Thursday, April 2, 2020

ஆனால் இவை ஏதொன்றிற்கும் ஆளற்றவர்களுக்கு....

நேற்று காலை பள்ளிக் கல்வித்துறையின் மேநாள் இயக்குனரும் தற்போதைய தமிழக அரசின் இணைச் செயலாளராகவும் (துறை நினைவிற்கு வரவில்லை) கார்மேகம் சார் அலைபேசினார்
இன்று தோழர் மோகனா ( Mohana Somasundram ) அலை பேசினார்
கார்மேகம் சார் தென் கொரியா குறித்து முக்கால் மணிநேரம் பேசிக்கொண்டு இருந்தார்
அது குறித்து ஒரு கட்டுரையாகவே தந்து விடுவேன்
மோகனா அமெரிக்கா குறித்து பேசிக் கொண்டிருந்தார்
ஆனால் இருவரும்
தென்கொரியா குறித்து பேசுவதற்கோ அமெரிக்கா குறித்து பேசுவதற்கோ என்னை அழைக்கவில்லை
ஒரே விஷயம் குறித்து பேசவே இருவரும் அழைத்தது
சுகர் இருக்காம்
அதனால் கொரோவிற்கு என்னைப் பிடிக்குமாம்
என்னைப் பிடித்தவர்களை நோக்கியே நான் பயணப்படுபவனாம்
அதனால்
வீட்டை விட்டு வெளியே வரக் கூடாதாம்
காய்கறி வாங்கக்கூட
ஆறேழு வார்த்தைகள்தான்
ஆனால் அவை
நமக்காக இருக்கிறார்கள் என்பதை சொல்லின
நாம் அநாதை அல்ல என்று சொல்லின
எதற்கு மறைத்துக் கொண்டு
அப்படி ஒரு உற்சாகம் வந்துவிட்டது
உங்களுக்கும் இதுபோன்ற உற்சாகத்தை யாரேனும் தந்திருக்கக் கூடும்
ஆனால் இவை ஏதொன்றிற்கும் ஆளற்றவர்களுக்கு.....
நாம்தான்
நாம்தான் தரவேண்டும் அதை
வெளிபோக முடியாத உடம்பு
ஆனால் என்ன
அவர்களுக்காக சிந்திப்போம்
அவர்களுக்காக எழுதுவோம்
அவர்களுக்காக செயல்படுவோம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...