Thursday, September 15, 2022

காலை உணவு என்பது இடைக்கால நிவாரணம்

 


ஒருமுறைஅண்ணன் எஸ்.அறிவுமணி எழுதினார்
“தாயே
தாலாட்டை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படித் தூங்குவது?
தந்தையே
அறிவுரையை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படிக் கேட்பது?
ஆசானே
பாடத்தை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படிப் படிப்பது?
எல்லோரும்
எல்லாவற்றையும் நிறுத்துங்கள்
முதலில் என் பசிக்கு பதில் சொல்லுங்கள் ”
நினைவில் வைத்து எழுதியது
கொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாம்
காலையில் பட்டினியோடு பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்
அதற்கான காரணங்களும் அதிகம்
கூட்டுவழிபாட்டுக் கூட்டத்தில் நிற்கமுடியாமல் சரியும் குழந்தைகளின் எண்ணிக்கை சொல்லி மாளாது
காரணங்களைக் கண்டடைந்து களைவது மக்களரசின் இலக்கு
காலை உணவு என்பது இடைக்கால நிவாரணம்
ஆமாம்,
பசிக்கிறபோது எப்படிப் படிப்பான்?
கைப்பற்றிக் கொள்கிறேன் ஸ்டாலின் சார்
இதை மேல்நிலைப் பள்ளிவரை விரிவு செய்யுங்கள்
சத்துணவின் ஒரு பகுதி ஆக்குங்கள்
ஊழியர்களது சம்பளத்தை நியாயமான அளவில் உயர்த்துங்கள்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...