Wednesday, September 14, 2022

எந்தப் பெயரில் கடை நடத்தலாம்?

 



காரமடை தந்தை பெரியார் உணவகம் மதவெறியர்களால் தாக்கப்பட்டது குறித்து அந்தக் கடையின் உரிமையாளர் திரு பிரபாகரன் அவர்களோடான பிள்ளை மில்டனின் நேர்காணலை “பேரலை”யில் பார்க்க வாய்த்தது
மனுஷன் தெளிவாக இருக்கிறார்
அந்த உரையாடலின் ஓரிடத்தில் அந்தக் கும்பல் தன்னிடம் பேசியதைக் கூறுகிறார்
இனி இப்படி நடக்காது என்றும்
இந்த ஒருமுறை மன்னித்துவிடுமாறும்
வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டால்
கடையை யாரும் தாக்காமல் தாங்கள் பார்த்துக் கொள்வதாகக் கூறியதையும் பதிகிறார்
இவர்களைத் தவிர வேறு யார் இதுமாதிரிக் காரியங்களை செய்துவிட முடியும்
ஒருவர்,
எந்தப் பெயரில் கடை நடத்தலாம்?
என்ன விற்கலாம்?
என்பதையெல்லாம் தீர்மானிக்கிற அதிகாரம் அவரவர் உரிமை
இதில் உள்நுழைகிற உரிமை நாம் உள்ளிட்டு யாருக்கும் இல்லை

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...