Thursday, July 10, 2025

கவிதை 017

  மருத்துவம் மட்டும்தான்

படிப்பா ?
இப்படியாகத்தான்
இந்த நூற்றாண்டிற்கான
சூத்திரர்களுக்கான
கல்வி மறுத்தல் தொடரோட்டத்தை
ஆரம்பித்தான்
ஒரு புள்ளியில்
படித்தவன்
பக்கோடா போடலாமே என்றான்
சுதாரித்தோம்
இல்லையெனில்
பக்கோடா போட
படிப்பெதற்கென்று
நகர்ந்திருப்பான்
இப்போது
சூத்திர
கல்விமறுப்பு குச்சி
அறுபதாயிரம்
யானைகளை
ஒரே கப்பலில் ஏற்றியவனின்
கைகளுக்குப் போனது
அவனோ
மாடு மேய்க்கப்
பழகு
சம்பளம் தருவேன் என்கிறான்
இப்போது
இன்னொருவன் கைகளில்
சூத்திர கல்வி மறுப்பு குச்சி
இன்று
படிப்பைவிட
பக்தி பெரிதென்கிறான்
நாளை
பக்தி போதும்
படிப்பெதற்கென்பான்
குழந்தைகளே
எதற்கும்
சாணி வாளியில்
துடைப்பங்கள்
ஊறியபடியே இருக்கட்டும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...