்கிறது
அவ்வளவுதான்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...