Sunday, July 31, 2022

முதல் பட்டியலில் தமிழ்நாடும் இரண்டாவது பட்டியலில் தமிழும் இல்லை எனில்

 29.07.2022 அன்று நடந்த தேசியக் கல்விக் கொள்கை 2020 செயல்படுத்தப்பட்ட இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவில் ஒன்றிய உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்களது உரை சில அய்யங்களை நமக்கு எழுப்புகிறது

அவற்றின்மீது நமது உயர்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு பொன்முடி அவர்களும்
முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகிறோம்
தனது உரையினூடே
10 மாநிலங்கள் தங்களது மொழியில் பொறியியல் வகுப்புகளை நடத்த ஒத்துக் கொண்டுள்ளதாகவும்
ஆங்கிலம் தவிர 12 மொழிகளில் JEE மற்றும் NEET தேர்வுகள் நடத்தப்படுவதாகவும்
அவர் கூறியிருக்கிறார்
10 மாநிலங்கள் தங்களது மொழியில் பொறியியல் வகுப்புகளை நத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் கூறுவது உண்மை எனில்
1) ஒப்புக்கொண்டுள்ளன என்றால் இதைக் கோரியது ஒன்றிய அரசு என்றும்
அந்தக் கோரிக்கையை 10 மாநிலங்கள் ஏற்றிருப்பதாகவும் பொருள்
இது உண்மையாக இருப்பின் அந்தப் பட்டியலில் தமிழ்நாடும் உள்ளதா?
இல்லை எனில் ஏன் இல்லை?
ஆங்கிலம் தவிர 12 மொழிகளில் NEET மற்றும் JEE தேர்வுகள் நடைபெறுவதாக அவர் சொல்வது உண்மை எனில் அவற்றுள் தமிழ் உள்ளதா?
முதல் பட்டியலில் தமிழ்நாடும்
இரண்டாவது பட்டியலில் தமிழும் இல்லை எனில்
அவை சார்ந்து அமைச்சரும் முதல்வரும் கவனம் செலுத்த வேண்டுகிறேன்
அமைச்சர் சொல்வது உண்மை இல்லை எனில் அதற்கு அமைச்சரும் முதல்வரும் எதிர்வினையாற்ற வேண்டுகிறேன்

முகநூல்
31.07.2022

இந்திவழிக் கல்வியை நோக்கியான நகர்வு இது

 


ஒருவர் சரியாகப் பேசினால்

பேசியது மாண்பமை அமித்சாவே ஆனாலும் பாராட்டிவிட வேண்டியதுதான்
அதே நேரத்தில் அதை பின்னணியில் உள்ள அரசியல் அய்யங்களையும் சேர்த்தே வைக்க வேண்டிய தேவையும் இருக்கிறது
அதை ஒட்டி சில கோரிக்கைகளையும் வைக்க வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது
மூன்றையும் சேர்த்துதான் நாம் செய்து வருகிறோம்
செய்யவும் செய்வோம்
நேற்று அதாவது 29.07.2022 அன்று நடைபெற்ற தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020 இன் இரண்டாம் ஆண்டு நிறைவுநாளில் இந்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா உரையாற்றிய செய்தியை 30.07.2022 நாளிட்ட THE HINDU தருகிறது
மிகச் சரியான தயாரிப்போடு கூடிய மிகச் சரியானதும் தேவையானதுமான உரை அது
இந்த நாட்டில் 95 சதவிகிதம் குழந்தைகள் தங்களாது தாய்மொழி வழியிலேயே கல்வி பயில்வதாலும்
தாய்மொழி வழியிலேயே ஒருவரது இயல்பான சிந்தனை இருக்கும் என்பதாலும்
பொறியியல், சட்டம், மருத்துவம் போன்றவற்றை தாய்மொழியிலேயே தருவதுதான் அவசியம் என்கிறார்
தாய்மொழி வழியில் ஆராய்ச்சிகள் நடக்காததால்தான் ஆராய்ச்சித் துறையில் இந்தியா இன்னும் போகவேண்டிய இடத்திற்கு போகவில்லை என்றும் ஆதங்கப்படுகிறார்
நாட்டின் 5 % விழுக்காடு ஆற்றலே கிடைக்கிறது என்றும் கூறுகிறார்
அதாவது,
தாய்மொழி வழியில் மருத்துவம், பொறியியல், சட்டம், ஆராய்ச்சி போன்றவை நடக்காததால் 5% விழுக்காடு மட்டுமே வெளி வருகிறது என்கிறார்
அதாவது,
தாய்மொழியில் படிக்காதவர்களான 95% மட்டுமே சட்டம்,ஆராய்ச்சி,மருத்துவம், மற்றும் பொறியியல் துறையில் படிக்கவும் பணியாற்றவும் செய்கிறார்கள் என்றும்
இவர்களால் எந்த முன்னேற்றமும் நாட்டிற்கு இல்லை என்றும்
தாய்மொழியில் படித்த 5% பேரால்தான் இந்தத் துறைகளில் வெளிச்சம் இருப்பதாகவும் அவர் சொல்வதாகத்தான் இதைக் கொள்ள முடியும்
இந்த விழுக்காட்டு அளவீட்டில் நமக்கு உடன்பாடு இல்லை
அமைச்சரிடம் நாம் கேட்க விரும்புவது
நீங்கள் குறிப்பிடும் இந்த விஷயத்தில் நீங்கள் இப்போது பேசியது மாதிரி தேசியக் கல்விக் கொள்கை உள்ளதா?
ஆம் எனில் திறந்த மனதோடு விவாதிப்போமா?
ஒருக்கால் இல்லை என்பதை நீங்கள் ஏற்பீர்கள் எனில் மாற்று என்ன?
எங்களைப் பொறுத்தவரை அந்த ஐந்து விழுக்காட்டினருக்காக வடிவமைக்கப் பட்டதே தேசியக் கல்விக் கொள்கை
அதே கூட்டத்தில் உரையாற்றியக் கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்ரா ப்ரதாபன் தேசியக் கல்விக் கொள்கை 2020 மெக்காலே திட்டத்திற்கு எதிராகக் கட்டமைக்கப் பட்டது என்பது
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரானது இது என்பத்தாகக் கொள்ள வைக்கிறது
உங்களது கட்சிக் கொள்கை ஒரே மொழி என்பதாக இருக்கிறது
கல்வி அமைச்சர் பேசுவது ஆங்கில வழிக் கல்விக்கு எதிரானது தேசியக் கல்விக் கொள்கை 2020 என்று கொள்ள வைக்கிறது
எனில்
இந்திவழிக் கல்வியை நோக்கியான நகர்வு இது என்றும் கொள்ள வைக்கிறது
அன்பிற்குரிய அமித் ஷா அவர்களே
எங்களது அய்யத்தைத் தெளிவுபடுத்துங்கள்

முகநூல்
30.01.2022

Friday, July 1, 2022

பார்த்தும் மிஸ் பண்ணிவிட்டேனே வெண்மணி தோழர்





 

எப்போதும் நெகிழ்ந்து உரையாடும் வெண்மணி வரதராஜன் தோழரை பார்க்க வேண்டும் என்று அப்படியொரு ஆசை நேற்று அரியலூர் புத்தகத் திருவிழாவில் சந்திக்கிறார் ஒரு யுகம் பழகிய நண்பரைப் போல பேசுகிறார் படங்களை அவர் அனுப்பியபோதுதான் அது அவரென்று தெரிகிறது பார்த்தும் மிஸ் பண்ணிவிட்டேனே தோழர்


முகநூல்

01.07.2022


அரியலூர் புத்தகத் திருவிழா 30.06.2022




 

முகநூல்

30.06.2022

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...