Wednesday, April 22, 2020

விடுதலைத் தழும்புகள் நூலை முன்வைத்து

தொட்டால் ஒடிந்துவிடும் அளவிற்கு வயதாகிப் போன பழைய நோட்டுகளில் இருக்கும் குறிப்புகளை புது நோட்டில் எழுதிக் கொண்டிருக்கிறேன்
பேசுவதற்காகவும், எழுதுவதற்காகவும் எடுத்து வைத்துள்ள குறிப்புகள்
தோழர் சு.பொ. அகத்தியலிங்கம் ( Su Po Agathiyalingam) எழுதிய “விடுதலைத் தழும்புகள் என்ற நூலிலிருந்து மட்டும் நூற்றிற்கும் மேற்பட்ட குறிப்புகள் கொண்ட நோட்டு கிடைத்திருக்கிறது
நன்றாக நினைவிருக்கிறது,
252 குறுங்கட்டுரைகள்
சின்னச் சின்ன சம்பவங்களின் தொகுப்புகள்
நாடக மேதை விஸ்வநாத தாஸ் ஒரு வருடப்பு நாளில் மேடையிலேயே இறந்தது
ஒருமுறை அவர் முருகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்
வள்ளி கொக்குகளை இப்படியாக விரட்டுகிறார்,
“வெட்கங்கெட்ட வெள்ளை கொக்குகளா
விரட்ட விரட்ட வாரீங்களா”
தாஸ் அவர்களை கைது செய்ய போலீஸ் மேடை ஏறுகிறது
தாஸ் கேட்கிறார்,
“யாரைக் கைது செய்ய வேண்டும்?”
“விஸ்வநாத தாஸை”
“இங்கு நிற்பது தாஸ் அல்ல, முருகன். முருகன் மீது வாரண்ட் இருந்தால் சொல்லுங்கள்.
கீழிறங்கிய காவலர்கள் நாடகம் முடிந்தபிறகே அவரைக் கைது செய்கின்றனர்
அந்த மாவட்டத்தில் மக்களை மிருகத்தனத்தோடு அடிமைகளைப் போல நடத்திய கலெக்டரை
தங்கள் பள்ளிக்கு விருந்தினராக அவர் வந்திருந்தபோது இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் சுட்டுக் கொன்றுவிட்டு 12 ஆண்டுகள் சிறைக்குப் போனது
இதைப் பதியும் நேரத்தில் அந்தக் கொலையை நியாயப்புத்திவிடாத கவனம்
இப்படியான 252 சிறு கட்டுரைகள்
வசந்தி தேவி அம்மாவின் மிகச் செரிவான அணிந்துரை
புத்தகத்தைத் தேட வேண்டும்
1999 இல் ஒரு கூட்டத்திற்குஇதை எடுத்திருக்கிறேன் என்கிறது அந்தக் குறிப்பு
இது வளரிளம் தோழர்களுக்கான முக்கியமான புத்தகம்
பதிப்பில் இருக்கிறதா தெரியவில்லை
இல்லை எனில்,
தோழர் சிராஜிற்கு (Mohammed Sirajudeen) இந்தக் கோரிக்கையை வைக்கிறேன்

20.04.2020

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...