Wednesday, July 26, 2023

என்ன பயம் திரு நரேந்திரர்?

 அத்தனை ஆயிரங் கோடியைக் கொட்டி நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டியாயிற்று

உங்கள் மனங்குளிரப் பார்த்துப் பார்த்துக் கட்டிய கட்டிடம்
புதிய அரண்மனையைத் திறக்கும்போது அந்நாட்டின் சக்கரவர்த்திக்கு தரப்பட்ட அத்தனை மரியாதையையும் ஏறத்தாழ உங்களுக்கு நீங்கள் விரும்பியபடி கொடுத்தாயிற்று
ஆகமத்திற்கு உட்பட்ட வைணவக் குருக்கள்
ஆகமத்திற்குள் வராத சைவ சன்னிதானங்கள் உள்ளிட்டு
அனைவரையும் உள்ளடக்கிய
அனைத்து யாகங்களையும் நடத்தி
ஏறத்தாழ உங்களுக்காகவே நீங்கள் கட்டிய அரண்மனையொத்த நாடாளுமன்றத்தின்
நீங்கள் ஆசைப்பட்டு பெற்ற செங்கோல் இருக்கும் தர்பாருக்குள் வந்து பரிபாலிக்க
என்ன பயம் திரு நரேந்திரர்?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...