Friday, April 24, 2020

இல்லாத நமக்கு கல்வியும் சுகாதாரமும் தானே சாமிகளே முக்கியம்

திரு சீமான் அவர்களை முதன்முதலில் முழு அட்டைப் படத்தில் வைத்தது அநேகமாக “இளைஞர் முழக்கம்” என்றுதான் நினைக்கிறேன்
கொஞ்சம் முன்னப் பின்ன இருக்கலாம். ஆனால் விஷயம் இதுதான். அந்த அட்டைப் படத்தில்,
“ஆலயங்களைவிடவும் கழிவறைகளே முக்கியமானவை”
என்றிருக்கும்
அவரது செறிவான பேட்டிகளில் அதுவும் ஒன்று
அதனாலேயே அவரைப் பிடித்துப் போனது
இப்படிப் பேசிய சீமான் எப்படி இப்படி மாறினார் என்று அவ்வப்போது வருத்தம் எழும்
சில வருஷங்களுக்கு முன்னால்
“Toilet first
Temple later”
என்று பிரதமர் சொன்னார்
என்ன ஆச்சு?
ஏனிவர்இப்படி?
சரி யார் சொன்னாரென்பதோ
ஏன் சொன்னாரென்பதோ வேண்டாம்
விஷயம் சரிதானே என்று
அவர்வாய் கேட்டபோதும் மெய்ப்பொருள் கண்டோம்
சமயபுரம் பூச்சொரிதலுக்கு வசூலுக்கு வருவார்கள்
என்னோடு பேசுவார்கள்
தேநீர் சாப்பிடுவார்கள்
என்னிடம் காசு மட்டும் கேட்கமாட்டார்கள்
அவர்களில் ஆர்எஸ்எஸ் பிள்ளைகளும் உண்டு
ஆனால் அவர்களே தங்கள் தெரு பிள்ளைகளின் படிப்பிற்காக மருத்துவ செலவிற்காக வம்படித்து வாங்கிப் போவார்கள்
அதைத்தானே ஜோதிகா சொன்னார்
ஏன் கோவம்?
இல்லாத நமக்கு கல்வியும் சுகாதாரமும் தானே சாமிகளே முக்கியம்
அமைதியா யோசிங்கப்பா

23.04.2020

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...