Wednesday, July 26, 2023

இப்படியெல்லாம் வெறுக்க வேண்டிய அவசியமென்ன”

 


”இப்படியெல்லாம் வெறுக்க வேண்டிய அவசியமென்ன”
என்று கேட்டிருக்கிறார் ஐரோம் ஷர்மிளா
இதனை,
மக்களை நேசிக்க விடாமல் உங்களைத் தடுப்பதென்ன என்றும் கொள்ளலாம் என் அன்பிற்குரிய திரு நரேந்திரர்
ஷர்மிளாவின் விரல்களில் ஒன்று என்னை நோக்கியும் நீள்வதை உணர்ந்திருக்கிறேன்
அதனால்தான் இத்தனைக்குப் பிறகும் உங்களை அன்பிற்குரியவர் என்று என்னால் விளிக்க முடிகிறது
என்னதான் ஆயிற்று உங்களுக்கு? என்றெல்லாம் கேட்கிற அளவிற்கு கிறுக்கெல்லாம் இல்லை நான்
நீங்கள் அப்படித்தான்
ஆனாலும் எங்களுக்கு இரண்டு இருக்கிறது
மக்களளைச் சந்திப்பது என்பது ஒன்று
முடியுமால் உங்களை அசைக்கவைத்து செத்துக்கொண்டிருக்கிற மக்களின் எண்ணிக்கையை குறைக்க முயற்சிப்பது என்பது இரண்டு
போகிற இடமெல்லாம் குறளைச் சொல்கிறீர்கள்
குறள் மீது கொஞ்சமேனும் உங்களுக்கு மரியாதை இருக்குமானால் தயவு செய்து
541 வது குறளையும்
அதற்கான சாலமன் பாப்பையாவின் விளக்கத்தையும் வாசியுங்கள்
“ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்து செய்வதே முறை”
இது அந்தக் குறள்
”குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு வெறுப்பு இல்லாது,
நடு நிலையோடு,
நூல்வழி ஆராய்ந்து,
குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே
நேர்மையான ஆட்சி”
இது அந்தக் குறளுக்கு பாப்பையா தரும் விளக்கம்
பாப்பையா உங்களுக்க வேண்டப்படாதவரும் அல்ல
மணிப்பூர் கலவரம் குறித்து ஆராய்ந்து குற்றவாளிகளைத் தண்டியுங்கள்
அவர்கள் நமது வாக்குகள் என்று தவறினீர்கள் எனில்
காலம் மக்களை சரியாக வழிநடத்தும்
#சாமங்கவிய ஒன்றரைமணி
26.07.2023

என்ன பயம் திரு நரேந்திரர்?

 அத்தனை ஆயிரங் கோடியைக் கொட்டி நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டியாயிற்று

உங்கள் மனங்குளிரப் பார்த்துப் பார்த்துக் கட்டிய கட்டிடம்
புதிய அரண்மனையைத் திறக்கும்போது அந்நாட்டின் சக்கரவர்த்திக்கு தரப்பட்ட அத்தனை மரியாதையையும் ஏறத்தாழ உங்களுக்கு நீங்கள் விரும்பியபடி கொடுத்தாயிற்று
ஆகமத்திற்கு உட்பட்ட வைணவக் குருக்கள்
ஆகமத்திற்குள் வராத சைவ சன்னிதானங்கள் உள்ளிட்டு
அனைவரையும் உள்ளடக்கிய
அனைத்து யாகங்களையும் நடத்தி
ஏறத்தாழ உங்களுக்காகவே நீங்கள் கட்டிய அரண்மனையொத்த நாடாளுமன்றத்தின்
நீங்கள் ஆசைப்பட்டு பெற்ற செங்கோல் இருக்கும் தர்பாருக்குள் வந்து பரிபாலிக்க
என்ன பயம் திரு நரேந்திரர்?

பாஜக விரும்பிகிற ஆட்டத்தை நீங்கள் ஆடாதீர்கள்

 ஒரு மரம் விழுந்தால் கொஞ்சம் சுற்றுப் பகுதியில் அதிர்வுகள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே

மணிப்பூர் என்பது இந்தியா என்ற ஒரு உடலின் ஒரு அங்கம்
ஒரு உடலின் ஒரு அவயத்தில் ஊறு ஏற்பட்டால் அது அடுத்தடுத்த அவயங்களை பாதித்து மொத்த உடலையும் காவு கேட்கும்
இந்த உண்மையை மணிப்பூர் கலவரமும் நமக்கு உணர்த்த ஆரம்பித்துள்ளது
மணிப்பூர் கலவரத்தின் அதிர்வுகளை மிசோரமும் அசாமும் உணர ஆரம்பித்திருக்கின்றன
மிசோரத்தில் உள்ள பாம்ரா என்ற அமைப்பு மெய்தி மக்கள் மிசோரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியிருக்கிறது
சாலை வழியாகவும் ஆகாய மார்க்கமாகவும் மெய்தி மக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர்
மிசோரத்தில் உள்ள மெய்தி மக்களில் பெரும்பாலானோர் அசாமில் இருந்து சென்றவர்கள்
எனவே
அசாமில் உள்ள ”மணிப்பூர் - அசாம் மாணவர் கூட்டமைப்பு” இதனால் எரிச்சலடைந்துள்ளது
அசாமில் வசிக்கும் மிசோரம் மக்கள் உடனடியாக அசாமை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்த அமைப்பு எச்சரித்திருக்கிறது
இந்த நிலையில்,
”பாம்ரா” அமைப்பினரை அழைத்து அவர்களோடு உரையாடலை நடத்திய பின்பு
மெய்தி மக்கள் மிசோரமைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும்
மிசோரம் முதல்வர் ஜோரம் தங்கா கேட்டுக் கொண்டிருக்கிறார்
இந்த அளவில் மெல்லிசாக ஒரு அப்பாடா போட்டுக் கொள்ளலாம் என்று பார்த்தால்
அதற்கும் வழி இல்லை
மணிப்பூரில் குக்கிகளுக்கு தனி நிர்வாகக் கவுன்சில் உருவாக்க வேண்டும் என்று ஜோரம் தங்கா கேட்கிறார்
மணிப்பூர் பழங்குடியினருக்கும் மிசோரம் பழங்குடியினருக்கும் உறவு இருக்கும் நிலையில்
இது மிசோரத்தை அகண்ட மிசோரமாக்கும் முயற்சி என்று
இன்னொரு புகைச்சல் கிளம்பியுள்ளது
”நான் இந்தியாவை நன்கு உணர்ந்திருக்கிறேன். என்ன செய்தால் இந்தியாவின் பகுதிகள் எப்படி எதிர்வினையாற்றும் என்பது எனக்குத் தெரியும்.
வடகிழக்கு இந்தியாவில் நீங்கள் ஒரு மோசமான காரியத்தை ஆரம்பித்து விட்டீர்கள்.
அது இந்தியாவிற்கு நல்லதல்ல. உங்களுக்கும் நல்லதல்ல.
எனவே அதை உடனடியாக நிறுத்துங்கள்” என்று
ஏற்கனவே ஒருமுறை நாடாளுமன்றத்தில் ராகுல் கூறியதாக ”லிபர்டி” யூட்யூப் சேனலுக்கான ஒரு நேர்காணாலில் பத்திரிக்கையாளர் கார்த்திகேயன் கூறுகிறார்
எனில்,
இரண்டு புலனாகிறது
இதை இவர்கள் திட்டமிட்டு ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது ஒன்று
இதை நன்கு உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் இவர்களை எச்சரிக்கவும் செய்திருக்கிறார் ராகுல் என்பது இரண்டு
என்ன செய்யலாம்?
ஒரு மாபெரும் போராட்டம் தேவை
அடிக்கடி சசிகாந்த் சொல்வதை எதிர்க்கட்சிகளுக்கு நினைவூட்ட வேண்டும்
பாஜக விரும்பிகிற ஆட்டத்தை நீங்கள் ஆடாதீர்கள்
அவர்களை நீங்கள் தடுப்பாட்டதை ஆட வையுங்கள்
அல்லது
தேசம் எரிகிறது. அந்நிய சக்திகள் ஆடுகிறார்கள். எங்களைவிட்டால் ஆளில்லை என்று வந்து விடுவார்கள்
நம் மக்கள் இளகியவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்

Tuesday, July 18, 2023

தொடர்புகள்





1
பெர்லின்
Flat D3 No 148,
Parkside Villa,
First cross street,
Annai Indira Nagar,
Okkiyam Thoraipakkam,
Chennai 600096

""'""'""""""""""""""""""""""""""""'"""""''"""""""""""""" 

2

Eniyan
F3, Pasha's residency
No.12, West Anna Nagar 5th Street, 
Opposite to Aishwarya Vinayagar temple, 
Narayanapuram, 
Pallikaranai, 
Chennai 600100

**********************************************************

3
ஜி.திரேசா கேத்ரின்,
20/52, ராமலிங்க நகர்,
சுப்பராயுலு நகர் பின்புறம்,
கடலூர் 607002

*********************************************************** 

4

A.INDRA GANDHI MA,BL
10 - 2 - 26, KUMARAN STREET,
OORMECHIKULAM,
SAMAYANALLUR POST
MADURAI 625402 

************************************************************  

5

ராசி அழகப்பன்
7, 20 வது குறுக்குத் தெரு
கிராம நெடுஞ்சாலை
சோழிங்கநல்லூர்
சென்னை 600119
9176804412

*****************************************************************  

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...