“ மரணத்திற்குப்
பிறகு
மறு பிறப்பு
இருந்துடுமோ
என்ற பயத்திலேதான்
நாங்கள்
தற்கொலைக்குக் கூட
முயலுவதில்லை”
என்று எழுதுகிறார் ராதா சிவா என்ற முக நூல் நண்பர். இதைவிட அழுத்தமாக தலித் மக்களின் வலியை உணர்த்திவிட முடியும் என்று நான் நம்பவில்லை.
வாழ இயலாமையின் ரணத்தை, அவலத்தை, மனிதனாய் வாழ விடாத கொடூர அயோக்கியத் தனத்தைதான் இது வரை பார்த்திருக்கிறோம். இந்தக் கொடுமைகளை, அவமானம் தரும் வலியை சகிக்க மாட்டாமல் தற்கொலை செய்வதை பார்த்திருக்கிறோம்.
இதுவும் பொறுக்காமாட்டாமல்,
தற்கொலையின் மூலம் உனது ரணத்திற்கும் அவமானத்திற்கும் முடிவு கட்டவாப் பார்க்கிறாய் என மறு பிறப்பின் சிந்தனை தடுக்கிறது. மறுபிறப்பு என்று ஒன்று இருந்து, மீண்டும் தலித்தாகப் பிறக்க நேர்ந்துவிட்டால் மீண்டும் இதே கேவலங்களை செய்யத் தானே இந்தச் சமூகம் தள்ளும் என்கிற பயமேகூட பல தற்கொலைகளைத் தடுக்கிறது.
வழக்கம் போல ஒரு பின்னிரவு வேலை, நல்ல தூக்கக் கலக்கத்தோடு நண்பர்களின் வலைகளையும் முக நூல் பக்கங்களையும் மேய்ந்து கொண்டிருந்தபோது தம்பி சமரன் வலையில் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தது.
இந்தப் படத்தைப் பார்த்ததும் தூக்கமும் கலக்கமும் எங்கோ பறந்தோட கோவம் மட்டுமே உடலெங்கும் அப்பிக் கொண்டது.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் கைகளில் செருப்புகள். செருப்பு வாங்க இயலாமல் வெறுங்காலோடு பள்ளிகளுக்குப் போகும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். அப்படியே மனசு சுக்கல் சுக்கலாய் நொறுங்கிப் போகும். பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா மிதியடிகளை வழங்கியமைக்காகவே இவர்கள் செய்த பிழைகளில் ஒரு பத்து பன்னிரண்டை தள்ளுபடி செய்தவன்.
கோவமும் கொந்தளிப்புமாய் அப்படியே உறைந்து போனேன்.
பிறகு
மறு பிறப்பு
இருந்துடுமோ
என்ற பயத்திலேதான்
நாங்கள்
தற்கொலைக்குக் கூட
முயலுவதில்லை”
என்று எழுதுகிறார் ராதா சிவா என்ற முக நூல் நண்பர். இதைவிட அழுத்தமாக தலித் மக்களின் வலியை உணர்த்திவிட முடியும் என்று நான் நம்பவில்லை.
வாழ இயலாமையின் ரணத்தை, அவலத்தை, மனிதனாய் வாழ விடாத கொடூர அயோக்கியத் தனத்தைதான் இது வரை பார்த்திருக்கிறோம். இந்தக் கொடுமைகளை, அவமானம் தரும் வலியை சகிக்க மாட்டாமல் தற்கொலை செய்வதை பார்த்திருக்கிறோம்.
இதுவும் பொறுக்காமாட்டாமல்,
தற்கொலையின் மூலம் உனது ரணத்திற்கும் அவமானத்திற்கும் முடிவு கட்டவாப் பார்க்கிறாய் என மறு பிறப்பின் சிந்தனை தடுக்கிறது. மறுபிறப்பு என்று ஒன்று இருந்து, மீண்டும் தலித்தாகப் பிறக்க நேர்ந்துவிட்டால் மீண்டும் இதே கேவலங்களை செய்யத் தானே இந்தச் சமூகம் தள்ளும் என்கிற பயமேகூட பல தற்கொலைகளைத் தடுக்கிறது.
வழக்கம் போல ஒரு பின்னிரவு வேலை, நல்ல தூக்கக் கலக்கத்தோடு நண்பர்களின் வலைகளையும் முக நூல் பக்கங்களையும் மேய்ந்து கொண்டிருந்தபோது தம்பி சமரன் வலையில் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தது.
இந்தப் படத்தைப் பார்த்ததும் தூக்கமும் கலக்கமும் எங்கோ பறந்தோட கோவம் மட்டுமே உடலெங்கும் அப்பிக் கொண்டது.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் கைகளில் செருப்புகள். செருப்பு வாங்க இயலாமல் வெறுங்காலோடு பள்ளிகளுக்குப் போகும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். அப்படியே மனசு சுக்கல் சுக்கலாய் நொறுங்கிப் போகும். பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா மிதியடிகளை வழங்கியமைக்காகவே இவர்கள் செய்த பிழைகளில் ஒரு பத்து பன்னிரண்டை தள்ளுபடி செய்தவன்.
கோவமும் கொந்தளிப்புமாய் அப்படியே உறைந்து போனேன்.
தெரு தாண்டும் வரை
கைகளில்
சுமக்க
தீர்ப்பளித்தீர்
கோபம் வரும்
எங்களுக்கும்
எங்களுக்கு
கோபம் வரும் வேளை
எம்மெதிரே
நீங்களும் வரலாம்
கழட்ட வேண்டிய
தேவையும் இல்லை
கைகளில்தான்
இருக்குக்கிறது
என்று எழுதினேன். டிசம்பர் மாத “காக்கைச் சிறகினிலே” இதழில் படத்தையும் கவிதையையும் அட்டையில் போட்டோம்.
“இதெல்லாம் கொஞ்சம் அதிகமாத் தெரியல”
நண்பர்கள் கேட்டார்கள்.
இது உண்மை என்பதை எவ்வளவு சொல்லியும் சிலர் நம்ப மறுத்தார்கள். எங்கே நாம்தான் தவறாய் புரிந்து கொண்டோமோ? என்று நாமே கொஞ்சம் குழம்புமளவிற்கு சிலர் இதை நம்ப மறுத்தார்கள்.
27.01.2013 அன்றைய தீக்கதிர் அதற்கு முந்தின நாள் கரூரில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில அமைப்புகள் இணைந்து கொள்ள மார்க்ஸிஸ்ட் கட்சி நடத்திய ஒரு போராட்டத்தைப் பற்றிய செய்தியை வெளியிட்டிருந்தது.
“காலில் செருப்பணிந்து நடப்போம்”
என்ற பதாகையைப் பார்த்த போது, சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இன்னமும் காலில் செருப்பணிந்து நடப்பதற்கு போராட வேண்டியிருக்கிறது.
ஒரு கதை. கந்தர்வன் எழுதியது என்று நினைக்கிறேன். அந்தக் கதையில் ஆண்டை ஒருவன் எல்லா தலித்துகளுக்கும் துண்டு வாங்கிக் கொடுப்பான். அதைப் பார்த்த அவனது நண்பன் இவர்களுக்கு எதற்கு துண்டு என்று கேட்பான். அவன் சொல்வான், “அவனிடம் துண்டு இருந்தால்தானே நம்மைப் பார்த்ததும் இடுப்பிலே கட்டுவான்.”
தன்னைக் கண்டதும் தோளிலிருந்து துண்டை இடுப்பிலே கட்டுவதை ரசித்துத் தொலைத்திருக்கிறது இந்த இடைச் சாதி சமூகம். இதன் நீட்சியாகத்தான் காலில் அணிந்து வந்த செருப்பை கைகளிலே சுமக்க வைத்தும் அழகு பார்த்திருக்கிறது.
பெரம்பலூருக்குப் பக்கத்தில் பேரளி என்றொரு கிராமம். ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தலித் மாணவனை மரத்திலே கட்டிப் போட்டு சித்திரவதை செய்தனர். அந்த அளவு தண்டனைக்கு அவன் என்ன குற்றம் செய்தான். வகுப்பிற்கு நேரமாகிவிடவே மிதி வண்டியைசற்று வேகமாக மிதிக்கிறான்.
அவனைக் கட்டி வைத்து சித்திர வதை செய்ததற்கு காரணமாக சொன்னார்கள்,
“ என்ன தைரியம் இருந்தால் குடியானத் தெருவுல சைக்கிள ஓட்டிட்டு வருவான்?”
இவை எதனினும் கொடிய வலியை கீழே உள்ள படங்கள் தரும்,
“இதெல்லாம் கொஞ்சம் அதிகமாத் தெரியல”
நண்பர்கள் கேட்டார்கள்.
இது உண்மை என்பதை எவ்வளவு சொல்லியும் சிலர் நம்ப மறுத்தார்கள். எங்கே நாம்தான் தவறாய் புரிந்து கொண்டோமோ? என்று நாமே கொஞ்சம் குழம்புமளவிற்கு சிலர் இதை நம்ப மறுத்தார்கள்.
27.01.2013 அன்றைய தீக்கதிர் அதற்கு முந்தின நாள் கரூரில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில அமைப்புகள் இணைந்து கொள்ள மார்க்ஸிஸ்ட் கட்சி நடத்திய ஒரு போராட்டத்தைப் பற்றிய செய்தியை வெளியிட்டிருந்தது.
“காலில் செருப்பணிந்து நடப்போம்”
என்ற பதாகையைப் பார்த்த போது, சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இன்னமும் காலில் செருப்பணிந்து நடப்பதற்கு போராட வேண்டியிருக்கிறது.
ஒரு கதை. கந்தர்வன் எழுதியது என்று நினைக்கிறேன். அந்தக் கதையில் ஆண்டை ஒருவன் எல்லா தலித்துகளுக்கும் துண்டு வாங்கிக் கொடுப்பான். அதைப் பார்த்த அவனது நண்பன் இவர்களுக்கு எதற்கு துண்டு என்று கேட்பான். அவன் சொல்வான், “அவனிடம் துண்டு இருந்தால்தானே நம்மைப் பார்த்ததும் இடுப்பிலே கட்டுவான்.”
தன்னைக் கண்டதும் தோளிலிருந்து துண்டை இடுப்பிலே கட்டுவதை ரசித்துத் தொலைத்திருக்கிறது இந்த இடைச் சாதி சமூகம். இதன் நீட்சியாகத்தான் காலில் அணிந்து வந்த செருப்பை கைகளிலே சுமக்க வைத்தும் அழகு பார்த்திருக்கிறது.
பெரம்பலூருக்குப் பக்கத்தில் பேரளி என்றொரு கிராமம். ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தலித் மாணவனை மரத்திலே கட்டிப் போட்டு சித்திரவதை செய்தனர். அந்த அளவு தண்டனைக்கு அவன் என்ன குற்றம் செய்தான். வகுப்பிற்கு நேரமாகிவிடவே மிதி வண்டியைசற்று வேகமாக மிதிக்கிறான்.
அவனைக் கட்டி வைத்து சித்திர வதை செய்ததற்கு காரணமாக சொன்னார்கள்,
“ என்ன தைரியம் இருந்தால் குடியானத் தெருவுல சைக்கிள ஓட்டிட்டு வருவான்?”
இதை எதிர்த்து சுபாஷன் அலி மற்றும் பாலபாரதி தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சி ஒரு சைக்கிள் பேரணியை நடத்த முயன்றபோது அதற்கு தடை விதிக்கப் பட்டது. அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் சொன்னார் “ எல்லாம் அமைதியாய்தானே இருக்கிறது. ஏன் இப்படி வம்படித்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கிளப்புகிறீர்கள்?”
அவரது விளக்கம் இதுதான்,
பையன் சைக்கிள் ஓட்டினான். அவர்கள் கட்டி வைத்து உதைத்துள்ளார்கள். இத்தோடு பிரச்சினை முடிந்து ஊர் அமைதியாக இருக்கிறது. ஏன் அந்த அமைதியைக் கெடுக்கிறீர்கள் என்பதுதானே.
இத்தனைக்குப் பிறகும் ஊர் அமைதியாக இருக்கும் என்றால் அது அசிங்கம் அல்லவா? இந்தக் கொடுமைக்குப் பிறகும் அமைதியாக இருக்க அது என்ன மயானமா?
இவை எதனினும் கொடிய வலியை கீழே உள்ள படங்கள் தரும்,
சத்தியமங்களம் பக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் எடுக்கப் பட்டப் படம் என்று சொல்கிறார்கள்.
அங்கு தலித் மாணவிகளை மட்டும் கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்திருக்கிறார்கள். “உங்க அம்மாவும் அப்பாவும் செய்கிற வேலைதானே. கூச்சப் படாம செய்” என்று சொல்லியிருக்கிறார்கள்.
பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு 500 கும் குறைவான ஊதியம்தான். எனவே இந்த வேலைக்கு யாரும் வர மறுக்கிறார்கள். இந்தக் கொடுமையை எதிர்த்தே தனியாக ஒரு போராட்டம் நடத்த வேண்டும்.
மாதம் முழுக்க பள்ளியில் உள்ள கழிவறைகள் அனைத்தையும் சுத்தம் செய்வதற்கு இவ்வளவு குறைவான ஊதியம் என்பது கொடுமையின் உச்சம். முதலில் அவர்களது நேர்மையான ஊதியத்திற்காக பொது மக்கள் இணைந்து போராட வேண்டும். நமது குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் தூய்மையாய் இருத்தல் அவசியம் என்பதை உணர்ந்தால் இது சாத்தியமே.
இந்தச் சூழலில் தங்கள் பள்ளியை சுத்தமாக வைத்துக் கொள்வதில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாணவருக்கும் பங்கு உண்டுதான். அந்த வகையில் பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்து தூய்மையாக வைத்துக் கொள்வதில் இருவருக்கும் நிச்சயம் கடமை உண்டு.
மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களுக்குள் ஒரு முறை வைத்துக் கொண்டு அதன் வழி இந்த வேலையை செய்தால் பாராட்டலாம். ஆனால் தலித் குழந்தைகள் மட்டுமே கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்ற நிலை பள்ளிகளிலேயே இருக்குமானால் அதை எப்படி சகித்துக் கொள்வது.
எனக்கொன்று தோன்றுகிறது,
அக்கறையுள்ள நண்பர்கள் ஒன்றிணைவது. முகநூல் மற்றும் ட்விட்டர் இருக்கும் போது இது ஒன்றும் சாத்தியமில்லாத செயல் அல்ல. த.மு. எ. க.ச, கலை இலக்கிய பெரு மன்றம், இடதுசாரிக் கட்சிகள், மற்றும் வி சி போன்ற அமைப்புகளின் தோழர்கள் ஒருங்கிணைந்து தத்தமது பகுதியில் உள்ள பள்ளிகளைக் கண்காணித்தால் என்ன?
சட்டம் ஒன்றும் அவ்வளவு வலுவாக இல்லை." sc & st prevention of atrocity act" ன் மூலம் பதியப்படும் வழக்குகளில் 3 சதவிகிதத்திற்கும் குறைவான அளவு வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைக்கிறது என்று வழக்கறிஞர் கிறிஸ்டோஃபர் சொல்கிறார்.
எனவே இதை ஒழிக்க வேண்டுமெனில் அக்கறையுள்ள தோழர்கள் இயக்கமாய் ஒன்றிணைய வேண்டும்.
சாத்தியமானதே.
நன்றி : “ காக்கைச் சிறகினிலே ”
நன்றி : “ காக்கைச் சிறகினிலே ”