Friday, April 24, 2020

என் வட்டத்திலுள்ள வாசிக்கும் நண்பர்களுள் சிலர்

முன்பெல்லாம் பிசாசு மாதிரி வாசிப்பவன்தான்.
வயது கொஞ்சம்
சோம்பேறித்தனம் கொஞ்சம்
பணிப்பழு கொஞ்சம்
இணையம் கொஞ்சம் என்று
வாசிப்பு குறைந்து போனது
ஒரு நாளைக்கு சில நேரங்களில் 200, 150 என்கிற அளவிற்கு வாசிக்கிற பக்கங்களின் எண்ணிக்கை குறைகிறது
ஒரு கெட்ட பழக்கம் என்னவென்றால் ஒரு புத்தகத்தை முடித்துவிட்டு மறு புத்தகம் எடுக்கிற பழக்கம் இல்லை
இப்போதுகூட மஹத், காடோடி, நண்டு, இந்நாள் இதற்கு முன்னால்,பணவீக்கம் என்றால் என்ன என்று கலந்துகட்டிதான் வாசிக்கிறேன்
என் வட்டத்தில் உள்ள சில வாசிக்கும் நண்பர்கள்
இந்த நொடியில் வந்தவர்களை மட்டுமே வைக்கிறேன்
பட்டியல் நீளமானது. அவ்வப்போது வரும்
1 மார்க்கண்டன் முத்துசாமி ( Markandan Muthusamy) ********************************************************************
மனுஷன் பிசாசுமாதிரி வாசிக்கிறார். தேர்ந்தெடுத்து வாசிக்கிறார்.
இவரது வாசிப்பு அனுபவங்களை புத்தகமாக்கித் தரவேண்டும் என்றும்
தண்ணீரும் தேநீரும் மட்டும் அருந்துவதற்கானவை குவளைகள் என்று கொள்ள வேண்டும்
கூட்டங்கள் மூலமாக இவரது அறிவைப் பந்தி வைக்க வேண்டும் என்பது கொள்ளநாள் ஆசை
வாழ்த்துக்கள் மார்க்கண்டன்
2 செல்வபாண்டியன் ( Mahathma Selvapandiyan )
*************************************************************
எனக்கு மிகவும் பிடித்த தோழர்
மிகப் பெரிய நூலகம் ஒன்றினை அவரது அரும்பாவூர் இல்லத்திலே வைத்திருக்கிறார்
அதில் சன்னமான அளவேனும் நம்மிடம் சுடப்பட்டவை
ஆழமான வாசிப்பாளர்
அளந்து பேசுபவர்
92 இல் இருந்து ஆவரிடம் ஒரு கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தேன்
ஏதேனும் ஒரு பகுதியில் கவனம் குவியுங்கள் என்று
பௌத்தம் பக்கமாக இப்போது கவனம் குவித்திருக்கிறார்
இதற்காக தினமும் தினமும் நூற்றுக் கணக்கான மைல்கள் பயணிக்கிறார்
இவரது உழைப்பை இணையத்தில் ஆவணப் படுத்திக்கொண்டே இருக்கிறார்
அச்சிலும் அதை இவர் செய்ய வேண்டும்
முத்தம் பாண்டியன்
3 தாஹீர்பாட்ஷா ( Dhahir Batcha)
********************************************
நிறைய களப்பணி
இடையேயும் விடாது வாசிக்கிறார்
வாசிப்பை தமது இதழொன்றில் தொடர்ந்து எழுதி வருகிறார்
இவரது சிறப்பு இணையரின் ஆளுமை வளர்ச்சிக்கான கருவியாய் இருப்பது
ஒருமுறை சில நூல்களை கொடுத்தபோது அவற்றை பார்த்ததும்
இதையெல்லாம் பார்த்தா சந்தோசம்மா ஆயிடுவான்னே
என்றார்
எனக்குத் தெரிய இணையரின் வளர்ச்சிக்கு இவ்வளவு மெனக்கெடும் ஆள் அரிது
நிறைய எழுதலாம் இவர்
4 ரமேஷ் (Ramesh Babu)
*****************************8*
இந்த மனிதனுக்கு எப்படி இவ்வளவு வாசிக்க நேரம் இருக்கிறது என்று வியக்குமளவிற்கு அப்படி ஒரு வாசிப்பு
இந்த லாக் அவுட்டைப் பயன்படுத்தி 2000 பக்கங்களுக்குமேல் வாசித்ததாக பத்து நாட்களுக்கு முன்னாள் போட்டிருந்தார்
இந்நேரம் 4000 ஆகியிருக்கும்
“யார் கையில் இந்து ஆலயங்கள்?” என்ற இவரது சமீபத்திய நூல் அவசியம் வாசிக்க வேண்டியது
முத்தம் ரமேஷ்
5 சிராஜுதீன் ( Mohammed Sirajudeen )
************************************************
அநேகமாக பாரதி புத்த்காலயம் வெளியிட்ட அனைத்து நூல்களையும் வாசித்து முடித்தவர்
எனக்கு கிடைத்த தகவலின்படி வலம்புரி ஜான் அளவிற்கு அதிகமாகவும் விரைவாகவும் வாசிக்கிறார்
புத்தகமாகவும் தரவேண்டும்
வணக்கம் சிராஜ்
6 அன்பாதவன் (Anbaadhavan Shivam Bob)
*****************************************************
வாசிப்பதும் அந்த அளவிற்கு எழுதுவதும் இவரது சிறப்பு
இவரிடம் பிடிட்ஜ்ஹ்த இரண்டு விஷயங்கள்
அ ) படித்து முடித்தததும் அது இஅரது எதிரியினுடைய நூலாயினும் அவரைத் தொடர்பு கொண்டு பாராட்டிவிடுவார்
ஆ) வாசிக்கவும் எழுதவும் தோழர்களையும் இளைஞர்களையும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்
வணக்கம் அன்பாதவன்
7 புலியூரார் ( புலியூர் முருகேசன்)
*********************************************
வாசித்துக் கொண்டே இருக்கிறார்
யாரேனும் சிறுகதை எழுத இருக்கிறார் என்று தெரிந்தால் அவர் பேனா வாங்கும் முன்பே அவருக்கு போன் போட்டு உங்களுக்கு நல்லா எழுத வரும் என்று உற்சாகப் படுத்துபவர்
இன்னொன்று
இவர் ஜெயமோகனின் விமர்சகர் என்று எல்லோருக்கும் தெரியும்
இவரளவிற்கு ஜெயமோகனை வாசித்தவர் ஜெயமோகனேகூட இல்லை
இன்னும் இரண்டு வருஷங்களுக்குப் பிற்கு ஜெயமோகன் என்ன எழுதுவார் என்பதை இப்போதே அறிந்து வைத்திருப்பவர்
முத்தம் தோழர்
8 யமுனா (Yamuna Rajendran)
**************************************
இவர் குறித்து எழுதுமளவு எனக்கிருக்கிறதா தெரியவில்லை
வியந்து போகிறேன்
வாசிப்பின் வழியேயான இவரது களமாடல் கொள்ளத் தக்கது
வணக்கம் சார்
9 கஸ்தூரி (Kasthuri Rengan)
************************************
ஆங்கிலத்திலும் தமிழிலும் என்று வாசித்துக் குவிக்கிறார்
டூவீலர்ல போகும்போதும் படிச்சுக்கிட்டே போவானாப்பா இந்த ஆளு என்று நண்பர்களிடம் கூறுவேன்
வாசிப்பனுபவத்தை தனது முகநூலில் வைத்துக் கொண்டே இருக்கிறார்
10 சுரேஷ் (Suresh Kathan)
*********************************
அப்படி ஒரு வாசிப்பு
வாசித்ததை பகடியோடு இவர் பதிவது அப்படி ஒருஅழகானது
என்ன,
நான் ஏன் இப்படி வாசிக்கிறேன்னா “அமெரிக்கன் காலேஜ் அப்படிக் கத்துக் கொடுத்தது” என்று இவர் சொல்லாமல் இருக்க வேண்டும்
இப்படி ஒரு மாணவர் அந்தக் கல்லூரிக்கு ஒருபோதும் வாய்க்காது
முத்தம் சுரேஷ்
11. செல்வகுமார் ( ப. செல்வகுமார்)
***********************************************
நல்ல வாசிப்பாளர்
இந்த லாக் டவுனை வாசித்தலுக்காக சிறப்பாகப் பயன் படுத்துகிறார்
இன்னும் இன்னுமாய் இவர் வாசிக்க வேண்டும்
முத்தம் செல்வா

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...