Friday, July 11, 2025
எவனடா எங்களின் முகவரி கேட்டவன்
Wednesday, July 9, 2025
நாங்கள் எப்போதும் C/O மக்கள்
அன்பின் எடப்பாடி சார்,
Saturday, June 28, 2025
எடப்பாடி உணரவேண்டியது
2026 இல் தமிழ்நாட்டில் பாஜக பங்கேற்கும் NDA கூட்டணி ஆட்சி
Monday, March 31, 2025
அதை சொல்வதற்கான உரிமை நமக்கில்லை
அதிமுக பொதுச் செயலாளர் யார் என்பதை அதிமுகதான் முடிவுசெய்ய வேண்டும்
அதை சொல்வதற்கான உரிமை நமக்கில்லை
ஜெயலலிதா இறந்தது முதலே அதிமுகவை தன் கட்டுக்குள் கொண்டுவந்து கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்வதற்கான முயற்சியில் பாஜக இறங்கியது
கிட்டத்தட்ட தன் கட்டுக்குள் கொண்டும் வந்துவிட்டது
தலைவர்கள் விலைபோய்க்கொண்டு இருக்கிறார்கள்
ஆனாலும் பாஜக உணராததும்
ஒரு போதும் அதனால் உணர்ந்து கொள்ள முடியாததுமான ஒன்று உண்டு
திமுகவோ அதிமுகவோ,
தொண்டர்கள் ஒருபோதும் விலைபோக மாட்டார்கள்
ஒரு கட்டத்தில் அவர்கள் விலை போன தலைவர்களைத் தூக்கி எறிந்துவிட்டு
தமக்கான தலைவனைத் தேர்ந்தெடுப்பார்கள்
31.03.2025
Sunday, March 30, 2025
இதுக்கு எதுக்குப்பா டில்லி போனீங்க
அமித்ஷாவை எடப்பாடி அவரது கோஷ்டியோடு சந்தித்தாராம்
Thursday, March 27, 2025
எடப்பாடி சார் வேண்டுமானால் பம்மலாம்
நாகை மாவட்டத்தில் உள்ளது தலைஞாயிறு பேரூராட்சி
15 உறுப்பினர்கள்
ஏழு பேர் திமுக
ஏழு பேர் அதிமுக
ஒருவர் பாஜக
அதிமுகவும் பாஜகவும் இணைந்து அதிகாரத்திற்கு வருகிறார்கள்
அதிமுகவைச் சேர்ந்த திருமிகு செந்தமிழ்செல்வி பேரூராட்சி தலைவர்
பாஜகவின் கதிரவன் இணைத் தலைவர்
சுவாரசியம் என்னவென்றால்
திமுகவும் அதிமுகவும் இணைந்து பாக்க கதிரவனை இம்பீச் செய்திருக்கிறார்கள் என்ற செய்தியை 25.03.2025 இந்து தருகிறது
எடப்பாடி சார் வேண்டுமானால் பம்மலாம் அமித்ஷா சார்
பாஜக விசயத்தில் திமுக அதிமுக ஊழியர்கள் இணைந்து கூட பாஜகவை வீழ்த்துவார்கள்
கவனம்
27.03-2025
Wednesday, July 17, 2024
விக்கிரவாண்டி தரும் பாடம் இதுதான்
Tuesday, September 26, 2023
பாஜகவின் கொள்கையோடு இவர்களுக்கு பிரச்சினை இல்லை
நேற்று மாலை அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றிருக்கிறது
பாஜகவோடு தேர்தல் உடன்பாடு கிடையாது என்றும்
இந்த முடிவு 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கும் பொருந்தும் என்றும்
ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது
அதிமுக தொண்டர்கள் இந்த முடிவை எடுத்து காலமாயிற்று
அல்லது,
நான் பாஜகவோடு கூட்டணி என்ற தவறை ஒருமுறை செய்துவிட்டேன்
இனி ஒருபோதும் பாஜகவோடு கூட்டணி இல்லை என்று அவர் அறிவித்த பிறகு எடப்பாடியோ, பன்னீர்செல்வமோ பாஜகவோடு நெருங்குவதை அவர்கள் ரசிக்கவில்லை
பதவியையும் சேர்த்துவைத்த காசையும் காப்பாற்றிக் கொள்ளவும்
ரெய்டுகளில் இருந்தும் சிறையில் இருந்தும் தங்களைத் தற்காத்துக் கொள்ளவுமே பாஜகவோடு தலைவர்கள் நெருக்கமாக இருப்பதை உணர்ந்தே இருந்தார்கள்
அவர்களுக்கு தெரிந்ததெல்லாம்
MGR
ஜெயலைதா
திமுக எதிர்ப்பு
இவைதான்
இப்போது அண்ணாவை இழிவாகப் பேசிவிட்டார் அண்ணாமலை என்பதற்காக முறிப்பதாகக் கூறுகிறார்கள்
இவர்களுக்கு அண்ணாவைத் தெரியாது
அண்ணா கூட்டாட்சித் தத்துவத்தின் பிதாமகன்
இவர்கள் “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்பதற்கு ஆதரவளித்தவர்கள்
இப்படி நிறைய
பாஜகவின் கொள்கையோடு இவர்களுக்கு பிரச்சினை இல்லை
பாஜகவும்
அதாவது அண்ணாமலையும் மோடிதான் பிரதமர் வேட்பாளார் என்றுதான் பிரச்சாரம் செய்வார்
எடப்பாடியும் ஜெயகுமாரும் அதைத்தான் சொல்லி வாக்கு கேட்கப் போகிறார்கள்
அண்ணாமலை மன்னிப்பு கேட்டுவிட்டால் இவர்கள் என்ன செய்வார்களாம்?
பாஜகவோடு சேர்ந்து நின்றால் ஒரு இடமும் கிடைக்காது
தனியாக நின்றால் ஒன்றிரண்டு தேறலாம்
இதன் மூலம் மோடிக்கு தமிழ்நாட்டிலிருந்து இரண்டு இடங்கள் என்பதற்காக இந்த முறிவு நாடகமாகவும் இருக்கலாம்
இந்தத் தேர்தலில்
விஷ்வகர்ம கல்வித் திட்டத்தை எதிர்க்கிற
ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற விஷயத்தை எதிர்க்கிற
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை குடைச்சல் கொடுத்து சிரமப்படுத்துகிற ஆளுநர்களைக் கேள்வி கேட்கிற
நீட்டை எதிர்க்கிற
கட்சிகளைத் தவிர தமிழ்நாட்டு மக்கள்
யாரோடு சேர்ந்து நின்றாலும்
முறித்து வந்தாலும் மதிக்க மாட்டார்கள்
ஆனால் அதிசயமாக
அதிமுக நான் மேற்சொன்னவற்றை செய்தால்
அது,
அதிமுகவிற்கும் நல்லது
தமிழ்நாட்டிற்கும் நல்லது
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
அன்பின் ஸ்டாலின் சார், வணக்கம் நீங்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற கொஞ்ச காலத்தில் “ஸ்டாலின் கலைஞர் ப்ளஸ்” என்று எழுதினேன் அதைப் படித்ததும் ...
-
ஜார் மன்னர் தன் குடும்பத்திற்கான சொத்துக்களை கொஞ்சமும் முறையற்ற வகையில் சேர்த்துக்கொண்டிருந்த நேரம். அவரது மனைவி ரியல் எஸ்டேட் வணிகத்தில் ...