Wednesday, July 2, 2025

இவை போதாதே ஸ்டாலின் சார்

  அன்பின் ஸ்டாலின் சார்,

வணக்கம்
திருப்புவனம் அஜித்தின் அம்மாவோடும் தம்பியோடும் நீங்கள் உரையாடிய காணொலியை சற்றுமுன்புதான் பார்த்தேன்
உங்களை வைத்து பார்க்கும்போது இது கொஞ்சம் தாமதம்தான் சார்
ஆனால் இது புதிது
எடப்பாடி இன்றுவரை சாத்தான்குளம் நிகழ்விற்காக இப்படி இல்லை என்றாலும் இதில் ஒரு துரும்பளவும் செய்ததில்லை
உங்கள்மீது நாங்கள் வருத்தப்படுவதற்கும் அவ்வப்போது கோபப்படுவதற்கும் உங்களது இந்தத் தன்மைதான் காரணம்
மீண்டும் என் நன்றி சார்
பிள்ளையை இழந்து தவிக்கும் அந்தத் தாய்க்கு எவ்வளவு பெரிய ஆறுதல் என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது
அஜித்தின் தம்பிக்கு நீங்கள் ஒப்புக்கொண்டபடி அரசுப்பணியை விரைவில் வழங்குவீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்
அது அந்தக் குடும்பத்தை எவ்வளவு ஆற்றுப்படுத்தும் என்பதும் எனக்குத் தெரியும்
ஆனால், இவை போதாதே சார்
உங்கள் ஆட்சியிலும் இதுவரை 24 பேர் விசாரனையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்
காவலர்களுக்கு அஜித் மீதோ மற்ற 23 பேருக்கோ எந்தப் பஞ்சாயத்தும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்
எனில்,
வேறு யாரோ இருக்கிறார்கள்
அது யாரென்பதை கண்டுபிடியுங்கள்
பின்னால் இருப்பவர்கள் உங்கள் முகாம்காரர்களாகவே இருப்பினும் தண்டியுங்கள்
மக்கள் உங்களோடிருப்பார்கள்
நன்றிங்க சார்
அன்புடன்,
இரா.எட்வின்
இரவு 10.57
01.07.2025

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...