Monday, July 7, 2025

ஒரு புள்ளதான வச்சிருக்க

 சிந்தாமணியூர்

K.பெருமாள் ஜவுளிக்கடை
பக்கத்தில்
அப்பா, அம்மா, பாட்டி இவர்களோடு ஒரு குழந்தை
30 இருக்கும்
அப்பாவிற்கு பீகாக் ப்ளு பிடிக்கும் என்பதால் அந்தக் கலரில் ஒரு பட்டு
8500 ரூபாய்
சிரித்தபடி
நல்லாருக்கு தானே அங்கிள் என்கிறாள்
அப்படி ஒரு வார்ப்பான சிரிப்பு
செமையா இருக்கு சாமி
இன்னும் வார்ப்பாய் சிரிக்கிறாள்
அம்மாக்கு புடிச்ச கலர்ல ஒன்னு
பாட்டிக்கு புடிச்ச கலர்ல ஒன்னு
ஏண்டி எத்தன எடுப்ப
ஒரு புள்ளதான வச்சிருக்க
எனக்கு புடிச்ச கலர்ல ஒன்று எங்கட்டுக்காரருக்கு புடிச்ச மாதிரி ஒன்னு
இப்ப அவங்க அப்பா
எப்ப பார்த்தாலும் ஒரு புள்ளைய வச்சுருக்கன்னு சொல்லிய மொளகா அறக்கிற நீ
உங்க வீட்டுக்காரரும் ஒரு வொய்ப்தான வச்சிருக்கார்னு சொன்னதுதான் தாமதம்
நீ தப்பா பேசிட்ட பைனா ஒரு புடவை
வேற வழி
அள்ளிட்டுப் போறப்ப கன்னத்தைப் பிடித்து வரட்டா அங்கிள்னு சிரிச்சபடியே போறா
பெருசா வா சாமி

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...