ஏறத்தாழ இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு எங்களூர் சுடுகாடு வரைக்கும் போய் திரும்பவேண்டிய அவசியம் வந்தது.
மாமா இறந்து போனார். ஊரில் பக்கத்து பக்கத்து வீடு. எங்கள் அம்மாவும் அவரும் சித்தப்பா பெரியப்பா பிள்ளைகள். நான் மிகச் சின்ன பிள்ளையாய் இருந்த காலத்தில் மனைப் பிரிவினையின் பொருட்டு எங்கள் அப்பா அம்மாவிற்கும் அவருக்கும் நிறைய பிரச்சினைகள். ஏதேனும் ஒரு வாரம் சனியோ ஞாயிறோகூட வராமல் போகலாம் ஆனால் எங்கள் வீட்டிற்கும் அவருக்கும் குறைந்தது வாரம் ஒருமுறையேனும் சண்டை நடந்தே தீரும்.
“வேனாப் பாரேன் நீ நாசாமாப் போயிடுவ” என்று அவரும் எங்கம்மாவும் அடிக்கடி ஒருவரையொருவர் மண்ணை வாரித் தூற்றிக் கொள்வதை எத்தனையோமுறை வேடிக்கை பார்த்திருக்கிறோம்.
அந்த மாமாவின் உயிர்பிரிந்த வேளையில்தான் நான் அவரது கால்களைப் பிடித்தவாறே கண்கலங்கி நின்றேன். அப்போது அழ ஆரம்பித்த என் அம்மா இன்று மாலை நான் வீட்டை விட்டு புறப்படும்வரை அழுதுகொண்டிருக்கிறது.
அவர் உயிர் பிரியும் போது கலங்கியக் கண்களோடு அங்கே இருந்தது அவரது மருமகளைத் தவிர நான், விட்டு, என் அம்மாயி, அம்மா, கிஷோர், கீர்த்தனா.
சதா எங்கள் அம்மா அப்பாவை மண்வாரித் தூற்றி சபித்துக் கொண்டும், சாபத்தை வாங்கிக் கொண்டும் இருந்த மாவை, இன்னும் சொல்லப்போனால் சிறு பிராயத்தில் எங்கள் எதிரியாகவே நாங்கள் பாவித்த மாமாவோடு எப்போது இப்படி ஒரு ஐக்கியம் வந்தது?
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. எங்கள் தாத்தா இறந்தபோது அவருக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் எங்கள் மாமாதான் கொள்ளி வைத்தார். அவருக்கு நான் கொள்ளி வைக்க முடியாது.ஏனெனில் நான் என் அம்மாவின் மூத்தாள் பெற்ற பிள்ளை. எங்கள் அம்மாவிடம் என்னை விட்டுவிட்டு அவர் கைக்குழந்தையாய் இருந்த போதே போய்விட்டாராம்.
கொள்ளி வைத்ததும் , கொள்ளிவைத்த தனக்குதான் சொத்து வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரமித்துவிட்டார். அதனால்தான் அவருக்கும் அங்கள் வீட்டிற்கும் சண்டை.
ஒரு வழியாய் பஞ்சாயத்து வைத்து பிரச்சினை தீர்ந்த பொழுது சொத்துக்களை எங்கள் அப்பா பெயரில் எழுதி வைத்துவிட்டது எங்கள் அம்மாயி.
ஒரு வாரம் சர்வேயர், அவர் இவர் என்று முகாமிட்டு காட்டையும் வீட்டையும் பிரித்து பட்டா செய்து கொடுத்துவிட்டு சென்று விட்டனர். அது ஒரு கூட்டுப் பட்டா. அன்று முதல் மாமா கோபத்தோடு ஒதுங்கிவிட்டார். சண்டைக் காட்சிகள் ஒரு முடிவுக்கு வந்தன.
பட்டா சரியாக உள்ளதா என்று பார்த்த்போதுதான் அப்பாவிற்கு மாமாவைவிட 40 செண்ட் காடு அதிகமாகப் பிரிந்திருப்பதைக் கண்டு பிடிக்கிறார்.
உடனே பட்டாவை எடுத்துக் கொண்டு மாமா வீட்டிற்குப் போகிறார். மாமா பேசவே இல்லை. “ வாங்கண்ணா” என்று அத்தை மட்டுமே அழைத்து உட்கார வைக்கிறார்.
“இல்லம்மா, பிரிச்சப்ப எனக்கு நாத மணிய விட 40 செண்ட் கூட ஒதுங்கிடுச்சு. அவர்ட்ட சொல்லி என்றைக்கு வசதிப் படும்னு கேளு. 20 செண்ட்டை எழுதிக் கொடுத்திடறேன்.”
சொன்னமாதிரியே எழுதிக் கொடுத்தார். அன்று இணைந்தார்கள். அதன் பிறகுஅவரது மரணம் வரைக்கும் நல்ல மைத்துனராக , நண்பனாக அப்பாவோடு வாழ்ந்தார்.
அதன் பிறகு நேற்றுவரை எங்களது தாய் மாமாவாய் மூழுதாய் செய்து தீர்த்திருக்கிறார்.
முழுச் சுய நிணைவோடு இல்லாத எங்கள் அப்பாவை அவர் சகித்துத் தாங்கிய அந்தப் பெருந்தன்மைக்கே நானும் என் குடும்பமும் அவருக்கு கடமைப் பட்டிருக்கிறோம். பெரிய சோகம் என்னவெனில் மாமா இறந்து போனது அவருக்கு முழுதுமாய் பிடிபட வில்லை.
“அப்பா நேரா நேரத்துக்கு மாத்திரை சாப்பிடனும். மாமாவப் பார்த்தீங்கள்ள”
“அவரு சளிய கவனிக்கலடா. நாந்தான் சளி வந்தா சிந்தீடறேனே”
இதுதான் எங்கள் அப்பா.
அவரு சளிய கவனிக்கலடா என்கிற போது இருந்த அழுத்தம் அடுத்த வரியிலேயே காணாமல் போய்விடுகிறது.
நல்ல சுய நினைவு இருந்த ஒரு புள்ளியில்
“மாமாவ எரிச்சிடாதீங்கடா. குழியில வச்சுடுங்க. நான் போனப்புறம் அவரோட பக்கத்துல வச்சுடுங்க.”
சுடுகாடு போனோம். புதைத்தோம்.
வழக்கம் போல் சுடுகாடு தர்பார் தொடங்கியது.
முன்பெல்லாம் தப்படித்த தோழர்களும், சலவைத் தோழர்களும், துப்புறவுத் தொழிலாளித் தோழர்களும், முடிவெட்டும் தோழரும் அந்த சபைனரின் காலில் விழுது ஊதியத்தினைப் பெறுவது வழக்கம்.
அந்தச் சபையில் 16 வயது பையனும் இருப்பான். அவனை உள்கொண்ட சபையின் காலில் விழுந்து வணங்குபவர்களில் 65 வயதுக்காரரும் இருப்பார்.
இப்போது நிறைய மாறியிருந்தது.
சபையினரின் கால்களில் விழத் தேவை இருக்கவில்லை. கெஞ்சி கூலியை உயர்த்திக் கேட்கத் தேவை இருக்க வில்லை. சபையினரிடம் இருந்து மரியாதைக் குறைச்சலான வார்த்தைகள் இல்லை.
ஒவ்வொருவரும் அழைக்கப்பட்ட போது துண்டேந்தி ஊதியத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.
அடுத்த நாள் காலை அப்பா மாமா வீடு போய்விட்டார்.
“ஏம்மா பத்மா, நாதமணி வந்தாச்சா. எங்க அவரு?”
படு இயல்பாய் கேட்டிருக்கிறார்.
இவரது நிலைக்காகவும் சேர்த்து அழுதுகொண்டே பத்மா அப்பாவைக் கொண்டு வந்து விட்டது.
நான்கு விஷயங்களுக்காக நான் அழுகிறேன்,
1) மாமாவின் மரணம்
2)அப்பாவின் நிலை
3)குழந்தைத் தொழிலாளிகள் இல்லாத பூமிக்கான கனவோடு உழைக்கும் நம் கண்முன்னே சுடுகாட்டில் பள்ளிச் சீருடையோடு வேட்டி விரித்த சிறுவன்
4) நாள் முழுக்க உழைத்த பின்பு அதற்கான ஊதியத்தை துண்டேந்தி வாங்க வேண்டிய அவலம்
மாமா இறந்து போனார். ஊரில் பக்கத்து பக்கத்து வீடு. எங்கள் அம்மாவும் அவரும் சித்தப்பா பெரியப்பா பிள்ளைகள். நான் மிகச் சின்ன பிள்ளையாய் இருந்த காலத்தில் மனைப் பிரிவினையின் பொருட்டு எங்கள் அப்பா அம்மாவிற்கும் அவருக்கும் நிறைய பிரச்சினைகள். ஏதேனும் ஒரு வாரம் சனியோ ஞாயிறோகூட வராமல் போகலாம் ஆனால் எங்கள் வீட்டிற்கும் அவருக்கும் குறைந்தது வாரம் ஒருமுறையேனும் சண்டை நடந்தே தீரும்.
“வேனாப் பாரேன் நீ நாசாமாப் போயிடுவ” என்று அவரும் எங்கம்மாவும் அடிக்கடி ஒருவரையொருவர் மண்ணை வாரித் தூற்றிக் கொள்வதை எத்தனையோமுறை வேடிக்கை பார்த்திருக்கிறோம்.
அந்த மாமாவின் உயிர்பிரிந்த வேளையில்தான் நான் அவரது கால்களைப் பிடித்தவாறே கண்கலங்கி நின்றேன். அப்போது அழ ஆரம்பித்த என் அம்மா இன்று மாலை நான் வீட்டை விட்டு புறப்படும்வரை அழுதுகொண்டிருக்கிறது.
அவர் உயிர் பிரியும் போது கலங்கியக் கண்களோடு அங்கே இருந்தது அவரது மருமகளைத் தவிர நான், விட்டு, என் அம்மாயி, அம்மா, கிஷோர், கீர்த்தனா.
சதா எங்கள் அம்மா அப்பாவை மண்வாரித் தூற்றி சபித்துக் கொண்டும், சாபத்தை வாங்கிக் கொண்டும் இருந்த மாவை, இன்னும் சொல்லப்போனால் சிறு பிராயத்தில் எங்கள் எதிரியாகவே நாங்கள் பாவித்த மாமாவோடு எப்போது இப்படி ஒரு ஐக்கியம் வந்தது?
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. எங்கள் தாத்தா இறந்தபோது அவருக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் எங்கள் மாமாதான் கொள்ளி வைத்தார். அவருக்கு நான் கொள்ளி வைக்க முடியாது.ஏனெனில் நான் என் அம்மாவின் மூத்தாள் பெற்ற பிள்ளை. எங்கள் அம்மாவிடம் என்னை விட்டுவிட்டு அவர் கைக்குழந்தையாய் இருந்த போதே போய்விட்டாராம்.
கொள்ளி வைத்ததும் , கொள்ளிவைத்த தனக்குதான் சொத்து வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரமித்துவிட்டார். அதனால்தான் அவருக்கும் அங்கள் வீட்டிற்கும் சண்டை.
ஒரு வழியாய் பஞ்சாயத்து வைத்து பிரச்சினை தீர்ந்த பொழுது சொத்துக்களை எங்கள் அப்பா பெயரில் எழுதி வைத்துவிட்டது எங்கள் அம்மாயி.
ஒரு வாரம் சர்வேயர், அவர் இவர் என்று முகாமிட்டு காட்டையும் வீட்டையும் பிரித்து பட்டா செய்து கொடுத்துவிட்டு சென்று விட்டனர். அது ஒரு கூட்டுப் பட்டா. அன்று முதல் மாமா கோபத்தோடு ஒதுங்கிவிட்டார். சண்டைக் காட்சிகள் ஒரு முடிவுக்கு வந்தன.
பட்டா சரியாக உள்ளதா என்று பார்த்த்போதுதான் அப்பாவிற்கு மாமாவைவிட 40 செண்ட் காடு அதிகமாகப் பிரிந்திருப்பதைக் கண்டு பிடிக்கிறார்.
உடனே பட்டாவை எடுத்துக் கொண்டு மாமா வீட்டிற்குப் போகிறார். மாமா பேசவே இல்லை. “ வாங்கண்ணா” என்று அத்தை மட்டுமே அழைத்து உட்கார வைக்கிறார்.
“இல்லம்மா, பிரிச்சப்ப எனக்கு நாத மணிய விட 40 செண்ட் கூட ஒதுங்கிடுச்சு. அவர்ட்ட சொல்லி என்றைக்கு வசதிப் படும்னு கேளு. 20 செண்ட்டை எழுதிக் கொடுத்திடறேன்.”
சொன்னமாதிரியே எழுதிக் கொடுத்தார். அன்று இணைந்தார்கள். அதன் பிறகுஅவரது மரணம் வரைக்கும் நல்ல மைத்துனராக , நண்பனாக அப்பாவோடு வாழ்ந்தார்.
அதன் பிறகு நேற்றுவரை எங்களது தாய் மாமாவாய் மூழுதாய் செய்து தீர்த்திருக்கிறார்.
முழுச் சுய நிணைவோடு இல்லாத எங்கள் அப்பாவை அவர் சகித்துத் தாங்கிய அந்தப் பெருந்தன்மைக்கே நானும் என் குடும்பமும் அவருக்கு கடமைப் பட்டிருக்கிறோம். பெரிய சோகம் என்னவெனில் மாமா இறந்து போனது அவருக்கு முழுதுமாய் பிடிபட வில்லை.
“அப்பா நேரா நேரத்துக்கு மாத்திரை சாப்பிடனும். மாமாவப் பார்த்தீங்கள்ள”
“அவரு சளிய கவனிக்கலடா. நாந்தான் சளி வந்தா சிந்தீடறேனே”
இதுதான் எங்கள் அப்பா.
அவரு சளிய கவனிக்கலடா என்கிற போது இருந்த அழுத்தம் அடுத்த வரியிலேயே காணாமல் போய்விடுகிறது.
நல்ல சுய நினைவு இருந்த ஒரு புள்ளியில்
“மாமாவ எரிச்சிடாதீங்கடா. குழியில வச்சுடுங்க. நான் போனப்புறம் அவரோட பக்கத்துல வச்சுடுங்க.”
சுடுகாடு போனோம். புதைத்தோம்.
வழக்கம் போல் சுடுகாடு தர்பார் தொடங்கியது.
முன்பெல்லாம் தப்படித்த தோழர்களும், சலவைத் தோழர்களும், துப்புறவுத் தொழிலாளித் தோழர்களும், முடிவெட்டும் தோழரும் அந்த சபைனரின் காலில் விழுது ஊதியத்தினைப் பெறுவது வழக்கம்.
அந்தச் சபையில் 16 வயது பையனும் இருப்பான். அவனை உள்கொண்ட சபையின் காலில் விழுந்து வணங்குபவர்களில் 65 வயதுக்காரரும் இருப்பார்.
இப்போது நிறைய மாறியிருந்தது.
சபையினரின் கால்களில் விழத் தேவை இருக்கவில்லை. கெஞ்சி கூலியை உயர்த்திக் கேட்கத் தேவை இருக்க வில்லை. சபையினரிடம் இருந்து மரியாதைக் குறைச்சலான வார்த்தைகள் இல்லை.
ஒவ்வொருவரும் அழைக்கப்பட்ட போது துண்டேந்தி ஊதியத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.
அடுத்த நாள் காலை அப்பா மாமா வீடு போய்விட்டார்.
“ஏம்மா பத்மா, நாதமணி வந்தாச்சா. எங்க அவரு?”
படு இயல்பாய் கேட்டிருக்கிறார்.
இவரது நிலைக்காகவும் சேர்த்து அழுதுகொண்டே பத்மா அப்பாவைக் கொண்டு வந்து விட்டது.
நான்கு விஷயங்களுக்காக நான் அழுகிறேன்,
1) மாமாவின் மரணம்
2)அப்பாவின் நிலை
3)குழந்தைத் தொழிலாளிகள் இல்லாத பூமிக்கான கனவோடு உழைக்கும் நம் கண்முன்னே சுடுகாட்டில் பள்ளிச் சீருடையோடு வேட்டி விரித்த சிறுவன்
4) நாள் முழுக்க உழைத்த பின்பு அதற்கான ஊதியத்தை துண்டேந்தி வாங்க வேண்டிய அவலம்