Thursday, November 29, 2012
Friday, November 23, 2012
செத்ததறிவானோ ?
முற்றாய் முடிந்ததும்
போர்த்தினார்களா?
முடிந்துவிடுமென்று
போர்த்தினார்களா?
போர்த்தப் பட்ட வேட்டி தாண்டி
கசிந்து கொண்டிருந்தது
“ யாரு பெத்த புள்ளையோ...”
வெடித்தாள்
முன்னிருக்கை தாயொருத்தி
எங்க போயிட்டிருந்தானோ?
தேம்புகிறாள்
இன்னொரு தாய்
“ இப்படி
செத்துக் கிடக்கிறான்னு
ஊட்டுல
யாருக்குத் தெரியும்?”
புலம்பிய
தாயொருத்தியிடம் கேட்கிறாள்
குட்டிமகள்
“ அந்த மாமா செத்தது
அந்த மாமாவுக்குத் தெரியுமா
மொதல்ல”
ஆமாம்
தான்
செத்ததறிவானா
செத்தவன்?
விஞ்ஞானமும்
மெய்ஞானமும்
மழலையில்
பத்திக் கொள்ள
பேருந்து நிற்கும் வரை
நேரமில்லை
குதித்தோடுகிறான்
போகிற
பேருந்தைப்
பிடிக்க
போர்த்தினார்களா?
முடிந்துவிடுமென்று
போர்த்தினார்களா?
போர்த்தப் பட்ட வேட்டி தாண்டி
கசிந்து கொண்டிருந்தது
“ யாரு பெத்த புள்ளையோ...”
வெடித்தாள்
முன்னிருக்கை தாயொருத்தி
எங்க போயிட்டிருந்தானோ?
தேம்புகிறாள்
இன்னொரு தாய்
“ இப்படி
செத்துக் கிடக்கிறான்னு
ஊட்டுல
யாருக்குத் தெரியும்?”
புலம்பிய
தாயொருத்தியிடம் கேட்கிறாள்
குட்டிமகள்
“ அந்த மாமா செத்தது
அந்த மாமாவுக்குத் தெரியுமா
மொதல்ல”
ஆமாம்
தான்
செத்ததறிவானா
செத்தவன்?
விஞ்ஞானமும்
மெய்ஞானமும்
மழலையில்
பத்திக் கொள்ள
பேருந்து நிற்கும் வரை
நேரமில்லை
குதித்தோடுகிறான்
போகிற
பேருந்தைப்
பிடிக்க
Subscribe to:
Posts (Atom)
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
21.01.2024 அன்று நண்பர் ஒருவரின் மகளது திருமணத்திற்குப் போயிருந்தோம் காரில் இருந்து (வாடகைக் கார்தான்) இறங்குகிறோம் கண்ணில் படுபவர்கள் எல்ல...
-
வழக்கமாக படு சீரியசாக எழுதும் தோழர் அ.மார்க்ஸ் அவர்கள் ஒருமுறை பள்ளிக் கல்வி எப்படிப் பிள்ளைகளுக்கு தண்டனையாக அமைகிறது என்பதை விளக்குவதற்க...