Friday, July 11, 2025

எவனடா எங்களின் முகவரி கேட்டவன்

 



இருவரின் நேற்றைய (09.07.2025) செயல்கள் என்னைக் கட்டிப்போட்டிருக்கின்றன
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றுதானே முன்னோர்கள் சொன்னார்கள். பள்ளி இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றா சொன்னார்கள்
கோவில கட்டுங்கப்பான்னா
கோவில் வருமானதில் ஸ்டாலின் கல்லூரிகளைக் கட்டுவது நியாயமா என்று முன்னாள் முதல்வர் மாண்பமை எடப்பாடி உளற
அறநிலையத்துறை விதிகளில் அதற்கு இடமிருக்கிறது
அப்படித்தான்
கல்லூரிகளாகத்தான் கட்டுவோம் என்று நிமிர்ந்து சொன்ன ஸ்டாலின் சாரின் செயல் ஒன்று
இன்னொன்று
நெசத்துக்குமே ரயிலை மறித்து
நெருங்க நெருங்க ரயில் ஓட்டுநருக்கு மரண பயத்தைக் கொடுத்த குழந்தை அகல்யாவின் செயல்
இவளது செயலை
SFI அமைப்பின் முன்னாள் உறுப்பினன்
CPM கட்சியின் ஒரு மாவட்டக்குழு உறுப்பினன் என்ற வகையிலும்
அந்தக் குழந்தையின் தகப்பன் என்ற இடத்தில் இருந்தும் கொஞ்சம் அசைபோடுகிறேன்
எப்படிப் பார்த்தாலும்
சிலிர்க்கிறது
இரண்டு நாட்களுக்கு முன்புதான் எடப்பாடி அவர்கள் “கம்யூனிஸ்டுகள் முகவரி இல்லாமல் நிற்கிறார்கள்” என்று கூறினார்

இந்த மறியல் போரின் வெற்றி தந்த திமிரால் நெஞ்சுப் புடைக்கிறது
”எவனடா எவனடா
எவனடா
எங்களின்
முகவரி கேட்டவன்
இவளடா இவளடா
இவளடா
எங்கள் உயிர்ப்பின்
முகவரி”
என்று கர்வத்தால் கண்கள் சிவந்து கொதிநிலை கொள்கின்றன
வேறொன்றுமில்லை
அடையாளமாக இல்லாமல் ரயில் மறியலுக்கு உயிரை ஊட்டியிருக்கிறாள் பிள்ளை
பார்க்கிறேன்
உற்றுப் பார்க்கிறேன்
பெத்தவன்
ஈரக்குலை நடுங்குகிறது
விபரீதம் நடந்திருப்பதற்கான வாய்ப்புகளைக் கொண்ட நிகழ்வு அது
கவனம் அவசியம்
இப்படியா முறுக்குவ என்று கொட்டவும் செய்கிறேன்
இயக்கம் எழுவதற்கான ஒரு காரியத்தை செய்திருக்கிறாய் என்று பிள்ளையை ஆரத் தழுவி முத்தமும் இடுகிறேன்
10.07.2025

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...