Thursday, July 10, 2025

இடது வழியும் இருக்கிறது ஸ்டாலின் சார்

  அன்பின் ஸ்டாலின் சார்,

வணக்கம்
நீங்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற கொஞ்ச காலத்தில்
“ஸ்டாலின் கலைஞர் ப்ளஸ்” என்று எழுதினேன்
அதைப் படித்ததும்

எங்கள் கட்சித் தோழர்கள் என்னவோ ஒரு புன்னகையோடு என்னைக் கடந்து போய்விட்டார்கள்
ஆனால் திமுகவில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் உள்ளிட்டு பலர் என்னைக் கடிந்துகொள்ளவே செய்தார்கள்
வேறொன்றுமில்லை,
திமுக தோழர்கள் கலைஞருக்கு சமமாக உங்களைக்கூட பார்க்க மாட்டார்கள்
கலைஞர்மீது அவர்களுக்குரிய அன்பு அப்படி
ஆனால் அப்படி எழுதியது சரிதான் என்பதை இன்று (09.07.2025) திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நீங்கள் நிகழ்த்திய உரை உறுதி செயகிறது
கலைஞர் இருந்திருந்தால் உங்களை அழைத்து முத்தமிட்டிருப்பார்
”காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என நமக்கான வழிகள் உள்ளன. மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக்கூடாது”
என்று அழுத்தி சொல்லியுள்ளீர்கள்

திமுக மாதிரியான ஒரு கட்சியின் தலைவரால் இப்படி பேசிவிட முடியும்
ஆனால் திமுக அரசின் தலைவரால் இப்படி பேசிவிட முடியாது. இழப்புகளை சந்திக்க நேரும் என்பதை அறிந்தவன் நான்.
வெளிப்படியாகவே சொல்லிவிடுகிறேன்
இதுவரை இவ்வளவு வெளிப்படையாக யாரும் பேசியது இல்லை
இழப்பதற்கு பயப்படாத குணம் வேண்டும் இப்படி பேசுவதற்கு
உங்களுக்கு அது இருக்கிறது
முத்தம் சார்
பாருங்களேன் கோட்சே ஒரு கொலைகாரன்
அவன் RSS காரன்
இதை வெளிப்படியகப் பேசுவதற்கு நமக்கு ஒரு தயக்கம் இருக்கிறது பாருங்கள்
அதை உடைத்திருக்கிறீர்கள்
மீண்டுமொருமுறை உங்களை இறுக அணைத்துக் கொள்கிறேன் சார்
ஆனால் இது கோட்சே என்ற ஒரு மனிதனின் செயல் என்ற அளவில் அவனைக் குற்றப்படுத்துவதோடு சுருங்கிப்போய்விடக் கூடாது.
அவனுக்குப் பின்னால் இருந்த
இப்போது அமித்ஷா தொடங்கி
அய்யா H.ராஜா வரை கைவைத்திருக்கும் சித்தாந்தம்தான் நமது பிரச்சினை
ஒன்று சொல்லவா
19.02.1948 அன்று தஞ்சை சன்னாநல்லூரில் ஒரு கூட்டம்
காந்தியாருக்கான இரங்கல் கூட்டம்

பெரியார் பேசுகிறார்
அந்தக் கூட்டத்தில் அப்போது இளைஞராக இருந்த கலைஞர் கலந்துகொண்டு பெரியாரை ஏதோ கேள்வி கேட்கிறார்
பெரியார் கலைஞருக்கு இப்படியாக பதில் சொல்கிறார்
காந்தியை துப்பாக்கி சுட்டது என்பதற்காக துப்பாக்கியை ஒடித்துவிடலாமா?
வேறு துப்பாக்கி வாங்க அவனுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?
சரி கொன்ற கோட்சேயை கொன்று போடலாமா?
ஆயிரம் கோட்சேக்களை அவர்கள் உருவாக்குவார்கள்
சரி RSS அமைப்பை அழித்துவிடலாமா?
வேறு பெயரோடு வந்துவிடுவான்
அவனது சித்தாந்தத்தோடு சண்டை போடவேண்டும் என்று பெரியார் பதில் சொல்லி இருக்கிறார்
கலைஞரின் மகன்
வலுவாக,,
இழப்புகளைக் கண்டு அஞ்சாமல் சண்டை போடுகிறீர்கள்
சாம்சங் பிரச்சினையில் உங்களுக்கு எதிர் நின்றோம்
எங்களுக்குத் தெரியும்
எங்களைத் தவிர சங்கிகள் உள்ளிட்டு அனைவரும் உங்களோடு நின்றார்கள்

அது பாட்டளி மக்களின் உரிமைக்கான பிரச்சினை
அந்த விஷயத்தில் உங்களுக்கு எதிர் தளத்தில் நின்று உங்களோடு சமர் புரிவது எங்கள் வேலை

செய்தோம்

இனியும் செய்வோம்

உங்களுக்கும் அது தெரியும்
இதோ மோடிக்கு எங்கள் பலத்தை
இன்றைய பொது வேலைநிறுத்தத்தின் மூலம் காட்டி இருக்கிறோம்
இதுவும் எங்கள் வேலை
அதே வேளை இதுமட்டும் அல்ல எங்கள் வேலை என்பதும் எங்களுக்குத் தெரியும்
சங்கிகளுக்கு எதிராக உங்களை இணைத்துக்கொண்டு களமேகுவதும்
சங்கிளோடு நீங்கள் சண்டை போடும்போது உங்களோடு இணைந்து நிற்க வேண்டியதும் எங்கள் வேலை
செய்வோம்
நன்றி சார்
அன்புடன்,
இரா.எட்வின்
09.07.2025

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...