Thursday, September 15, 2022

காலை உணவு என்பது இடைக்கால நிவாரணம்

 


ஒருமுறைஅண்ணன் எஸ்.அறிவுமணி எழுதினார்
“தாயே
தாலாட்டை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படித் தூங்குவது?
தந்தையே
அறிவுரையை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படிக் கேட்பது?
ஆசானே
பாடத்தை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படிப் படிப்பது?
எல்லோரும்
எல்லாவற்றையும் நிறுத்துங்கள்
முதலில் என் பசிக்கு பதில் சொல்லுங்கள் ”
நினைவில் வைத்து எழுதியது
கொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாம்
காலையில் பட்டினியோடு பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்
அதற்கான காரணங்களும் அதிகம்
கூட்டுவழிபாட்டுக் கூட்டத்தில் நிற்கமுடியாமல் சரியும் குழந்தைகளின் எண்ணிக்கை சொல்லி மாளாது
காரணங்களைக் கண்டடைந்து களைவது மக்களரசின் இலக்கு
காலை உணவு என்பது இடைக்கால நிவாரணம்
ஆமாம்,
பசிக்கிறபோது எப்படிப் படிப்பான்?
கைப்பற்றிக் கொள்கிறேன் ஸ்டாலின் சார்
இதை மேல்நிலைப் பள்ளிவரை விரிவு செய்யுங்கள்
சத்துணவின் ஒரு பகுதி ஆக்குங்கள்
ஊழியர்களது சம்பளத்தை நியாயமான அளவில் உயர்த்துங்கள்

கெடுத்துச் செத்தது

 



உன்னை மொய்க்கும் ஏராளக் கனவுகளில்
ஏதேனுமொன்றில் நுழைவதென்ற என் திட்டத்தை
கெடுத்துச் செத்தது
உனைக் கடித்த கொசு

Wednesday, September 14, 2022

எந்தப் பெயரில் கடை நடத்தலாம்?

 



காரமடை தந்தை பெரியார் உணவகம் மதவெறியர்களால் தாக்கப்பட்டது குறித்து அந்தக் கடையின் உரிமையாளர் திரு பிரபாகரன் அவர்களோடான பிள்ளை மில்டனின் நேர்காணலை “பேரலை”யில் பார்க்க வாய்த்தது
மனுஷன் தெளிவாக இருக்கிறார்
அந்த உரையாடலின் ஓரிடத்தில் அந்தக் கும்பல் தன்னிடம் பேசியதைக் கூறுகிறார்
இனி இப்படி நடக்காது என்றும்
இந்த ஒருமுறை மன்னித்துவிடுமாறும்
வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டால்
கடையை யாரும் தாக்காமல் தாங்கள் பார்த்துக் கொள்வதாகக் கூறியதையும் பதிகிறார்
இவர்களைத் தவிர வேறு யார் இதுமாதிரிக் காரியங்களை செய்துவிட முடியும்
ஒருவர்,
எந்தப் பெயரில் கடை நடத்தலாம்?
என்ன விற்கலாம்?
என்பதையெல்லாம் தீர்மானிக்கிற அதிகாரம் அவரவர் உரிமை
இதில் உள்நுழைகிற உரிமை நாம் உள்ளிட்டு யாருக்கும் இல்லை

இன்னும் கொஞ்சம் கூடுதலாய் கவலைப் படுகிறோம்



கோவாவிலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு தாவியுள்ளார்கள் என்பதில் பகடி செய்ய ஏதும் இல்லை
இது ஜனநாயகத்தின் மீது
மக்கள் அளிக்கும் தீர்ப்பின் மீது
நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் கவலைப்பட வேண்டிய விஷயம்
கவலைப் படுகிறோம்
இதுகுறித்து காங்கிரஸ் கவலைப்படாதது குறித்து இன்னும் கொஞ்சம் கூடுதலாய் கவலைப் படுகிறோம்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...